Skip to main content

Posts

Showing posts from December, 2015

‪‎மாலை‬ ‪நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 4.0

இரவு 9 மணிக்கு அலரும் என் கைபேசி , தீடிரென்று காலை 11 மணிக்கு அலறியது. வேலையில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இப்போது போனை எடுக்கலாமா , கூடாதா என்று கூட எனக்கு தெரியாது. அப்பாவின் நம்பர் ஆயிற்றே , சற்றும் யோசிக்கவில்லை எடுத்துவிட்டேன். "ஹலோ , ..." "நான் அம்மா பேசுறேன் சாமி" "சொல்லும்மா , இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்க , அப்பா எங்க ? " "இல்ல சாமி , அப்பா கீழ விழுந்துட்டாரு , அத சொல்லலாமுன்னு தான் கூப்டேன் " "என்ன ஆச்சும்மா " என்று முடிப்பதற்குள்ளாகவே "கார்த்திக்" என்று ஒரு குரல் கர்ஜித்தது. ஏற்கனவே படப்படப்பில் இருந்த என் கைகள் தானாக சிவப்பு பட்டனை அமுக்கியது. என்ன செய்வதென்று புரியாமல் முகம் முழுதும் நனைந்தவனாய் மேலே பார்த்தேன். ஆம் , என் மேனேஜர் தான் நான் பார்த்ததும் " கம் டூ மை கேபின் " என்று கடுப்போடு உள்ளே நகர்ந்தார். அப்பாவிற்கு என்ன ஆனது என்று யோசிக்க கூட விடவில்லை.என் மனம் என்னிடம் இல்லை.என் அப்பாவின் நிலைமையை தேடி எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. "கார்த்தி , அ

‪கேள்வி குறி‬

இந்திய நாட்டின் இழுக்கான இடர்பாடே ஒருமுறை திரும்பிபார் நீ கடந்து வந்த பாதையை பாதையெங்கும் கண்ணீர் தான் உனக்காக அல்ல உன்னால் இறந்த அந்த ஜோதிக்காக அதை பார்த்தும் உருத்தவில்லையா உன் மனது நடுங்கவில்லையா உன் தேகம் அன்று அவள் கதறிய கதறல் இன்றும் உன் காதில் ஒலிக்கவில்லையா ? மனிதன் என்றால் ஒலித்திருக்கும் நீ தான் சிறியதொரு மிருகமாயிற்றே.. பிறப்புறுப்பில் பிறந்தவன் நீ என்பதை ஒரு கணம் மறந்தாயோ ? பெண்ணுடல் இச்சையென்று தினம் தினம் நீ நினைத்தாயோ ? நீ சிறுவனாம் சொல்கிறது என் ஜனநாயகம் சிறுவனுக்கும் வந்திடுமோ காமஇச்சை வந்தால் என்ன , நீ தான் சிறுவனாயிற்றே உதிரத்தில் நனைந்தவனே உன்னை நீயே வதைத்து கொள் அப்போதாவது மறையட்டும் சிறுவன் என்ற நிலைப்பாடு.. இதில் , இன்றும் ஒரு வெளியீடு 16க்கு பின் நிச்சயம் தண்டனையாம்.. நிர்கதியாய் நிற்கும் பல நிர்பயாக்களின் வாழ்க்கை 16க்கு முன் என்ற வார்த்தையில் கேள்விகுறியாகிறது ??

‪கிராமத்து‬ ‪‎அழகி‬

செமஸ்டர் லீவிற்காக என் வீட்டில் ஒருவார தஞ்சம். யார் எழுப்பினாலும் விழிக்காத என் விழிகள் விடுமுறை நாள் என்றாலே தானாக விழித்து கொள்கிறது. "என்ன சாமி , அதுக்குள்ள எந்திருச்சுட்டையா ? , இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம்ல " என்ற அம்மாவின் குரல் சுப்ரபாதமாய் என் காதுகளை கிளறியது. "இல்ல மா , தூக்கம் வரல , டீ இருக்கா ? " "மூஞ்சிய கழுவீட்டு வா சாமி , சூடு பண்ணி வச்சிருக்கேன் " "ஹம்ம் , என்றவாரே கலக்கத்தோடு மெல்ல நகர்ந்தேன். தண்ணீரே படாமல் முகத்தை கழுவும் வித்தையறிந்த சோம்பேறி நான்.அதேபோல் தான் இன்றும் , பட்டும்படாமல் சில நீர்த்துளிகளை இறைத்துவிட்டு உள்ளே நகர்ந்தேன். அம்மா ரெடியாக கையில் டீ யோடு நின்றுகொண்டிருந்தார். அதை லபக் என்று வாங்கும் போதே ஒரு குரல் " சூடா இருக்கு , பாத்து புடி சாமி " என்று. "சரி மா , என்றவாரே டி.வி க்கு உயிர் கொடுத்தேன்.அது ஏனோ காலையிலேயே சங்கீதத்தில் பிதற்றிகொண்டிருந்தது. வழக்கபோல் என் விரல்கள் ரீமோட்டில் கீபோர்ட் வாசிக்க , என் அம்மாவின் விரல்கள் வெங்காயம் அரிந்துகொண்டிருந்தது. இதில் இடையிடையே என் க

மாலை நேர டீகிளாஸ் 3.0

முதல் வேலையின் , முதல் நாள் , பிரம்மிப்பாக இருந்தது.வானுயர்ந்த கட்டிடத்தின் காவலாளியை மட்டுமே பார்த்து பழகிய என் கண்களுக்குள் ஒரு கம்பீரம். என்னிடம் இருப்பதிலே புதிதான ஆடையை தான் அன்று அணிந்திருந்தேன்.ஆனால் அங்குள்ள ஆடைகளுக்கு மத்தியில் என் ஆடை ஆரிய கால பழையது போல் அழுக்காக தெரிந்தது. சரி , உள்ளே செல்லலாம் என்று எனக்கான நடையில் மெதுவாய் நகர்ந்தேன். "சார் , கொஞ்சம் இருங்க , ப்ளீஸ் உங்க identity கார்டு ய காட்டுங்க  ? என்றது கம்பீரமான அந்த காவலாளியின் குரல். "இல்லைங்க , இன்னைக்கு தான் First  நாள் வேலைக்கு வந்திருக்கேன் , Identity  card  இனி தான் தருவாங்க" என்றேன் பணிவாக. "எந்த கம்பெனி சார் ? " "Secondworld  Pvt  Ltd " "இல்ல சார் நாங்க Identity  card  இல்லாம உள்ள யாரையும் விட கூடாது , அட்லீஸ்ட் appoinment  ஆர்டர் ஆவது வச்சிருக்கிங்களா ? "ஹ்ம்ம் , அது இருக்கு " என்றவாரே எனது Appointment  order  ய காட்டினேன். "சரி சார் , நீங்க போங்க " என்றவாரே சிரித்து கொண்டே அனுப்பி வைத்தான். என் கால்கள் கம்பெனி வாயிலை தேடி

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப

மாலை நேர டீகிளாஸ்

அதே டீக்கடை தான் எந்த மாற்றமும் இல்லை.மாலைநேர டீ கிளாஸ் உடன் நானும் மாறவில்லை.நாட்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. வேலைதேடி சென்னை வந்து 30 நாட்கள் ஓடிவிட்டது.30 நாட்களில் வெவ்வேறு உருவங்கள் ஆனால் பதில் ஒன்றுதான் "நாங்க கால் பண்றோம் Mr.கார்த்திக்". கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது. வேறு வழியில்லை தேடி தான் ஆகவேண்டும்.வீட்டிற்க்கு முதல் வாரிசு ஆயிற்றே. நாளையும் ஒரு இண்டர்விஎவ்(Interview) .பெரிய MNC கம்பெனி. ஆனால் நிச்சியம் கடினமாக தான் இருக்கும்.அதற்கேற்ற மூளை என்னிடம் இல்லை.இருந்தும் ஆசை யாரை விட்டது.நாளை அந்த கம்பெனி இக்கு செல்ல வேண்டும் என்று இன்று வெளியே அனுப்பிய கம்பெனி வாயிலிலே முடிவு செய்து விட்டேன். கையில் 350 ரூபாய் தான் உள்ளது.இதை வைத்து தான் இன்னும் 7 நாட்களை நகர்த்த வேண்டும். அதற்குள்ளே ஒரு வேலை கிடைக்க வேண்டும். படித்து முடித்து இவ்வளவு நாட்களும் என் அப்பாவின் பணத்தில் தான் வாழ்கை ஓடிகொண்டிருகிறது.இனியும் அவரிடம் கேட்க முடியாத அழுத்தத்தில் தான் என் மனது உள்ளது. இதே சிந்தனையில் கையிலிருந்த டீ யும் வயிற்றை நிரப்பியது.டீ கிளா

‪அவன்‬ ‪ஒரு‬ ‪‎கிராதகன்‬ 3.0

என் மனதை களவாடிய கள்வன் எனக்கு எதிரே , நான் சொன்ன அதே வெள்ளை நிற சட்டையில் அவனின் கூரிய விழிகளால் என்னை கூச்சப்பட வைக்கிறான். எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் , அருகில் செல்லும் வாகன சத்தம் கூட வயலின் வாசிக்கிறது. எண்ணெயில்லா தலையிலும் என் தலைவன் எடுப்பாக தான் இருக்கிறான். அதீத கருப்புக்குள் ஆவியை முக்கி எடுத்த நிறம். எனக்கு தெரிகிறது இன்னும் சிவக்காத அவன் இதழ்கள் , சிவந்த என் இதழ்களை தேடிக்கொண்டிருக்கிறது. ஆன்மீகமே அறியா நாத்திகன் கையில் சிவப்பு கையிறு , அவன் அம்மாவின் ஆசைக்காக அதுகூட அழகுதான். எவ்வளவு நாள் காத்துக்கிடந்தேன் உன்னைக்கான , என்னை கண்டதும் இப்படி பம்புகிறாயே கயவா ? நெற்றியின் ஒரம் வியர்வை துளிகள் உன்னை தடவிக்கொண்டே செல்கிறதே ? நான் கண்ட நொடி அவை அனைத்தும் மண்ணிற்குள் மடிகிறதே கிராதகா , எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துக்கொண்டிருப்பாய். என் இதழ்கள் துடிக்குதடா உன்னுடன் பேச , என் உள்ளங்கை மருதானியும் கொஞ்சம் , ஏங்குதடா உன்னை தொட்டு பார்க்க ... ஆத்திகியாய் இருக்கும் என்னை , நாத்திகியாய் மாற்றிவிடு , உன் இதழ் கொண்டு என் திருநீரை அழித்துவிடு. "ஏன் சிர

‪அவள்‬ ‪‎ஒரு‬ ‪‎கிராதகி‬ 3.0

அதே சிவப்பு நிற சுடிதார் , சாலையின் ஓரம் , கொஞ்சம் பரபரப்போடு , நான் பார்த்துவிட்டேன் , பவளவிழா பதுமையை போல , அவள் விழிகளை கவசத்தால் மறைத்திருக்கிறாள். மாநிறத்திற்கு கொஞ்சம் நிமிர்ந்த நிறம். காதில் கடுகளவு ஒரு தோடு.. சாயம் பூசிராத இதழ்கள்.. அவள் நகங்களை சுவைத்து சுவைத்தே மிளிர்ந்து போன அவள் பற்கள். விரித்தாடும் உலகில் பின்னிய ஜடையில் அவள் கூந்தல். கிராதகி , அவள் கையிலிட்ட மருதானியை கூட சிவக்க வைத்திருக்கிறாள். ஆத்திகத்தின் ஆன்மீகத்தை அவள் நெற்றிக்கு நடுவே ஒட்டவைத்திருக்கிறாள். என்னவளின் கையை கட்டி அணைந்திருந்தது அவள் கட்டிய கடிகாரம். நான் பார்த்துவிட்டதால் என்னவோ, நிற்காமல் ஓடிகொண்டே இருக்கிறது அதே கடிகாரம். ஐயோ அவளை எப்படி வர்ணிப்பேன். வார்த்தைகளற்ற மூடனாயிற்றே நான். ஒரு வருடம் முகமில்லை என் காதலுக்கு.நான் வணங்காத இறைவன் இன்று தான் வரைந்திருக்கிறான் , அதுவும் அழகாக , மிக அழகாக. இதற்கு மேல் காத்திருக்காது என் கால்கள் , அவளை பார்க்க வேண்டும். அருகில் இருந்தவாரே அவள் அழகை ரசிக்க வேண்டும்.ரசித்து கொண்டே ரசனையில் சுரக்க வேண்டும். படப்படத்த என் கைகள் அலைபேசியை