Skip to main content

Posts

Showing posts from 2016

கற்பனை வாழ்க்கை

எட்டு வருடங்கள் ஆகிறது நான் என் ஊரை விட்டு வேற்றூரில் தஞ்சம் புகுந்து.கடந்து போன எட்டு வருடத்தில் சொந்தங்கள் கடந்து நினைவில் வைத்து கொள்ளும்படி நிறைய நண்பர்கள் மட்டுமே சொந்தமாய் உடனிருந்திருக்கின்றனர். பதின் பருவத்தில் பதினொன்றாம் வகுப்பில் தொடங்கிய விடுதி வாழ்க்கை இன்றளவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு விடுமுறை முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில் ராஜாவாய் வலம் வந்த எனக்கு , விடுதி வாழ்க்கை புதிமையான அனுபவம் தான். தினமும் காலையில் "தம்பி , மணி 7 ஆக போகுது சீக்கிறம் எந்திருச்சு கிளம்பு" என்ற வார்த்தையில் தொடங்கி , சூடான இட்லியை ஊட்டிவிட்டு வழி அனுப்பவது வரை அனைத்துமே இன்றும் டைம் மெஷின் இருந்தால் நான் போக துடிக்கும் சுகமான நாட்கள். விடுதி வாழ்க்கை இவ்வன்பிற்க்கு நேர் எதிர். இரண்டடுக்கான இரும்பு கட்டிலில் சுகமின்றி உறங்கும் எங்களை , எழுப்ப தினமும் அதிகாலை 4 மணிக்கே பிரம்புடன் வந்துவிடுவார். எங்களை காக்கும் conjuring தெய்வம். பின் வரிசையில் நின்று அரைகுறையாய் குளித்து சரியாக 5 மணிக்கு படிக்கும் அறைக்குள் ஆஜராக வேண்டும். பிணவறைக்குள் கை கால்

‪மெளனமான‬ ‪நினைவுகள்‬-1

ஒரு வார விடுமுறைக்கு பின் , முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் அடுத்த செமஸ்ட்டரை எதிர்ப்பார்ப்போடு எதிர்கொள்ள காத்துக்கொண்டிருந்தோம். மீண்டும் அதே சிரிப்புடன் , சின்ன சின்ன சண்டைகளுக்கிடையே நாட்கள் நகர்ந்தது. இரண்டாம் செமஸ்ட்டரில் இருந்து வாரவிடுமுறையில் ஊர் சுற்றலாம் என்பது எங்கள் கல்லூரியின் தளர்த்தப்பட்ட விதி. அவ்விதி அமலுக்கான அடுத்தவாரமே பெரியதாய் சிந்தித்து முடிவில் படத்திற்கு போகலாம் என்பதை ஒருமனதாய் உறுதி செய்தோம். நண்பர்களுடன் முதல் பட அனுபவம் உண்மையில் எவ்வளவு அழகானது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியா கவிதை அது. ஆனால் அக்கவிதையும் பிழையாகும் என்பதை அந்நாளே அறிந்து கொண்டோம். பெதுவாக பெண் தோழிகளுடன் படத்திற்க்கு சென்றாலே இங்கு உள்ள பல அழுக்கான உள்ளங்கள் தவறாக சிந்திக்கும் அதையும் தத்ரூபமாய் மற்றொருவரிடம் சித்தரிக்கும் என்பதை அதுவரை எங்கள் மனம் அறியவில்லை. கேலிகள் அதிகமாயின , அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்கள் செவிகள் செவிடாய் இருந்ததே தவிர சந்தோஷத்தை இழக்கவில்லை. உண்மையில் நந்தினியும் , ஐஸ்வர்யாவும் அவர்கள் செய்யும் கேலியை ஒரு பெருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. நந்

‎மெளனமான‬ ‪‎நினைவுகள்‬

நான்கு ஆண்டுகள் , ஆம் எனக்கு நினைவிருக்கிறது. கலைந்தோடும் காலங்களில் எனது நட்பும் சில்லரைக்காசாய் சிதறிப்போனது. நான் ராம்.பள்ளி எனும் இடுகுழியிலிருந்து தப்பித்து பொறியியலில் தலைநுழைத்த முற்போக்காளன். கல்லூரி வாசல் தான் பல புள்ளி கோலமாய் என்னை புதிய கோட்டிற்க்குள் இணைத்தது. கணிணி அறிவியல் என்பதால் பெண்களுக்குள்ளான பாகுபாடை மறந்து சமநிலை உணர்வை முதல்நாளே அவ்வகுப்பறை என் மனதில் பதித்தது. நான் மட்டுமல்ல என்னுடன் முதல் நாள் நட்பான தீலிப்பிற்க்கும் , சலீம்மிற்க்கும் அதே மனநிலை தான். அரட்டைகள் அரங்கேற்றமாகின , சிரிப்பிற்க்கு பஞ்சமில்லா காலமது. வாழ்க்கையின் சுகமான அனுபவங்களை கண்ணெதிரே கண்டு குதூகளித்து கொண்டிருந்தோம். மூவராய் சிரித்த உதடுகள் ஐந்தாகி போனது ஒரே மாதத்தில். நந்தினி என்ற நல்லவளும் , ஐஸ்வர்யா என்ற அடாவடியும் எங்கள் கைகளோடு விரல் கோர்த்த தருணம் அது , உண்மையில் நினைத்தாலே மனமெல்லாம் மழைச்சாரல் தெளிக்கிறது. நான்கு தலைகள் கல்லூரி விடுதிக்குள்ளும் , நந்தினி என்ற நல்லவள் மட்டும் வீட்டிற்க்குள்ளும் அடைக்கலமாய் அடைந்து கிடந்தோம். வகுப்பறை தான் எங்கள் சொர்க்கவாசல் , தி

‪சாமானியனின்‬ ‪ஆதங்கம்‬

ஒலிம்பிக்கின் கனவுகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. கருவான நம் சிசுக்கள் தோல்வியில் சிதைந்து கொண்டிருக்கிறது. நாமோ ஏதும் அறியாதது போல் டி.வி சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். உண்மை தான் , இதுவே கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்திருந்தால் அனைவரின் வீட்டிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் , கிரிக்கெட் நடக்கும் அந்நாளில் மட்டும். நானோ , இல்லை மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பவர்களோ கிரிக்கெட்டுக்கு எதிரிகள் அல்ல. பல ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் நம் நாடு உலக கோப்பையை கைபற்றிய போது பட்டாசை வீதியில் கொளுத்திப்போட்டு குதூகளித்தவன் நான். ஏன் இப்போது ஒலிம்பிக்கை ஆதரிக்கும் அனைவரும் அந்நாளில் அப்படி தான் சந்தோஷத்தில் திளைத்திருப்பர். ஒலிம்பிக்கில் ஏன் என் நாடு பதக்கங்களை பகற்கனவாய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இங்குள்ள இளைஞர் மத்தியில் எழுப்பினால் அனைவரின் பதிலும் அரசியல்வாதிகள் என்று ஒரு சேர எதிரொலிக்கும். அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பினால் உயர்தர மக்களுக்கு மட்டும்தான் விளையாட்டு உணவளிக்கும் , நடுத்தர மற்றும் கடைநி

சாமானியனின்‬ ‪‎கேள்விகள்‬

நட்சத்திர காக்கிகளை கண்டாலே இப்பொழுதெல்லாம் கண்கள் தானாக வியர்கிறது. ஏன் என்ற கேள்விக்கு சொல்ல முடிந்த காரணங்கள் ஆயிரங்கள் இருப்பினும் , சொல்லாமல் நகர்வது தான் என் உடம்பிற்க்கு சிறந்தது. கரைவேட்டிகளுக்கு காவல் கொடுக்கும் உங்களை இகழ்ந்தவர்களை விட , அனுதாபத்தில் அயர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம். ஆனாலும் காரணங்களின்றி உங்கள் கைகள் , கண்டதும் சிலரை அடித்திடும். அதையும் என் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்த்திடும். அந்த சிலரும் ஏழ்மையின் பிடியில் வாடித்துடித்திடும் தரைநிலை வர்க்கங்கள். யாரேனும் கேட்டாலோ , அவனுக்கும் அதே நிலைதான். மேல்நிலை வர்க்கத்தை கண்டாலே பம்பி பதுங்கும் உங்கள் விழிகள் , தரைநிலை வர்க்கம் என்றவுடன் தாவிகுதித்து அவர்களை பந்தாடுவது ஏன்? காவல் துறை உங்கள் நண்பன் என்ற உங்கள் வாசகத்தை மறுமுறையேனும் பரிசீலித்து கொள்ளுங்கள். நடப்பவை யாவும் நண்பன் என்ற சொல்லை தகர்த்து சொல்லமுடியா சொற்களை மண்டைக்குள் ஏற்றுகிறது. அடக்குமுறை என்ற பெயரில் பணமில்லா மனிதத்தை அடித்து அடிமை படுத்துவதற்க்கு எதற்கு சுதந்திரம் ? ஆங்கிலேயன் பிடியிலேயே அடிமையாய் இருந்திருப

‪‎மனிதம்‬

மனிதம் மறைந்ததா ? இல்லை மடிந்ததா ? மறைந்தது என்றால் மறைத்தது யார்? மடிந்தது என்றால் அழித்தது யார்? தன் நலத்தை தேடும் அவனின் ஆறறிவு அழித்ததோ ? இல்லை , தற்பெருமை பேசும் அவனின் நாவறிவு மறைத்ததோ ? உடலில்லா மனதிற்க்கு வஞ்சபுகழ்ச்சி ஏராளம் அறுபட்ட உடலிற்க்கு வஞ்சக இகழ்ச்சி தாராளம் பிஞ்சென்று பாராமல் பிஞ்சிலே தோலுரிப்பான் பின்னூட்ட நிகழ்வையெல்லாம் ஒளித்திரையில் ஏற்றி வைப்பான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடிப்பட்டு கிடந்தாலோ அமைதியாய் நகர்ந்திடுவான் அதைவைத்து கதைபேசி ஒரு வாரம் கடந்திடுவான் பணமான கல்விக்குள் மனிதத்தை மறைத்திடுவான் கல்வியின் பணத்திற்க்கு மனிதத்தை அழித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடுப்பூதும் பெண்களையும் அரியணையில் ஏற வைப்பான் அதில் உள்ள சூழ்ச்சிகளை அவன் மட்டும் அறிந்திருப்பான் உதவியென்று கேட்டாலோ உமிழ்ந்தபடி சிரித்திடுவான் ஊர்உலகம் எல்லாவும் அவன் செய்ததாய் பறை அடித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? சாதியென்று சாமியென்று சங்கத்தை பிரித்திடுவான் காதலிக்கும் ஜோடிகளை கழுத்தறுத்து கண் வியர்த்திடுவான் ஏழையென்று அறிந்தாலோ

கல்லரை கனவுகள்

கனவுகளை தேடி தேடி கரை படிந்த படிகமானேன் கனவிற்கு ஓர் உயிர் இருந்திருந்தால் கதறி துடித்திருக்கும் கருணையும் அழுதிருக்கும் உயிரில்லா ஜடத்திற்க்கு உயிரூட்ட ஓர் உணர்வு உணர்வில்லா உடம்பிற்கு உயிரென்று ஓர் கனவு தேடி தேடி துவண்ட மனம் தேம்பி தேம்பி அழுகிறது அரவணைக்க ஏங்கவில்லை ஆறுதல் சொல்ல ஏங்குகிறது கனவுகளை முந்திகொண்டு காலங்கள் கரைகிறது நினைவுகளை அழித்த படி நேரங்கள் நகர்கிறது கண்மூடும் வாழ்கையில் தான் கனவுகளை புதைத்த படி கண்ணயர்ந்து புலம்புகிறேன் கல்லரை பெட்டிக்குள்ளே

‪கேப்டனிடம்‬ ‪சாமானியனின்‬ ‪கேள்விகள்‬

கேப்டன் என்ற இந்த பெயரில் தான் விழுந்தது என் சமகால இளைஞர் தலைமுறை. இன்றுவரை உங்கள் படங்களினால் ஈர்க்கப்பட்ட பலகோடி ரசிகர்களில் நானும் ஒருவன். 2005 இல் நீங்கள் முழுநேர அரசியலில் முழுமையாய் இறங்கிய போது தமிழ்நாடு மாறிவிடும் என்ற மகிழ்ச்சியில் திளைத்துப்போனேன். அந்நாளில் தமிழக மக்களின் பெருவாரியான எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. 2006இல் நடந்த தேர்தல் தான் உங்கள் கட்சிக்கான முதல் அங்கீகாரம். அடையாளம் என்றும் கூட சொல்லலாம். ஆளுமையில் உள்ள கட்சிகளே கூட்டணியை தேடி அழைந்த போது ,234 தொகுதியிலும் தனித்து நிற்பதாய் மக்கள் அனைவரையும் திகைக்க வைத்தீர்கள். உங்களின் துணிச்சலான அந்த முடிவிற்க்கு பலனும் கிடைத்தது. கட்சி தொடங்கிய எட்டே மாதங்களில் பொது தேர்தலை தனித்து சந்தித்து 30 இலட்சம் வாக்காளர்களை கொத்தாக அள்ளினீர்கள். அந்த 30 இலட்சத்தில் இளைஞர் கூட்டம் மிக அதிகம். அரசாண்ட கட்சிகள் அனைத்தும் வாயடைத்து போனது. அரசியல் விமர்சகர்களையே அதிர வைத்த தேர்தலாக அது அமைந்தது. இடைப்பட்ட காலங்களில் (2006-2009) உங்களின் செய்கை சரியான பாதையில் கச்சிதமாய் சென்று கொண்டிருந்தது. அதுவரை இணைய உ

‪நெடுநாள் தவம்‬

காற்றடைத்த குமிழிக்குள் கயவன் போல் என் உருவம்... கை , கால்கள் அசைகிறது சண்டையிட துடிக்கிறது... கழுத்தின் ஓரம் சுற்றப்பட்ட கயிற்றின் ஈரம் என்னை பதபதைக்க வைக்கிறது... பயத்தில் உறைந்தவனாய் அசையாமல் படுத்திருந்தேன்.. எங்கோ ஓர் கதறல் என் காதுகளை செவிடாக்கியது.. அந்த அலறல் மிகுந்த கதறலில் என் உடல் தானாக ஆடியது... கத்தி முனையில் என் உயிர்... கழுத்தை நெருங்கிய கத்தியின் கூர்மை கழுத்தை தவிர்த்து அக்கயிற்றை அறுத்தது... நினைவிழந்த என் உடலில் ஏதோ ஓர் உணர்வு.. நீருக்குள் இருந்த நெடுநாள் தவமும் அன்றோடு கலைந்தது.. சிசுவாய் இருந்த எந்தன் மனமும் உயிர்ப்பெற்றெழுந்தது...

‪முகமில்லா‬ ‪அலைகள்‬

நீலமேக வானமெங்கும் நெருப்பாய் ஓர் வெளிச்சம் நித்திரை நிலவொளியும் நிழல் மூடி மறைந்தது உப்பு காற்று முகம் தடவ மணல் துகள்கள் கட்டி அணைக்க அலைகளுக்குள்ளே ஓர் அழுத்தம் அவள் கால்களை அழுத்தி பிடிக்க ஆதவனும் எட்டிப்பார்த்தது அக்கன்னியின் அழகிய முகத்தை அலைகளின் முத்த சிதறல்கள் அவளின் முகத்தை நனைத்தபடி வழிந்தது தூரத்தில் தெரிந்த பாய்மர படகும் அவளை நோக்கியே நகர்ந்தது ஏதும் அறியாதவளாய் அவள் கண்களுக்குள் ஓர் கடல்நீர்.. எதையோ துலைத்தவள் தான் பாவம் விழிநீரில் விம்மியபடி தேடுகிறாள்... அவளிடம் ஆறுதல் சொல்ல வாய்பேசா அவ்வலைகளும் ஆர்வத்தில் ஆர்ப்பரித்தது நிமிடங்கள் நகர கட்டி அணைத்த மணல் துகள்களை உதறியபடி கடலுக்குள் காதல் செய்ய கன்னியவள் மூழ்கிவிட்டாள் அவளை உடல்கோர்த்து உருட்டி சென்று உணர்விற்க்கு உயிரளித்து உடலைமட்டும் கக்கியபடி உள்ளுக்குள்ளே மறைந்தது முகமில்லா அவ்வலைகளும்..

யார் அவள்

யார் அவள்! இதுவரை கண்டதில்லை இன்று தான் முதல்முறை.. நிமிடங்கள் கரைகிறது.. நேரங்கள் நகர்கிறது.. அவள் விழி பார்த்தபடி இரு விழிகளுக்குள்ளே ஓர் ஊடல்.. என் மனதை ஏதோ செய்கிறாள்.. என் விழிகளின் அழகியவள்.. குழந்தை பேச்சில் என்னை கவர்கிறாள் ... கபடமில்லா கன்னியவள்.. இமை அசைவில் ஓர் அழகு இதழ் அசைவில் ஓர் நளினம் நடிக்க தெரிந்தவள் தான் அவள் சிலிர்க்காத மேனியும் அவளை பார்த்தால் சிலிர்த்திடும் அசைந்தாடும் விழிகளும் அவள் அழகை கண்டு வியந்திடும் யார் அவள் .. பெயர் தெரியா அழகியோ?

‪கலைந்தோடும்‬ ‪கனவுகள்‬

மயான அமைதியில் அவன் கால்கள் எதையோ தேடி , நடந்து கொண்டிருந்தது.வாழ்க்கையில் முழுதும் தோற்கடிக்கப்பட்டவன் தான் .கையில் எதையோ தூக்கி கொண்டு வானுயர்ந்த கட்டிடங்களை அயர்ந்து பார்த்த படி நகர்ந்து கொண்டிருந்தான். நிழலான வாழக்கைக்கு இவன் ஒரு எடுத்துக்காட்டு. நிஜத்தை தொலைத்தவனை நிழல் என்று கூறுவது தான் உரித்தாக இருக்கும். தொலைத்தவன் என்ற சொல்லை கூட தொலைக்கடிக்கப்பட்டவன் என்று திருத்தி கொள்ளலாம். ஆம் , அவன் பெயர் வெற்றி , தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள விவசாய கிராமத்தின் முதல் நிலை வாரிசு. அவன் அப்பா படித்தவர் தான் ஆனால் பாவம் இந்நாட்டின் கல்வி முறையில் படித்தவர். அதனால் தான் என்னவோ விவசாய நிலத்தை விற்று அவர் ஆசையை அவன் மீது திணித்தவர். அவன் அம்மாவோ தமிழ் பண்பாட்டை கெடுக்காத ஆன்மீக அறிவு கொண்ட அடுப்பூதும் பெண். வெற்றியை பற்றி ஒரு வரியில் சொல்லப்போனால் தனியார் மயமாக்கப்பட்ட உலகில் தனக்கென்ற தனிமையில் கனவுகளை துழைத்து நிஜத்தை தேடும் நிழல். சிறு வயது முதலே அவன் வாழ்க்கையை பற்றி நினைத்து நினைத்து தினம் தினம் ஓடி கொண்டிருப்பவர் , அவன் அப்பா. நல்லவர் தான் அவர் மனதிற்கு பூட்டிட்டு மூளையின

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை

‪பனியெனும்‬ ‪‎உருவம்‬

யாருமில்லா சாலையில் அந்திமங்கும் இராத்திரியில் என்னை மட்டுமே பின்தொடரும் உடலில்லா ஒர் உருவம்.. என்னவனோடு கொஞ்சி உறவாடும் நேரத்தில் ,  இவ்வுறுவம் என்னை இப்படி நடுநடுங்க வைக்கிறதே அவ்வுறுத்தை கண்ட என் வியர்வை சுரப்பிகள் முதலில் சண்டையிட துடித்து வேகமாக எழுந்தது. பின் தோல்வியில் துவண்டதாய் என் உடலுக்குள்ளே அடைந்தது. மறைந்து மறைந்து சென்றாலும் என்னுள் நுழைந்து என் இதழை மத்தளமாய் மாற்றுகிறது. அவ்வுறுவம் கண்டிராத படி துப்பட்டாவை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு வேகமாக நடக்கிறது என் கால்கள். என் இல்லத்தின் வாயிலுக்கு இன்னும் இரண்டு நிமிடம் தான் ஆனாலும் விடாமல் துரத்துகிறதே இவ்வுறுவம். எங்கு சென்றாலும் வருகிறதே , என் உடலை கொஞ்சமல்ல நிறையவே நடுங்கநடுங்க வைக்கிறது. ஏன் , என்னை இப்படி துரத்துகிறாய் என்று கேட்க துணிந்த என் உதடுகள் , திரும்பி பார்க்கவே அங்கு யாருமில்லை நிசப்த அமைதியில் நிலைகுழைந்தவளாய் மீண்டும் நடக்க துவங்கினேன். அட , ஆண்டவா மீண்டும் அவ்வுறுவம் துரத்துகிறதே.என் உடம்பில் நடுக்கத்தை வரவைக்கவே இப்படி துரத்திதொலைகிறது. நடுநடுங்கிய என் உடல் நடுசாமத்தில் என் வீட்டுகதவ

அவள்‬ ‪‎ஒரு‬ ‪‎கிராதகி‬ 4.0

"ஏன்டா , எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ன்னு வச்சுக்கிர " " அடிப்பாவி , என் மூஞ்சியே அப்படி தான் டீ " "இல்ல , இல்ல நான் உன்ன சைட் அடுச்சப்ப உன் மூஞ்சி அழகா இருந்துச்சு" "ஓ , இப்ப நான் அழகா இல்லையா ? " " அப்படி சொல்லல , but கொஞ்சம் மொக்கையா தா இருக்க , என்னய ஏன்டா லவ் பண்ணுன ? " "தீடிர்ன்னு கேட்டா , என்ன சொல்றது , அழகா இருந்த லவ் பண்ணுனேன் " " ஓ கோ , அப்ப நான் அழகா இல்லைனா லவ் பண்ணிருக்க மாட்ட ? " " சத்தியமா , திரும்பி கூட பாத்திருக்க மாட்டேன் " "அடப்பாவி , சரியான fraud டா நீ " " ஆனா , இனி உன் அழகு உன்ன விட்டு போனா கூட நான் போக மாட்டேன் டீ செல்லகிராதகி " "பார்ரா , ஹம்ம்ம்ம் , நீ நடத்து , என்ன ஏன்டா புடிக்கும் ? " " எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டு , ஏதாவது தொனத்தொனன்னு பேசிக்கிட்டு , அப்ப அப்ப அழுதுக்கிட்டு , நீ நிஜமாவே என் அழகி தான்டீ " "லவ் யூ டா கிராதகா " "சரி , என்ன ஏன் லவ் பண்ணுண ? " "நான் எங்க பண்ணுனேன் , கூட இர

‪மாலை‬ ‪‎நேர‬ ‪டீகிளாஸ்‬ 6.0

நெடுநாள் காத்திருப்பிற்க்கு பிறகு என் சொந்த ஊருக்கு செல்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் எனக்கென தேடி பிடிக்கப்பட்ட unreserved இருக்கையில் ஒரு ரம்மிய பயணம். இரயில் புறப்பட தயாராகி மெதுவாக நகர்ந்தது.எதிரே முகமறியா வாலிபரும் , வெத்தலை வாயுடன் வயதான இரண்டு பெரியவர்களும் அவர்களுக்குள்ளாகவே எதையோ பேசிக்கொண்டு சிரிப்பை சில்லரையாய் உதிர்த்து கொண்டிருந்தனர். நான் பொதுவாக இரயிலில் ஏறியவுடன் மேல்இருக்கையில் என் உடலை சாய்ப்பது வழக்கம்.இதுவும் என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது தான். சிறு வயதில் எங்கேயாவது இரயில் பயணம் சென்றால் இரயில் நிற்பதுக்கு முன்பாகவே உள்ளே ஏறி , மேல் இருக்கையை பிடித்து "நீ படுத்துக்க தம்பி" என்பார். அப்போதெல்லாம் தெரியாது இருக்கைகுள் அடைந்தமரும் இராவிழி வேதனையை. பின்பு நாட்கள் நகர அந்த வேதனையை தனிமையில் உணர்ந்து , அது பழகியும் போய்விட்டது. எதிரே அமர்ந்திருந்த பெரியவர்கள் இருவரும் மெல்ல பேச துவங்கினர்.அதைக்கூட அறியாமல் கைபேசியை தடவிக்கொண்டிருந்தான் என் அருகில் இருந்த வாலிபன். எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை , கிடைத்திருந்தால் நானும் அது போல்

‪மாலை‬ ‪நேர‬ ‪டீகிளாஸ்‬ 5.0

முழுதாக ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது.இன்று ஒன்றாம் தேதி புதிதான ஒர் உற்சாகம் என் மனதிற்குள் வயலின் வாசித்து கொண்டிருந்தது. வேலையெனும் அழுத்தத்தை ஆரவாரமாக அளித்தாலும் தேதி ஒன்றானால் தீர்க்கதரிசியாய் மாறி போகிறது இந்த ஐ.டி காரனின் மனது.என் மனதும் அதுபோல் தான். அன்று வெள்ளிக்கிழமை , மாலை நேர சோம்பலிலே மெதுவாக டீ கிளாஸை தேடி என் கால்கள் நகர்ந்தது. இருபது நாள் வருமானம் எனக்கென ஒதுக்கப்பட்ட வங்கி இருப்பில் காலையிலேயே ஏற்றிவிடப்பட்டது. சந்தோஷத்தில் என் கால்கள் தரையில் , மிதந்தவனாய் சுற்றி திரிந்தேன்.திரிந்த கால்களோடு டீக்கடை வாயிலில் நானும் , என் நண்பர்களும். "அண்ணே , 4 டீண்ணே " "ஹம்ம் , சரிங்க சார் " டீக்கான காத்திருப்பில் என் மனதில் ஆயிரம் ஆயிரம் யோசனைகள். முதல் மாத சம்பளம் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் என்ன வாங்குவது என்ற யோசனைதான். "மச்சீ , இன்னைக்கு என்னடா படம் ரிலீஸ் ஆகிருக்கு " "தெரில மச்சி , ஏதோ ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆகிருக்கு டா , செமயா இருக்குன்னு எங்கண்ணண் சொன்னான் " "நைட் ஷோ போலாமா மச்சி " "நான் ரெடிப்பா