Skip to main content

கற்பனை வாழ்க்கை



எட்டு வருடங்கள் ஆகிறது நான் என் ஊரை விட்டு வேற்றூரில் தஞ்சம் புகுந்து.கடந்து போன எட்டு வருடத்தில் சொந்தங்கள் கடந்து நினைவில் வைத்து கொள்ளும்படி நிறைய நண்பர்கள் மட்டுமே சொந்தமாய் உடனிருந்திருக்கின்றனர்.
பதின் பருவத்தில் பதினொன்றாம் வகுப்பில் தொடங்கிய விடுதி வாழ்க்கை இன்றளவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பத்தாம் வகுப்பு விடுமுறை முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில் ராஜாவாய் வலம் வந்த எனக்கு , விடுதி வாழ்க்கை புதிமையான அனுபவம் தான்.
தினமும் காலையில் "தம்பி , மணி 7 ஆக போகுது சீக்கிறம் எந்திருச்சு கிளம்பு" என்ற வார்த்தையில் தொடங்கி , சூடான இட்லியை ஊட்டிவிட்டு வழி அனுப்பவது வரை அனைத்துமே இன்றும் டைம் மெஷின் இருந்தால் நான் போக துடிக்கும் சுகமான நாட்கள்.
விடுதி வாழ்க்கை இவ்வன்பிற்க்கு நேர் எதிர். இரண்டடுக்கான இரும்பு கட்டிலில் சுகமின்றி உறங்கும் எங்களை , எழுப்ப தினமும் அதிகாலை 4 மணிக்கே பிரம்புடன் வந்துவிடுவார். எங்களை காக்கும் conjuring தெய்வம்.
பின் வரிசையில் நின்று அரைகுறையாய் குளித்து சரியாக 5 மணிக்கு படிக்கும் அறைக்குள் ஆஜராக வேண்டும்.
பிணவறைக்குள் கை கால் அசைக்காத பிணங்கள் எப்படி உள்ளதோ அதே நிலமை தான் அந்த படிக்கும் அறைக்குள்ளும்.
புத்தகத்தை பார்த்தபடி அதிகாலையிலே சிலை போல் அமர்ந்திருப்போம்.
பத்தாம் வகுப்பு வரை அம்மாவின் உணவை கழுவி ஊற்றிய எனக்கு அந்த கடவுள் கொடுத்த சாபம் தான் விடுதி உணவு. சுவையென்றால் சுவை அப்படி ஓர் சுவை வாயில் வைத்தவுடன் காரி உமிழும் படி இருக்கும்.
பிறகு நாட்கள் நகர அதுவே பழகி விட்டது. இதில் அவ்வப்போது சிறைக்குள் இருக்குள் கைதிகள் தப்பித்து செல்லும் காட்சிகளும் அரங்கேறும்.
வீட்டிற்க்கு செல்லும் அந்த இரண்டு நாட்களுக்கு இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்.
அப்பாடா என்று ஒரு வழியாய் இரண்டு மாதம் கழித்து வீடு சென்றால்.
அரவணைக்காத உறவுகள் எல்லாம் வரிசையில் நின்று கொண்டு மங்கலம் பாடும்.
தொடக்கத்தில் பாசத்திற்க்கும் ,ஏக்கத்திற்க்கும் ஆசைப்பட்ட மனது , நண்பர்கள் என்ற வட்டத்திற்க்குள் அனைத்தையும் மறந்தது.
பண்ணிரெண்டாம் வகுப்பில் சொல்லவே தேவை இல்லை , பாட புத்தகங்கள் தான் உன் உலகம் என்ற அளவிற்க்கு என்னை சிலையாய் வடித்திருந்தனர் என்னை செதுக்கிய சிற்பிகள்.
பிறகு , தேர்வுகள் முடிந்த ஒரு 4 மாதம் பாடப்புத்தகங்கள் இல்லா ஓர் சுதந்திர விடுவிப்பு , அப்போதும் பாசங்கள் மறைந்து அக்கறை என்ற புதிய சொல்லிற்க்குள் அடுத்த விடுதியை தேட முழுமூச்சாய் இறங்கினர் என்னை சூழ்ந்தவர்கள்.
நல்ல வேளையாக டி.வி யும் , கிரிக்கெட்டும் என் தலைமுறையில் நான் வாங்கி வந்த வரங்கள்.அது மட்டும் இல்லையென்றால் நிச்சயம் சேது விக்ரம் ஆக இங்கு பல பேர் சுற்றி திரிந்திருப்பார்கள்.
பிறகு , கல்லூரி விடுதி பள்ளி விடுதிக்கான சில கட்டுபாடுகளை தவிர்த்து , இரண்டாம் வருடத்தின் துவக்கத்திலேயே வீட்டில் சண்டைப்போட்டு விடுதிக்கு முற்றுப்புள்ளி வைத்து , இளமையின் துள்ளலுக்கு முதல் புள்ளி வைத்து வெளி அறையில் தஞ்சம் புகுந்தேன்.
நாட்கள் நகர கொஞ்சம் மனமும் தெளிந்தது. இதுதான் நிசர்சன வாழ்க்கையென்று. பின் வேலை , அவ்வப்போது ஊர் சென்று பார்க்கும் அம்மா , அப்பா முகம்.
தினமும் போனில் அரை மணி நேரம் பேசினாலும் , தோனும் போது ஊர் சென்று அவர்களின் முகம் பார்த்தாலும்.
கடந்து போன இந்த எட்டு வருடத்தில் சின்ன சின்ன நிகழ்வுகளும் , அவை தரும் மிகப்பெரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துர்பாக்கியசாலியாய் துலைத்தவர்கள் வரிசையில் கடைசியில் நிற்பவன் நான்.
இங்கு என்னை கடந்து செல்லும் பல உயிர்களும் என்னை போல் இதே வரிசையில் என்னை முந்திக்கொண்டு நிற்பவர்கள் தான்.
சொந்த ஊரில் படித்து சொந்த ஊரிலேயே வேலை செய்யும் உயிர்கள் உண்மையில் வரம் பெற்ற பாக்கியசாலிகள் தான்.
டைம் மெஷின் இருந்தால் , மீண்டும் சொந்த ஊரில் , சிறு குழந்தையாய் அம்மாவுடன் , அப்பாவுடன் , தங்கையுடன் என்னை எப்பொழுதும் சூழும் நண்பர்களுடன் ஓர் வாழ்க்கை வாழ வேண்டும் கற்பனையிலாவது..

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...