Skip to main content

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!



நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள்.

பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர்.

தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ.

உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு.

எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!!

காவி என் நிறமல்ல என்கிறாய்,
கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய்.

திராவிடத்தை ஒதுக்குகிறாய்,
பகுத்தறிவை புகுத்துகிறாய்!!!

ஊரோடு கூடி வாழ்ந்தவர்
சட்டென்று மெளனம் கலைக்க
காரணம் தான் என்னவோ ?

இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும்
இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும்.

எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர்.

உங்கள் நிலைப்பாடு தான் என்ன உலகநாயகனே ?

தனியார் தொலைக்காட்சியில் அரசியல் பேசுகிறீர் , இந்து தீவிரவாதத்தை இந்திய அளவில் விவாத பொருளாக்குகிறீர்.

உம் நற்பணி இயக்க தோழர்களோடு நீவிர் மக்களுக்கு செய்த பணிகளை இம்மக்கள் அறிவர்.

40 ஆண்டு காலம் ஓர் இயக்கத்தை கட்டுக்கோப்போடு வளர்ப்பதென்பது சாதாரண காரியமல்ல , அப்போதே அரசியலை கற்க ஆரம்பித்துவிட்டீர்.

சரியாக வரி கட்டும் கலைஞன் என்ற முறையில் சாமானிய மக்கள் மனதிலும் என்றோ இடம் பிடித்துவிட்டீர்.

ஓட்டிற்கு பணம் வாங்கியே பழக்கப்பட்ட எங்களிடம் , நீங்கள் கட்சி நடத்த நிதி கேட்டது ஆச்சிரியத்தையும் மாற்று அரசியலுக்கான ஓர் பாதையையும் தெளிவாய் எங்கள் கண் முன் காட்டியது.

ஊழலில்லா தேசத்தை உருவாக்குவேன் என்று சொல்லி தோற்றுப்போன அரசியலுக்கு மத்தியில், எங்களுக்கு உங்கள் பேச்சும் மற்றுமொரு நம்பிக்கை தான்.

இருந்தும் ஓர் சாமானியனாய் உங்களிடம் இப்போது இருக்கும் கேள்விகள் ?

நீங்கள் உங்கள் அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக எப்போது துவங்குவீர்கள் ?

ஓட்டு வங்கி அதிகம் உள்ள திராவிட கட்சிகளுடன் தன் பேச்சை மாற்றிக்கொண்டு கமல் இணைவாரா ?

தமிழகம் எதிர்த்திடும் மத்திய கட்சியோடு ஓர் அங்கம் வகிப்பாரா கமல் ?

பட்டுப்போகும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாயகனின் பிரவேசம் துளிர் விடுமா ?

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைத்துறையில் இருந்து அரசியல் களம் கண்ட பலரில் வெகு சிலரே அரியணையில் அமர்ந்துள்ளார்கள்.

நம் சண்டியரும் தனி ஆளாய் , திகட்டா கொள்கை கொண்டு விஸ்வரூபம் எடுத்து வெகு விரைவில் அரியணை ஏற்வாறா ?

#சாமானியனின்_கேள்விகள்

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...