Skip to main content

Posts

Showing posts from January, 2016

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை

‪பனியெனும்‬ ‪‎உருவம்‬

யாருமில்லா சாலையில் அந்திமங்கும் இராத்திரியில் என்னை மட்டுமே பின்தொடரும் உடலில்லா ஒர் உருவம்.. என்னவனோடு கொஞ்சி உறவாடும் நேரத்தில் ,  இவ்வுறுவம் என்னை இப்படி நடுநடுங்க வைக்கிறதே அவ்வுறுத்தை கண்ட என் வியர்வை சுரப்பிகள் முதலில் சண்டையிட துடித்து வேகமாக எழுந்தது. பின் தோல்வியில் துவண்டதாய் என் உடலுக்குள்ளே அடைந்தது. மறைந்து மறைந்து சென்றாலும் என்னுள் நுழைந்து என் இதழை மத்தளமாய் மாற்றுகிறது. அவ்வுறுவம் கண்டிராத படி துப்பட்டாவை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு வேகமாக நடக்கிறது என் கால்கள். என் இல்லத்தின் வாயிலுக்கு இன்னும் இரண்டு நிமிடம் தான் ஆனாலும் விடாமல் துரத்துகிறதே இவ்வுறுவம். எங்கு சென்றாலும் வருகிறதே , என் உடலை கொஞ்சமல்ல நிறையவே நடுங்கநடுங்க வைக்கிறது. ஏன் , என்னை இப்படி துரத்துகிறாய் என்று கேட்க துணிந்த என் உதடுகள் , திரும்பி பார்க்கவே அங்கு யாருமில்லை நிசப்த அமைதியில் நிலைகுழைந்தவளாய் மீண்டும் நடக்க துவங்கினேன். அட , ஆண்டவா மீண்டும் அவ்வுறுவம் துரத்துகிறதே.என் உடம்பில் நடுக்கத்தை வரவைக்கவே இப்படி துரத்திதொலைகிறது. நடுநடுங்கிய என் உடல் நடுசாமத்தில் என் வீட்டுகதவ

அவள்‬ ‪‎ஒரு‬ ‪‎கிராதகி‬ 4.0

"ஏன்டா , எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ன்னு வச்சுக்கிர " " அடிப்பாவி , என் மூஞ்சியே அப்படி தான் டீ " "இல்ல , இல்ல நான் உன்ன சைட் அடுச்சப்ப உன் மூஞ்சி அழகா இருந்துச்சு" "ஓ , இப்ப நான் அழகா இல்லையா ? " " அப்படி சொல்லல , but கொஞ்சம் மொக்கையா தா இருக்க , என்னய ஏன்டா லவ் பண்ணுன ? " "தீடிர்ன்னு கேட்டா , என்ன சொல்றது , அழகா இருந்த லவ் பண்ணுனேன் " " ஓ கோ , அப்ப நான் அழகா இல்லைனா லவ் பண்ணிருக்க மாட்ட ? " " சத்தியமா , திரும்பி கூட பாத்திருக்க மாட்டேன் " "அடப்பாவி , சரியான fraud டா நீ " " ஆனா , இனி உன் அழகு உன்ன விட்டு போனா கூட நான் போக மாட்டேன் டீ செல்லகிராதகி " "பார்ரா , ஹம்ம்ம்ம் , நீ நடத்து , என்ன ஏன்டா புடிக்கும் ? " " எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டு , ஏதாவது தொனத்தொனன்னு பேசிக்கிட்டு , அப்ப அப்ப அழுதுக்கிட்டு , நீ நிஜமாவே என் அழகி தான்டீ " "லவ் யூ டா கிராதகா " "சரி , என்ன ஏன் லவ் பண்ணுண ? " "நான் எங்க பண்ணுனேன் , கூட இர

‪மாலை‬ ‪‎நேர‬ ‪டீகிளாஸ்‬ 6.0

நெடுநாள் காத்திருப்பிற்க்கு பிறகு என் சொந்த ஊருக்கு செல்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் எனக்கென தேடி பிடிக்கப்பட்ட unreserved இருக்கையில் ஒரு ரம்மிய பயணம். இரயில் புறப்பட தயாராகி மெதுவாக நகர்ந்தது.எதிரே முகமறியா வாலிபரும் , வெத்தலை வாயுடன் வயதான இரண்டு பெரியவர்களும் அவர்களுக்குள்ளாகவே எதையோ பேசிக்கொண்டு சிரிப்பை சில்லரையாய் உதிர்த்து கொண்டிருந்தனர். நான் பொதுவாக இரயிலில் ஏறியவுடன் மேல்இருக்கையில் என் உடலை சாய்ப்பது வழக்கம்.இதுவும் என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது தான். சிறு வயதில் எங்கேயாவது இரயில் பயணம் சென்றால் இரயில் நிற்பதுக்கு முன்பாகவே உள்ளே ஏறி , மேல் இருக்கையை பிடித்து "நீ படுத்துக்க தம்பி" என்பார். அப்போதெல்லாம் தெரியாது இருக்கைகுள் அடைந்தமரும் இராவிழி வேதனையை. பின்பு நாட்கள் நகர அந்த வேதனையை தனிமையில் உணர்ந்து , அது பழகியும் போய்விட்டது. எதிரே அமர்ந்திருந்த பெரியவர்கள் இருவரும் மெல்ல பேச துவங்கினர்.அதைக்கூட அறியாமல் கைபேசியை தடவிக்கொண்டிருந்தான் என் அருகில் இருந்த வாலிபன். எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை , கிடைத்திருந்தால் நானும் அது போல்

‪மாலை‬ ‪நேர‬ ‪டீகிளாஸ்‬ 5.0

முழுதாக ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது.இன்று ஒன்றாம் தேதி புதிதான ஒர் உற்சாகம் என் மனதிற்குள் வயலின் வாசித்து கொண்டிருந்தது. வேலையெனும் அழுத்தத்தை ஆரவாரமாக அளித்தாலும் தேதி ஒன்றானால் தீர்க்கதரிசியாய் மாறி போகிறது இந்த ஐ.டி காரனின் மனது.என் மனதும் அதுபோல் தான். அன்று வெள்ளிக்கிழமை , மாலை நேர சோம்பலிலே மெதுவாக டீ கிளாஸை தேடி என் கால்கள் நகர்ந்தது. இருபது நாள் வருமானம் எனக்கென ஒதுக்கப்பட்ட வங்கி இருப்பில் காலையிலேயே ஏற்றிவிடப்பட்டது. சந்தோஷத்தில் என் கால்கள் தரையில் , மிதந்தவனாய் சுற்றி திரிந்தேன்.திரிந்த கால்களோடு டீக்கடை வாயிலில் நானும் , என் நண்பர்களும். "அண்ணே , 4 டீண்ணே " "ஹம்ம் , சரிங்க சார் " டீக்கான காத்திருப்பில் என் மனதில் ஆயிரம் ஆயிரம் யோசனைகள். முதல் மாத சம்பளம் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் என்ன வாங்குவது என்ற யோசனைதான். "மச்சீ , இன்னைக்கு என்னடா படம் ரிலீஸ் ஆகிருக்கு " "தெரில மச்சி , ஏதோ ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆகிருக்கு டா , செமயா இருக்குன்னு எங்கண்ணண் சொன்னான் " "நைட் ஷோ போலாமா மச்சி " "நான் ரெடிப்பா