Skip to main content

‪மாலை‬ ‪‎நேர‬ ‪டீகிளாஸ்‬ 6.0

நெடுநாள் காத்திருப்பிற்க்கு பிறகு என் சொந்த ஊருக்கு செல்கிறேன்.
இன்னும் சிறிது நேரத்தில் எனக்கென தேடி பிடிக்கப்பட்ட
unreserved இருக்கையில் ஒரு ரம்மிய பயணம்.
இரயில் புறப்பட தயாராகி மெதுவாக நகர்ந்தது.எதிரே முகமறியா வாலிபரும் , வெத்தலை வாயுடன் வயதான இரண்டு பெரியவர்களும் அவர்களுக்குள்ளாகவே எதையோ பேசிக்கொண்டு சிரிப்பை சில்லரையாய் உதிர்த்து கொண்டிருந்தனர்.
நான் பொதுவாக இரயிலில் ஏறியவுடன் மேல்இருக்கையில் என் உடலை சாய்ப்பது வழக்கம்.இதுவும் என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது தான்.
சிறு வயதில் எங்கேயாவது இரயில் பயணம் சென்றால் இரயில் நிற்பதுக்கு முன்பாகவே உள்ளே ஏறி , மேல் இருக்கையை பிடித்து "நீ படுத்துக்க தம்பி" என்பார்.
அப்போதெல்லாம் தெரியாது இருக்கைகுள் அடைந்தமரும் இராவிழி வேதனையை. பின்பு நாட்கள் நகர அந்த வேதனையை தனிமையில் உணர்ந்து , அது பழகியும் போய்விட்டது.
எதிரே அமர்ந்திருந்த பெரியவர்கள் இருவரும் மெல்ல பேச துவங்கினர்.அதைக்கூட அறியாமல் கைபேசியை தடவிக்கொண்டிருந்தான் என் அருகில் இருந்த வாலிபன்.
எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை , கிடைத்திருந்தால் நானும் அது போல் தான் தடவிக்கொண்டிருந்திருப்பேன்.
நான் என் ரப்பர்பேன்ட் சுற்றிய நோக்கியாவை வெளியில் எடுத்தாலே , பல உருவங்கள் உள்ளுக்குள் ஏளனத்தில் எள்ளி நகையாடும்.
இதையெல்லாம் , யோசனையில் போட்ட படி எதிர் அமர்ந்த பெரியவரை பார்த்தேன்.
"இந்த காலத்துல , மனுஷங்கள்ட்ட யாருய்யா பேசுறாங்க , போன் பேசுறபெட்டிக்குள்ள அடைஞ்சு கிடக்குறாங்க , கேட்டா உலகமே அதுக்குள்ள இருக்குதுன்னு அவங்கள அவங்களே ஏமாத்திகிறாங்க "
"என்னத்த சொல்ல , நம்ம காலத்துல மனுஷங்கள சாம்பாதிச்சோம் , இப்ப அப்படியா ஊரே பணம் பணம் ஓடுறாங்கய்யா " என்றார் அவர் அருகில் இருந்த மற்றொரு பெரியவர்.
"இப்ப கூட பாரு , காடு கரையெல்லாம் வித்து என் புள்ளைய படிக்க வச்சேன் , கை நிறைய சம்பாதிக்கிறான் , கேட்டதெல்லாம் வாங்கி தர்றான் , ஆனா அவன் ஒரு ஊர்லையும் , நான் என் சொந்த ஊர்லையும் அல்லாடிட்டு கிடக்குறோம் "
"ஏம்யா , போய் உம்முட்டு புள்ள கூடவே இருக்க வேண்டியது தான ?
" எங்க , புறந்த ஊர விட்டு போக என் மனசு கேக்கல , அது தான் தோன்றப்ப வந்து பேரப்புள்ளைகள பாத்துட்டு போயிக்கிறேன் , உங்க புள்ள என்ன பண்ணுது ? "
" அத ஏன் கேங்குறீங்க , இரண்டு ஆம்பிள புள்ளைய பெத்து ஏதோ முடிஞ்ச அளவுக்கு படிக்க வச்சேன் , ஒருத்தரு பொள்ளாச்சி பக்கம் மளிகை கடை வச்சிருக்காரு , இன்னொருத்தரு இங்க சென்னையில ஏதோ பெரிய கம்பெனில வேலை செய்றாப்டி , மாசம் ஒரு ஊருக்கு போய் வயித்த கழுவிட்டு இருக்கேன்"
எதிரே அமர்ந்திருந்து இவற்றை கேட்டு கொண்டிருந்த எனக்கு மனம் ரணமாய் மாறிவிட்டது.
பணம் தேவையென்ற அளவிற்க்கு கொடுத்தும் அநாதையாய் வாழும் ஒரு பெரியவர் , உயிர் வாழும் உணவை தேடி மாதாமாதம் அகதியிருப்பை மாற்றும் மற்றொரு பெரியவர்.
என் அப்பாவோ , அம்மாவோ இது மாதிரியான நிலைமையை எள்ளலவும் எண்ணகூடாது என்பது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
தற்பெருமைக்கென தம்மை எழுதிக்கொடுக்கும் இக்காலத்தை ஒப்பிடும் போது , வெளிப்படையாக குழந்தைபோல் குதப்பிகொண்டு பேசும் அப்பெரியவர்கள் வாழும் தெய்வங்கள் தான்.
நேரம் 11 மணியை நெருங்கி கொண்டிருக்கையில் தீடிரென ஒரு அழைப்பு , ஆம் வித்யாவிடமிருந்து தான்.
"ஹாலோ "
" என்ன கார்த்திக் சார் , Train ஏறுனதும் கால் பண்றேன்னு சொன்னிங்க "
"bal இல்லைங்க , அது தான் கூப்புடுல "
" மறுபடியும் அதே கதையா , சரி பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க "
" சரிங்க , ரொம்ப Thanks "
"எதுக்கு ? "
" இல்ல , நேத்து அம்மாக்கு saree select பண்ணி கொடுத்ததுக்கு "
" ஓ , அதுக்கா , சரி சரி "
" சரிங்க , விட்டு விட்டு கேக்குது , நான் காலைல கூப்புடுறேன் "
" நீங்க , காலைல , அப்படியே கூப்டுட்டாலும் , சரி பத்திரமா போய்ட்டு வாங்க கார்த்திக் " என்றார் சிரித்தபடி
"சரிங்க , good night " என்று சொல்லி கைபேசியை அமர்த்தினேன்.
ஐந்து நிமிட அலைபேசி பேச்சுக்குள் , அப்பெரியவர்கள் குடும்பம் கடந்து அரசியல் பார்வைக்குள் அடியெடித்து வைத்தனர்.
அவர்களின் பேச்சுக்கு அடிமையாகி போன என் மனது காட்பாடி இரயில் நிறுத்தத்தில் விழித்தது.என் அருகே அமர்ந்திருந்தவரும் அந்நிறுத்தத்தில் இறங்கவே , ஜன்னலோர இருக்கை என் வசமானது.
"சார் , டீ காபி , டீ காபி என்று கூவிக்கொண்டே அங்குமிங்கும் ஒரு சிறுவன் நடந்து கொண்டிருந்தான்.
" தம்பீ , இங்க ஒரு டீ ப்பா " என்று வாங்கி கொண்டு அந்த பெரியவர்கள் சொன்னதையே நினைத்து கொண்டிருந்தேன்.
இந்த இரயில் ஏறும் வரை , ஏன் அந்த பெரியவரின் பேச்சை கேட்கும் வரை , பணம் தான் உலகமென்று என் மனம் உளறிக்கொண்டிருந்தது.
அதன் வெளிப்பாடு தான் என் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் நான் வாங்கிய ஆடை.
நானும் பாசத்தை பணம் என்ற பொருளுக்குள் தான் அடைத்து வைத்து கொண்டிருக்கிறேனோ என்றும் கூட எண்ணிக்கொண்டிருந்தேன்.
எது எப்படியோ , மூன்று மாத இடைவெளிக்கு பிறகு என் அம்மா , அப்பா வை காண போகிறேன் என்ற சந்தோஷத்தில் சிலாகித்தவனாய் , ஜன்னல் கம்பிகளை பற்றிக்கொண்டு , அப்பெரியவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இரயிலோடு நகர்கிறேன்.

Comments

Popular posts from this blog

How to speak confidently on stage

How to speak confidently on stage  ? The idea of speaking in public can be terrifying. Just imagine for a moment that you’re stepping on to a stage and look down at a sea of faces all waiting for you to start. What happens when you imagine that? Speaking in public is a fear for a lot of people, whether it's giving a speech, a toast at your friend's wedding, or being called on in class. Fortunately, you can make speaking in public less anxiety inducing by following some of these types. It may never be your favorite thing, but you'll be far less likely to throw up in front of your audience. Well Prepared Part of making yourself a comfortable and dynamic public speaker is to make sure you know what you're talking about and you know it well. Know the needs of your audience and match your contents to their needs. Know your material thoroughly. Put what you have to say in a logical sequence. Ensure your speech will be captivating to your audience as well

பயணக் காதல் - 02

நேரம் சரியாக ஏழு மணி, இருள் சூழா பெளர்ணமி அது , சரி "வா போகலாம்" என்ற தொனியில், என் இருசக்கர வாகனத்திடம் தனியே பேசியபடி என்‌ வீட்டை நோக்கி கிளம்பினேன். வாகனங்கள் எல்லாம் வரிசைக்கட்டிய படி நெரிசலில் தவழ்ந்து கொண்டிருந்தது. "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற நம் அரசின் கோட்பாடு காலாவதியாகி கால் நூற்றாண்டு ஆன உணர்வு. வடித்தெடுத்த முட்டாள்கள் ஆங்காங்கே ஹாரன் அடிக்க, பிச்சைக்காரர்கள் "சார்" என்று ஆங்கிலத்தில் பிச்சை கேட்க, தூரத்தில் கரைவேட்டி, கட்சி கூட்டம் நடத்த, நம் நாடு வல்லரசு ஆனது போல் ஓர் நிழல் தோற்றம் என் கண் முன்னே. நேரம் ஆக ஆக நெரிசல் நீண்டு கொண்டே போனது. என் விழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்த படி , அவளின் முகம் பார்த்த நொடி இமைக்காமல் நின்றது. மஞ்சள் நிற ஸ்கூட்டி அவளை ஆரத்தழுவி அணைத்து கொண்டிருந்தது. பெளர்ணமி நிலவில் நான் கண்ட அவளின் முகம், தேடினாலும் கிடைக்காத வரம். ஐபோனை கையில் எடுத்து எதையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் நெற்றிக்கு நடுவே, அவளை ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் பொட்டு. கிறுக்காத ஓவியம், கிறங்கடிக்கும் சிற்பமாய் என்

அடையாரில் ஓர் அழுகை

சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டிருகிறது ,ஆம்  சாலைகள் எங்கும் ஹாரன் சத்தம் , இடைவிடாத போக்குவரத்து நெரிசல் , ரோட்டின் ஓரம் பூக்கடை வாசம் , டாஸ்மாக் முழுதும் அதே அடிதடி சண்டை , இவற்றை கண்டுகொண்டே கடந்து கொண்டிருந்தது என் இருசக்கர வாகனம். கிண்டியின் வழியே அடையாறுக்கு ஒரு பயணம் , வழியெங்கும் இன்னும் தூர்வாரபடாத குப்பைகள் , அந்த பகுதி மக்களுக்கோ , இல்லை அதே வழியில் பயணிக்கும் வாகனவாசிகளுக்கோ   அது புதிதல்ல பல ஆண்டுகளாக இன்னும் மாறாத அதே நிலை , என்ன இந்த முறை மழை என்ற பெயரில் கொஞ்சம் அதிகம் அவ்வளவே... வண்டியை ஓரம் கட்டிவிட்டு கொஞ்சம் மெதுவாக நடந்தேன் . கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாரோ ஒருவர் சோகமான முகத்துடன் , ஆழ்ந்த சிந்தனையில் தனிமையை தனக்கானாதாய்  கொண்டிருந்தார். அருகில் சென்று "அண்ணே என்ன ஆச்சு" என்று கேட்க தோன்றியது.இருந்தும் ஏதோ ஒரு தயக்கம் என்னை தடுத்தது. உண்மையில்  தான் யார் என்றே தெரியாத ஒரு நபரிடம் என்னவென்று பேசுவது. எப்படியோ மனது ஒரு நிலைக்கு வந்த பிறகு அவர் அருகில் சென்றேன். "அண்ணே என்ன ஆச்சு , சாப்பாடு எதாவது வேணுமா " என்றேன் . அவர் "