Skip to main content

அவள்‬ ‪‎ஒரு‬ ‪‎கிராதகி‬ 4.0

"ஏன்டா , எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ன்னு வச்சுக்கிர "
" அடிப்பாவி , என் மூஞ்சியே அப்படி தான் டீ "
"இல்ல , இல்ல நான் உன்ன சைட் அடுச்சப்ப உன் மூஞ்சி அழகா இருந்துச்சு"
"ஓ , இப்ப நான் அழகா
இல்லையா ? "
" அப்படி சொல்லல , but கொஞ்சம் மொக்கையா தா இருக்க , என்னய ஏன்டா லவ் பண்ணுன ? "
"தீடிர்ன்னு கேட்டா , என்ன சொல்றது , அழகா இருந்த லவ் பண்ணுனேன் "
" ஓ கோ , அப்ப நான் அழகா இல்லைனா லவ் பண்ணிருக்க மாட்ட ? "
" சத்தியமா , திரும்பி கூட பாத்திருக்க மாட்டேன் "
"அடப்பாவி , சரியான fraud டா நீ "
" ஆனா , இனி உன் அழகு உன்ன விட்டு போனா கூட நான் போக மாட்டேன் டீ செல்லகிராதகி "
"பார்ரா , ஹம்ம்ம்ம் , நீ நடத்து , என்ன ஏன்டா புடிக்கும் ? "
" எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டு , ஏதாவது தொனத்தொனன்னு பேசிக்கிட்டு , அப்ப அப்ப அழுதுக்கிட்டு , நீ நிஜமாவே என் அழகி தான்டீ "
"லவ் யூ டா கிராதகா "
"சரி , என்ன ஏன் லவ் பண்ணுண ? "
"நான் எங்க பண்ணுனேன் , கூட இருக்க friends தா சும்மா try பண்ணி பாரு , பிடிக்கலைன்னா கழட்டிவிட்டுடு ன்னு சொன்னாங்க , அது தான் பண்ணுனேன் "
"அடிப்பாவி , அப்ப என் மேல லவ் feel யே வரலையா ? "
"ஓ , வந்துச்சே "
"எப்ப ? "
" உன்ன first டைம் பாத்தப்ப , அப்ப விழுந்தவ தான் , இன்னும் எழுந்திருக்கில , செம அழகன் டா நீ , என் கண்ணுக்கு மட்டும் "
" ஓ , அப்ப மத்தவங்க ,
கண்ணுக்கு ? "
" மத்த , எல்லார் கண்ணுக்கும் நீ அசிங்கமா தான் தெரியனும் , உன்ன நான் மட்டும் தான் ரசிக்கனும் , என் கண்ணுக்கு மட்டும் தான் நீ அழகா தெரியனும் "
"லவ் யூ டி கிராதகி"

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...