Skip to main content

அவள்‬ ‪‎ஒரு‬ ‪‎கிராதகி‬ 4.0

"ஏன்டா , எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ன்னு வச்சுக்கிர "
" அடிப்பாவி , என் மூஞ்சியே அப்படி தான் டீ "
"இல்ல , இல்ல நான் உன்ன சைட் அடுச்சப்ப உன் மூஞ்சி அழகா இருந்துச்சு"
"ஓ , இப்ப நான் அழகா
இல்லையா ? "
" அப்படி சொல்லல , but கொஞ்சம் மொக்கையா தா இருக்க , என்னய ஏன்டா லவ் பண்ணுன ? "
"தீடிர்ன்னு கேட்டா , என்ன சொல்றது , அழகா இருந்த லவ் பண்ணுனேன் "
" ஓ கோ , அப்ப நான் அழகா இல்லைனா லவ் பண்ணிருக்க மாட்ட ? "
" சத்தியமா , திரும்பி கூட பாத்திருக்க மாட்டேன் "
"அடப்பாவி , சரியான fraud டா நீ "
" ஆனா , இனி உன் அழகு உன்ன விட்டு போனா கூட நான் போக மாட்டேன் டீ செல்லகிராதகி "
"பார்ரா , ஹம்ம்ம்ம் , நீ நடத்து , என்ன ஏன்டா புடிக்கும் ? "
" எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டு , ஏதாவது தொனத்தொனன்னு பேசிக்கிட்டு , அப்ப அப்ப அழுதுக்கிட்டு , நீ நிஜமாவே என் அழகி தான்டீ "
"லவ் யூ டா கிராதகா "
"சரி , என்ன ஏன் லவ் பண்ணுண ? "
"நான் எங்க பண்ணுனேன் , கூட இருக்க friends தா சும்மா try பண்ணி பாரு , பிடிக்கலைன்னா கழட்டிவிட்டுடு ன்னு சொன்னாங்க , அது தான் பண்ணுனேன் "
"அடிப்பாவி , அப்ப என் மேல லவ் feel யே வரலையா ? "
"ஓ , வந்துச்சே "
"எப்ப ? "
" உன்ன first டைம் பாத்தப்ப , அப்ப விழுந்தவ தான் , இன்னும் எழுந்திருக்கில , செம அழகன் டா நீ , என் கண்ணுக்கு மட்டும் "
" ஓ , அப்ப மத்தவங்க ,
கண்ணுக்கு ? "
" மத்த , எல்லார் கண்ணுக்கும் நீ அசிங்கமா தான் தெரியனும் , உன்ன நான் மட்டும் தான் ரசிக்கனும் , என் கண்ணுக்கு மட்டும் தான் நீ அழகா தெரியனும் "
"லவ் யூ டி கிராதகி"

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...