Skip to main content

‪பனியெனும்‬ ‪‎உருவம்‬

யாருமில்லா சாலையில்
அந்திமங்கும் இராத்திரியில்
என்னை மட்டுமே பின்தொடரும் உடலில்லா ஒர் உருவம்..
என்னவனோடு கொஞ்சி உறவாடும் நேரத்தில் , 
இவ்வுறுவம் என்னை இப்படி நடுநடுங்க வைக்கிறதே
அவ்வுறுத்தை கண்ட
என் வியர்வை சுரப்பிகள்
முதலில் சண்டையிட துடித்து
வேகமாக எழுந்தது.
பின் தோல்வியில் துவண்டதாய்
என் உடலுக்குள்ளே அடைந்தது.
மறைந்து மறைந்து சென்றாலும்
என்னுள் நுழைந்து
என் இதழை மத்தளமாய் மாற்றுகிறது.
அவ்வுறுவம் கண்டிராத படி
துப்பட்டாவை உடல் முழுவதும்
சுற்றிக்கொண்டு வேகமாக நடக்கிறது என் கால்கள்.
என் இல்லத்தின் வாயிலுக்கு
இன்னும் இரண்டு நிமிடம் தான்
ஆனாலும் விடாமல் துரத்துகிறதே இவ்வுறுவம்.
எங்கு சென்றாலும் வருகிறதே , என் உடலை கொஞ்சமல்ல நிறையவே நடுங்கநடுங்க வைக்கிறது.
ஏன் , என்னை இப்படி துரத்துகிறாய் என்று கேட்க துணிந்த என் உதடுகள் , திரும்பி பார்க்கவே அங்கு யாருமில்லை
நிசப்த அமைதியில் நிலைகுழைந்தவளாய் மீண்டும் நடக்க துவங்கினேன்.
அட , ஆண்டவா மீண்டும் அவ்வுறுவம் துரத்துகிறதே.என் உடம்பில் நடுக்கத்தை வரவைக்கவே இப்படி துரத்திதொலைகிறது.
நடுநடுங்கிய என் உடல் நடுசாமத்தில் என் வீட்டுகதவை தட்டியது.
உள்ளிருந்து கலக்கத்துடன் வந்த என்னவனை கட்டியணைத்து , முத்தத்தால் முகம் முழுதும் நனைத்து , அவன் ஸ்பரிசத்தில் முற்றும் துறந்தவளாய் அயர்ந்து கொண்டிருக்கிறேன்.
எங்களின் இரு உடல் சூடு தாங்காமல்
பனியெனும் அவ்வுறுவம் வெட்கத்தில் ஓடி ஒளிந்து , எங்கோ மறைந்து கொண்டது.
நான் என்னவனோடு சாய்ந்து கொண்டே என் இரவை கடத்தி கொண்டிருக்கிறேன்.
அதை கண்ட அவ்வுருவம் கண்ணீர் துளிகளை தான் கண்ட இடமெல்லாம் காணிக்கையாய் உதிர்த்து அதிகாலை சூரியனிடம் அடிபணிந்து மறைந்தது.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...