Skip to main content

‪சாமானியனின்‬ ‪ஆதங்கம்‬



ஒலிம்பிக்கின் கனவுகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. கருவான நம் சிசுக்கள் தோல்வியில் சிதைந்து கொண்டிருக்கிறது.
நாமோ ஏதும் அறியாதது போல் டி.வி சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். உண்மை தான் , இதுவே கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்திருந்தால் அனைவரின் வீட்டிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் , கிரிக்கெட் நடக்கும் அந்நாளில் மட்டும்.
நானோ , இல்லை மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பவர்களோ கிரிக்கெட்டுக்கு எதிரிகள் அல்ல.
பல ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் நம் நாடு உலக கோப்பையை கைபற்றிய போது பட்டாசை வீதியில் கொளுத்திப்போட்டு குதூகளித்தவன் நான்.
ஏன் இப்போது ஒலிம்பிக்கை ஆதரிக்கும் அனைவரும் அந்நாளில் அப்படி தான் சந்தோஷத்தில் திளைத்திருப்பர்.
ஒலிம்பிக்கில் ஏன் என் நாடு பதக்கங்களை பகற்கனவாய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இங்குள்ள இளைஞர் மத்தியில் எழுப்பினால் அனைவரின் பதிலும் அரசியல்வாதிகள் என்று ஒரு சேர எதிரொலிக்கும்.
அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பினால் உயர்தர மக்களுக்கு மட்டும்தான் விளையாட்டு உணவளிக்கும் , நடுத்தர மற்றும் கடைநிலை வர்க்கங்களுக்கு இல்லை என்ற பதிலே முடிவாய் முற்றும் பெறும்.
உண்மை தான் விளையாட்டில் பிரிவினை வந்து பல ஆண்டுகள் ஆகிறது அதை வைத்துதான் இங்குள்ள அரசியலும் நாடகம் போடுகிறது.
ஆனால் அது மட்டும் தான் காரணமா என்றால் பதில் இல்லா வினா தான் அது.
இங்குள்ள அனைவரும் குற்றாலீஸ்வரனை பற்றி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம்.அச்சிறுவயதில் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்த நீச்சல் வீரர்.
பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு அவரை தத்தெடுக்க தலைகீழாய் நின்றது.
நம் நாட்டை தவிர , நடுநிலை குடும்பத்தில் பிறந்து முடிந்தவரை போராடி ஒரு கட்டத்தில் தன் கனவையும் கண்ணீருக்குள் மூழ்கடித்த நீச்சல்வீரன் இப்போதைய மென்பொறியாளன்.
ஒருவேளை அன்று அவனை ஆதரரித்திருந்தால் , அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தால் இந்தியாவிற்க்கும் ஒரு பிலிப்ஸ் கிடைத்திருப்பான்.
இது போன்று கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் கனவுகள் நம் நாட்டில் ஏராளம்.
ஓடி விளையாண்ட தலைமுறைகள் அழிந்து வியர்ப்பது வியாதி என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
ஐந்து வயது சிறுவன் கூட ஆன்ட்ராய்ட் மொபைலில் தான்
விளையாட்டை ஆடுகிறான்.
அதை பார்க்கும் நம் பெற்றோரும்
சந்தோஷத்தில் திளைத்து போகின்றனர்.
நம் நாட்டில் இரண்டு வயதில் ஒரு குழந்தை அடி எடுத்து வைக்கிறது என்றால் அதன் இருபது வயது வரை படிப்புக்களை தரவாரியாய் பிரித்து வைத்திருக்கின்றனர்.
பிறகு எங்கு ஒலிம்பிக்கில் பதக்கங்களை பறிப்பது..
விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகள் இங்கு எத்துனை ?
விளையாட்டால் தான் இந்த மாணவன் படிப்பில் குறைவாய் மதிப்பெண் எடுக்கிறான் என்று குறைகூறும் குருமார்கள் இங்கு எத்துனை ?
விளையாட்டு வகுப்பை கையகப்படுத்தி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் எத்துனை ?
கேள்விகள் ஆயிரம் கேட்கலாம் அதற்கான பதில் நம்மிடம் மட்டுமே உள்ளது. இனியாவது மாறுவோம்.
கனவுகள் தோற்கலாம்
காலங்கள் மாறலாம்
நிழல்களை கடந்துதான்
நிஜம் அதை வென்றிடு...
உடல்களும் சோரலாம்
உணர்வது உறங்களாம்
உண்மையில் நீ கண்ட
கனவதை மாற்றலாம்...
வெறிகொண்டு ஆடிடு
முதல் அடி தகர்த்திடு
குறி கொண்டு நோக்கினால்
உலகமும் திரும்பிடும்...
இவ்வரிகளோடு கலைகிறது சாமானியனின் ஆதங்கம்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...