Skip to main content

‪சாமானியனின்‬ ‪ஆதங்கம்‬



ஒலிம்பிக்கின் கனவுகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. கருவான நம் சிசுக்கள் தோல்வியில் சிதைந்து கொண்டிருக்கிறது.
நாமோ ஏதும் அறியாதது போல் டி.வி சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். உண்மை தான் , இதுவே கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்திருந்தால் அனைவரின் வீட்டிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் , கிரிக்கெட் நடக்கும் அந்நாளில் மட்டும்.
நானோ , இல்லை மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பவர்களோ கிரிக்கெட்டுக்கு எதிரிகள் அல்ல.
பல ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் நம் நாடு உலக கோப்பையை கைபற்றிய போது பட்டாசை வீதியில் கொளுத்திப்போட்டு குதூகளித்தவன் நான்.
ஏன் இப்போது ஒலிம்பிக்கை ஆதரிக்கும் அனைவரும் அந்நாளில் அப்படி தான் சந்தோஷத்தில் திளைத்திருப்பர்.
ஒலிம்பிக்கில் ஏன் என் நாடு பதக்கங்களை பகற்கனவாய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இங்குள்ள இளைஞர் மத்தியில் எழுப்பினால் அனைவரின் பதிலும் அரசியல்வாதிகள் என்று ஒரு சேர எதிரொலிக்கும்.
அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பினால் உயர்தர மக்களுக்கு மட்டும்தான் விளையாட்டு உணவளிக்கும் , நடுத்தர மற்றும் கடைநிலை வர்க்கங்களுக்கு இல்லை என்ற பதிலே முடிவாய் முற்றும் பெறும்.
உண்மை தான் விளையாட்டில் பிரிவினை வந்து பல ஆண்டுகள் ஆகிறது அதை வைத்துதான் இங்குள்ள அரசியலும் நாடகம் போடுகிறது.
ஆனால் அது மட்டும் தான் காரணமா என்றால் பதில் இல்லா வினா தான் அது.
இங்குள்ள அனைவரும் குற்றாலீஸ்வரனை பற்றி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம்.அச்சிறுவயதில் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்த நீச்சல் வீரர்.
பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு அவரை தத்தெடுக்க தலைகீழாய் நின்றது.
நம் நாட்டை தவிர , நடுநிலை குடும்பத்தில் பிறந்து முடிந்தவரை போராடி ஒரு கட்டத்தில் தன் கனவையும் கண்ணீருக்குள் மூழ்கடித்த நீச்சல்வீரன் இப்போதைய மென்பொறியாளன்.
ஒருவேளை அன்று அவனை ஆதரரித்திருந்தால் , அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தால் இந்தியாவிற்க்கும் ஒரு பிலிப்ஸ் கிடைத்திருப்பான்.
இது போன்று கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் கனவுகள் நம் நாட்டில் ஏராளம்.
ஓடி விளையாண்ட தலைமுறைகள் அழிந்து வியர்ப்பது வியாதி என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
ஐந்து வயது சிறுவன் கூட ஆன்ட்ராய்ட் மொபைலில் தான்
விளையாட்டை ஆடுகிறான்.
அதை பார்க்கும் நம் பெற்றோரும்
சந்தோஷத்தில் திளைத்து போகின்றனர்.
நம் நாட்டில் இரண்டு வயதில் ஒரு குழந்தை அடி எடுத்து வைக்கிறது என்றால் அதன் இருபது வயது வரை படிப்புக்களை தரவாரியாய் பிரித்து வைத்திருக்கின்றனர்.
பிறகு எங்கு ஒலிம்பிக்கில் பதக்கங்களை பறிப்பது..
விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகள் இங்கு எத்துனை ?
விளையாட்டால் தான் இந்த மாணவன் படிப்பில் குறைவாய் மதிப்பெண் எடுக்கிறான் என்று குறைகூறும் குருமார்கள் இங்கு எத்துனை ?
விளையாட்டு வகுப்பை கையகப்படுத்தி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் எத்துனை ?
கேள்விகள் ஆயிரம் கேட்கலாம் அதற்கான பதில் நம்மிடம் மட்டுமே உள்ளது. இனியாவது மாறுவோம்.
கனவுகள் தோற்கலாம்
காலங்கள் மாறலாம்
நிழல்களை கடந்துதான்
நிஜம் அதை வென்றிடு...
உடல்களும் சோரலாம்
உணர்வது உறங்களாம்
உண்மையில் நீ கண்ட
கனவதை மாற்றலாம்...
வெறிகொண்டு ஆடிடு
முதல் அடி தகர்த்திடு
குறி கொண்டு நோக்கினால்
உலகமும் திரும்பிடும்...
இவ்வரிகளோடு கலைகிறது சாமானியனின் ஆதங்கம்.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...