Skip to main content

கார்ப்பரேட் காதல்



KFC க்கு அருகே உள்ள அதே பேருந்து நிறுத்தம் தான் எந்த மாற்றமும் இல்லை அவளுக்கான காத்திருப்பில் அயர்ந்தவனாய் உயிரில்லா கைப்பேசியை உயிர் போக தடவிக்கொண்டிருந்தான்.

கார்ப்பரேட் வாசல் இத்தலைமுறை காதலின் முதல் தொடக்கம். அதே போல் தான் அவனும் தன் தொடக்கத்தை எதிர்பார்த்து காத்திருப்பில் ஆழ்ந்திருந்தான்.

நாகரீக காதலர்கள் அதிகம் உறவாடும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான். காலை,மாலை,இரவு என்று நேரங்கள் கடந்த காதல் கதைகள் இங்கு ஏராளம்.

காதல் தாண்டி , காமம் தாண்டி பிரிவை எதிர்நோக்கும் இடமும் , இதே கார்ப்பரேட் வாசல் தான்.

அவனின் அழகி அவனுக்கு அருகில் அதே பேருந்து நிறுத்தத்தில் தொடக்கத்தை துவங்கி வைக்க வந்துவிட்டாள்.

புருவங்கள் குறைத்து , முக அழகும் சிதைத்து , உதட்டோர சாயத்தில் , இறுக்கிய உடையில் பெண்ணியம் பேசிடும் மிடுக்கான பெண்ணாக அவன் அருகே அவள்.

ஒரு வாரம் முன்பு தான் அவளை முதல் முறை இதே பேருந்து நிறுத்தத்தின் அருகே பார்த்தான்.
இன்று இரண்டாவது முறை காதலிக்க துவங்கிவிட்டான்.அவளிடம் சொல்லியும் விட்டான்.

அவளும் அடுத்த காதலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இவனின் அறிமுகம்.

கார்ப்பரேட் வாசலில் மற்றுமொரு கார்ப்பரேட் காதல். காதல் கடந்து காமத்தை எதிர்நோக்கி.

வெட்கத்தில் முகம் சிவந்து , பேச்சுக்கள் தடுமாறி , நெடுநாள் காத்திருந்து , ஒரு நாள் சந்தித்து , பல கதைகள் பேசி , கடைசியில் கைபிடித்து , இடுகாடு ஏறும் வரை இன்பத்தில் தவழ்ந்த அத்தலைமுறை காதலும் அழிந்தே போய்விட்டது.

ஆறு மாதங்கள் அட்டைப்பூச்சியாய் கார்ப்பரேட் காதலுக்குள் மூழ்கி கிடந்தது அவனின் தேகமும் இவளின் மேனியும்.

பூக்களால் அலங்கரித்த மணமேடைக்கு எதிரே அவன் அமர்ந்திருக்க அவளின் திருமணமும் அழகாய் அரங்கேறியது.

கார்ப்பரேட் காதலின் காட்சிப்பிழைகளை கண்ணெதிரே காண்கிறேன். காமம் கடந்த காதல்கள் இனியாவது மலரட்டும்..

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...