Skip to main content

பட்டினிஇரவுகள்‬

கண்டதும் காதலை
அவளை கண்ட நொடி
உணர்ந்தேன் ..
கண்களால் 
காதல் செய்யும்
கல்நெஞ்சுகாரி அவள் ...
அலைபேசிக்கு மட்டுமே
முத்தத்தை அர்பணிக்கும்
பத்தினிப்பாதுகை ...
அவளின்
காதல் முத்தங்களால் அலைபேசியே
அரைஉயிரானது ...
நாட்கள் நகர ,
முத்தங்கள் உதிர்ந்தது
உத்தங்கள் வெடித்தது.
கண்ட காதலும் கரைந்தது...
நித்தமும் நீயென்றவள்
நித்திரையில்
முழு இருளானால் ...
காரணமோ வேலையில்லை ..
தரமற்ற வேலையில்லை ..
சித்தமும் கலங்கிடவே
சிங்கபூரை நாடி வந்தேன்.
வேற்றூர் வாசியாகி
வெறுமையாய்
தன்னிலை மறந்து
வேள்விகளும் பல கடந்து சுழலாமல் நகர்கிறது எந்தன் வேதனை காலம்...
சட்டென இந்த நிலை மாறிவிட்டால் சலித்து தான் போய்விடும்
சராசரி வாழ்க்கையும்...
சுற்றமும் சிரித்தது .
உற்றமும் உமிழ்ந்தது .
தனிமையில் நான் ...
தனிமையில் உணர்ந்தேன்
தரமற்ற மனிதரை
தரம் பிரித்து பழகினேன்
கனமூளைகாரணாய் ..
பட்டினி இரவு தான்
பெற்றோரை நினைத்தது.
கலங்கிய
என் சித்தமும்
நாள் வர
தெளிந்தது ...

Comments

Post a Comment