Skip to main content

‪முழுமனதும்‬ ‪அரைமனதும்‬

தனக்கான தேடலை தான்தோன்றியாய் துறந்துவிட்டு காலமாற்றத்தால்
இருக்கின்ற துறையை
இன்முகமாய் ஏற்கின்றனர் இக்கால இளைஞர்கள் .
இது ஏதோ இன்று மட்டும் நடப்பதல்ல , நமது தந்தையின் இளமையிலும் நடந்திருக்ககூடும் . அவர்களும் அப்போது இப்படிதான் மனம் நொந்திருப்பார்கள் .
இன்று ஏதோ ஏதோ துறைகளில் பிரபலமாகிருக்கும் ஆத்மாக்களை நேர்காணல் எடுத்தால் தெரிந்துவிடும் அவர்களின் உண்மையான ஆசையை பற்றி .
இருந்தும் தனக்கான தேடலை தாரக மந்திரமாக உச்சரித்த உன்னதங்களும் இங்கு சாதிக்காமல் இல்லை .
இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கால இளைஞர்களுக்கு இதுதான் நமக்கான தேடல் என்று தடம் காண்பதற்கே கல்லூரியை கடக்க வேண்டியுள்ளது.
நான்கு வருட உழைப்பை பொறியியலில் காட்டிவிட்டு , பிறகு தான் விழிப்பார்கள் . தனக்கு இது சரிவராது என்று ..
இது பொறியியலுக்கு மட்டுமல்ல கலை &அறிவியலுக்கும் ஏற்புடையது தான் ...
அப்படி விழித்தவர்கள் ஒன்று அதே துறையில் அரை மனதாக பயனிப்பார்கள் இல்லை தனக்கான துறையில் முழுமனதோடு உழைப்பார்கள் .
இதில் அந்த அரை மனது காரர்களை பற்றி பேசி எந்த பயனும் இல்லை . ஏனெனில் அவர்கள் தோல்விக்கு பயந்தவர்கள் .
ஆனால் இந்த முழுமனது காரர்கள் தோல்வியை ரசிப்பவர்கள் . முயற்சியை முடிவிலியாய் தொடர்பவர்கள் .
அவர்கள் ஒன்று சாதிக்கலாம், இல்லை சறுக்கலிலே சவாரி செய்யலாம் .. அது முக்கியமல்ல ... அவர்களின் முயற்சி.. விடாமுயற்சி .. நிச்சயம் சாதிக்க வைக்கும் ... சாதனையாளனாக்கும்.
இன்றும் கூட கோடம்பாக்கத்தை ஒருமுறை வலம் வந்தால் தெரிந்துவிடும். இந்த முழுமனதுகாரர்களை பற்றி ..
இந்த அரைமனதுகாரர்களை
நினைத்தாலே பாவமாக தான் உள்ளது .
ஒன்று முழுமனதாக தனக்கான அடையாளத்தை தெரிவு செய்யும் அளவிற்கு தைரியம் வேண்டும் இல்லையென்றால் அரைமனதான அடையாளத்தை முழுமனதாக ஏற்க வேண்டும் .
இது இரண்டிற்கும் நடுவில் நடுநிலையாளனாக வேண்டும் என்று தினம் தினம் மனதை நொந்து கொள்பவர்களை உண்மையில் நினைத்தாலே பாவமாக தான் உள்ளது .
இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முழுமனதான அந்த சறுக்கிய வாழ்க்கையே
சாலசிறந்து .

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...