Skip to main content

‪முழுமனதும்‬ ‪அரைமனதும்‬

தனக்கான தேடலை தான்தோன்றியாய் துறந்துவிட்டு காலமாற்றத்தால்
இருக்கின்ற துறையை
இன்முகமாய் ஏற்கின்றனர் இக்கால இளைஞர்கள் .
இது ஏதோ இன்று மட்டும் நடப்பதல்ல , நமது தந்தையின் இளமையிலும் நடந்திருக்ககூடும் . அவர்களும் அப்போது இப்படிதான் மனம் நொந்திருப்பார்கள் .
இன்று ஏதோ ஏதோ துறைகளில் பிரபலமாகிருக்கும் ஆத்மாக்களை நேர்காணல் எடுத்தால் தெரிந்துவிடும் அவர்களின் உண்மையான ஆசையை பற்றி .
இருந்தும் தனக்கான தேடலை தாரக மந்திரமாக உச்சரித்த உன்னதங்களும் இங்கு சாதிக்காமல் இல்லை .
இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கால இளைஞர்களுக்கு இதுதான் நமக்கான தேடல் என்று தடம் காண்பதற்கே கல்லூரியை கடக்க வேண்டியுள்ளது.
நான்கு வருட உழைப்பை பொறியியலில் காட்டிவிட்டு , பிறகு தான் விழிப்பார்கள் . தனக்கு இது சரிவராது என்று ..
இது பொறியியலுக்கு மட்டுமல்ல கலை &அறிவியலுக்கும் ஏற்புடையது தான் ...
அப்படி விழித்தவர்கள் ஒன்று அதே துறையில் அரை மனதாக பயனிப்பார்கள் இல்லை தனக்கான துறையில் முழுமனதோடு உழைப்பார்கள் .
இதில் அந்த அரை மனது காரர்களை பற்றி பேசி எந்த பயனும் இல்லை . ஏனெனில் அவர்கள் தோல்விக்கு பயந்தவர்கள் .
ஆனால் இந்த முழுமனது காரர்கள் தோல்வியை ரசிப்பவர்கள் . முயற்சியை முடிவிலியாய் தொடர்பவர்கள் .
அவர்கள் ஒன்று சாதிக்கலாம், இல்லை சறுக்கலிலே சவாரி செய்யலாம் .. அது முக்கியமல்ல ... அவர்களின் முயற்சி.. விடாமுயற்சி .. நிச்சயம் சாதிக்க வைக்கும் ... சாதனையாளனாக்கும்.
இன்றும் கூட கோடம்பாக்கத்தை ஒருமுறை வலம் வந்தால் தெரிந்துவிடும். இந்த முழுமனதுகாரர்களை பற்றி ..
இந்த அரைமனதுகாரர்களை
நினைத்தாலே பாவமாக தான் உள்ளது .
ஒன்று முழுமனதாக தனக்கான அடையாளத்தை தெரிவு செய்யும் அளவிற்கு தைரியம் வேண்டும் இல்லையென்றால் அரைமனதான அடையாளத்தை முழுமனதாக ஏற்க வேண்டும் .
இது இரண்டிற்கும் நடுவில் நடுநிலையாளனாக வேண்டும் என்று தினம் தினம் மனதை நொந்து கொள்பவர்களை உண்மையில் நினைத்தாலே பாவமாக தான் உள்ளது .
இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முழுமனதான அந்த சறுக்கிய வாழ்க்கையே
சாலசிறந்து .

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...