Skip to main content

‪மதிப்பெண்‬ ‪‎வாழ்க்கை‬

அவனுக்கு நன்றாக நினைவிருக்கும் ..ஆம் அன்று தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ..ஊரெங்கும் பரப்பரப்பிற்கு பஞ்சமின்றி அதைதான் எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தது.
அவனும் அதை நினைத்து கொண்டே தான் இரவு முழுதும் உறக்கமின்றி அதிகாலையில் பயத்துடன் படுந்திருந்தான் . பத்தாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பு தான் வாழ்வின் முதல் படி என்று எண்ணும் சராசரி தகப்பனின் மனநிலை தான் அவனின் தந்தைக்கும்.
அவன் கண்களுக்கு அன்று மட்டும் தான் கடிகார முட்கள் வேகமாக சுழன்றது ... பத்து மணியை நெருங்க இன்னும் இருபது நிமிடம் உள்ளது . இருந்தும் தந்தையும் மகனும் தயாராகிவிட்டனர் .. இன்டெர்னெட் சென்டருக்கு செல்ல ..
போகும் வழியெங்கும் வழிப்பறி திருடனை போல் ஆங்காங்கே நின்ற சொந்தங்கள் இவன் வாயை கிழறி கொண்டிருந்தனர் . அதையெல்லாம் ஒரு வழியாக கடந்து இன்டெர்நெட் சென்டரின் முன் தந்தையும் மகனும் சென்றாகிவிட்டது.
இன்னும் பத்து நிமிடங்களில் அவன் வாழ்வின் முதற்படியை நிர்னயிக்கும் மதிப்பெண் வெளியாக போகிறது.
அந்த பத்து நிமிட இடைவெளிக்குள் பலவாரான பேச்சுக்கள் அந்த இடத்தையே அலைவரிசை போல் ஆக்கியது.
நேரமும் பத்தாகிவிட இவன் கைவிரல்கள் அவனின் ரெஜிஸ்டர் நம்பரை டைப் செய்தது .
என்ன ஒரு ஆச்சரியம் அவன் சற்றும் எதிர்பார்க்காத மதிப்பெண் 461 என்று காட்டியதும் , தந்தையை கட்டி அணைத்தவாரு பிரிண்ட் எடுத்து கொண்டு வெளியே வந்தான் .
யாரென்றே தெரியாத நபரும் கூட தம்பி எத்துனை மார்க்ங்க என்று நலம் விசாரித்த படி சென்றார் .
அந்த இன்டெர்நெட் சென்டரின் வாயிலில் பல முகங்கள் வெவ்வேறு முகபாவனையை வெளிபடுத்தியவாரு நகர்ந்து சென்றனர்.
அதே இடத்தில் சிலரது கைகள் தங்கள் பிள்ளைகளை தட்டி கொடுத்து கன்னத்தை சிவக்க வைத்தன .
மாநில அளவில் முதல் மார்க் எடுத்த மாணவனை டி.வி யில் பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் , தூக்கு கயிற்றை தன் கழுத்திற்கு ஆபரணமாக்கும் துர்பாக்கியசாலிகளை பற்றி துளியேனும் எவரும் நினைக்காமல் அடுத்த நாள் வரும் செய்திதாளை பார்த்து பாவப்படுவார்கள்.
அது ஒருபுறம் இருக்க அவனின் தந்தையும் அவனும் அடுத்த படியை தேர்வு செய்யும் சிறைசாலையை நோக்கி பயணம் செய்ய ஆயுத்தமாகினர்.
பாவம் அந்த வயதில் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஹாஸ்டல் என்னும் சிறைசாலையை பற்றி ...
தன்னுடனே வைத்து அழகு பார்க்க வேண்டிய தன் மகனையும் / மகளையும் படிப்பு என்ற பெயரில் விடுதிக்கு தத்து கொடுக்கும் தத்துவ வாழ்வியல் பெற்றவர்களுக்கு சரி எனில் , தலைக்கன படிப்பை படித்து முடித்து நல்ல வேலையில் உள்ள போது முதியோர் இல்லம் தான் உங்களுக்கு சரி என்று பெற்றோர்களை பிள்ளைகள் அனுப்பி வைப்பதும் சரியே என்று தான் தோன்றுகிறது.
‪#‎தொடரும்‬
‪#‎மதிப்பெண்‬ ‪#‎வாழ்க்கை‬

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...