Skip to main content

இரவல்வாசிகள்‬

மெட்ரோ சிட்டியின் சாலைகளில் ஆங்காங்கே நடைபிணமாய் உயிர்வாழ உணவின்றி உணவிற்கு கையேந்தும் முதியோர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள் .
ஒரு வேளை பிறந்தது முதலே கையேந்தி தான் வாழ்ந்திருப்பார்களா ? இல்லை அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளால் அப்படி ஆக்கப்பட்டிருப்பார்களா?
ரயில் நிலையங்களிலும் , சிகப்பு விளக்கு நிறுத்திகளிலும் தங்களின் கை ஒடிந்து , கால் இழந்து வாழும் உத்தமர்களையும்
காரில் செல்பவர்களிடம் கைகூப்பி இரவல் கேட்கும் இல்லாதவர்களையும் நினைத்தாலே விழிகள் நனைகிறது .
அரசு தான் இலவச முதியோர் இல்லங்களை இலவசமாய் கொடுக்கிறதே ? இருந்தும் இவர்கள் ஏன் இருக்க இடமின்றி உண்ண உணவின்றி கையேந்தி நிற்கிறார்கள் .
அரசின் இலவச முதியோர் இல்லத்திற்கு செல்லகூடாத அளவிற்கு இவர்கள் தாழ்த்தபட்டவர்களா ? இல்லை தன்னை தன் மகன் கண்டு கொள்ள வில்லையே என்ற விரக்தியில் கையேந்துபவர்களா ?
புரியாத புதிர் தான் அவர்களின் வாழ்க்கை ..
இது ஒரு புறம் இருக்க கையேந்தி வருபவர்களிடம் கையசைத்து கண்நகைக்கிறது .இந்த கர்வம் பிடித்த கணிணி மூளை .
இத்துனைக்கும் அவர்கள் இரவல் கேட்பது இல்லாதவரிடம் இல்லை , கார்பரேட்டில் வேலை செய்யும் காரியவாதிகளிடம் தான் .
இந்த காரியவாதிகள் தான் இருந்தும் இல்லாதது போல் நடிக்கும் நடிகர் திலகங்கள் .
இதையும் கூட விட்டுதெலைக்கலாம் ஆனால் இந்த இரயில் நிலையங்களில் இதிகாச இலக்கியவாதியை போன்று காதில் ஒன்றும் , தோளில் ஒன்றும் மாற்றிகொண்டு எதையுமே கண்டுகொள்ளாமல் சுற்றும் நல்ல உள்ளங்களை பார்க்கும் போது தான் மீண்டும் ஒருமுறை சுனாமி வராதா என்று கூட தோன்றுகிறது .
சரி அதுவும் ஒரு புறம் இருக்கட்டும் , இவ்வாறு கையேந்தும் முதியோரின்
முடிவு என்னவாக இருக்கும்? இப்படியே இரவல் கேட்டே இடிகுழிக்குள்
தள்ளபடுவார்களா ? இல்லை இரக்கம் காட்டதவரை நினைத்து இடிந்து போய் கல்லரை சேர்வார்களா ?
இது போன்ற விடை தெரியா வினாக்களை விதையாக விதைக்கதான் முடிகிறது . அக்கறையுள்ளோர் அறுவடை செய்யுங்கள் .

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...