Skip to main content

பயணக் காதல் - 03



பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வுகளை முடித்த நாளிலிருந்து, வீட்டிற்குள்ளும் சரி வெளியிலும் சரி அடுத்த என்ன படிக்கலாம் என்ற பேச்சை மீறி அடுத்து எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்ற பேச்சே ஆஸ்தானமாக விவாத பொருளாக மாறிக் கொண்டிருந்தது.
எனக்கோ எந்த கல்லூரி என்பதை தாண்டி எந்த ஊரில் படிக்கலாம் என்ற சிந்தனை வெறித்தனமாக ஆழ் மனது வரை சென்று குடைந்து கொண்டிருந்தது.
எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களின் Bio-Data - வை முழுதும் எடுத்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தேன். தெரியாத ஒரு விஷயத்தையும் தெரிந்தது போல் காட்டி பெற்றோர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் நாம். அதில் ஒரு அலாதி சுகம்.
நான் தேர்ந்தெடுத்த அந்த இரண்டு ஊர்கள் சென்னையும் கோயம்புத்தூரும் , அதில் என்னை அறியாமலையே நடந்த ஒரு சுவாரசியம், பாண்டிச்சேரியை நான் அதுவரை அறிந்திறாத என் சொந்தக்காரர் Refer செய்தது தான். சொந்தங்களிலும் சில நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.
பிறகு , சென்னை மோசன ஊர் என்று என் மீது அக்கறை கொண்ட ,உறவினர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் விஷப்பூச்சிகள் கொளுத்தி போட , சென்னையும் ஓரங்கட்டப்பட்டது.
பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் காட்சிகள் போல ஒரே விரலை காட்டி கோயம்புத்தூரில் தான் படிக்க வேண்டும் என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரி நாம் தேர்ந்தெடுத்தது தானே, என்று சந்தோஷத்தில் திளைக்க , அடுத்த ஆப்பு ரெடி ஆனது. கட்டுப்பாடான கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து ஊளையிட , மீண்டும் கல்லூரிக்கான Bio-Data - வை எடுத்து பெற்றோரை மூளைச்சலவை செய்து ஒரு வழியாக கல்லூரி வாழ்க்கையை ரசித்து வாழும் ஓர் கல்லூரியில் கால் பதித்தேன்.
என் வாழ்வின் தேடலில் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் கோயம்புத்தூரில் நான் கடந்து வந்த நாட்கள். வாழ்க்கையின் சந்தோசங்கள் அதிகமா உலவிய தருணம் அது.
கோயம்பத்தூர் என்றாலே மரியாதை என்ற வார்த்தையை தாண்டி சோகங்கள் , வலிகள் , பயம் , பயணம், ஏமாற்றம் என்ற அனைத்தையும் அந்த ஊர் எனக்கு கற்று தந்தது.
கல்லூரி நண்பர்களோடு நினைத்த நொடி பயணம் , கவலை இல்லா வாழ்க்கை என்று ஒவ்வொரு நாளும் நான் ரசித்து வாழ்ந்த காலம் அது.
அதற்கு மேலும் சுவாரசியமாய் என்னுடைய பகுதி நேர வேலை பல அனுபவங்களை பக்குவமாய் காட்டிக்கொடுத்தது.
அதிகமாக பயணப்பட வேண்டும் என்ற சிந்தனையை எனக்கு அளித்ததும் இதே ஊர் தான். நெரிசல் இல்லா நகரம்.நினைத்ததை முடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்கு கற்றுக்கொடுத்ததும் இதே ஊர்தான்.
மலைகள், மழைத்துளிகள் , ஈரக்காற்று என்று எங்கு சுற்றினாலும் பசுமைக்கு பஞ்சமில்லா மெட்ரோ சிட்டி. இப்போது தொழில் நகரமாக அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்பது வேறு கதை.
தாவணி தாரிகைகள் துவங்கி கேரளத்து சிட்டுகள் வரை அனைவரும் சங்கமிக்கும் ஓர் அழகிய நகரம்.
வர்ணிப்புகள் கடந்து வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ கற்றுக்கொடுக்கும் சிட்டி என்றால் மிகை ஆகாது.
என் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வை, திறமையை வைத்து தீர்மானித்த பேசும் நகரம்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...