Skip to main content

பயணக் காதல் - 03



பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வுகளை முடித்த நாளிலிருந்து, வீட்டிற்குள்ளும் சரி வெளியிலும் சரி அடுத்த என்ன படிக்கலாம் என்ற பேச்சை மீறி அடுத்து எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்ற பேச்சே ஆஸ்தானமாக விவாத பொருளாக மாறிக் கொண்டிருந்தது.
எனக்கோ எந்த கல்லூரி என்பதை தாண்டி எந்த ஊரில் படிக்கலாம் என்ற சிந்தனை வெறித்தனமாக ஆழ் மனது வரை சென்று குடைந்து கொண்டிருந்தது.
எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களின் Bio-Data - வை முழுதும் எடுத்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தேன். தெரியாத ஒரு விஷயத்தையும் தெரிந்தது போல் காட்டி பெற்றோர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் நாம். அதில் ஒரு அலாதி சுகம்.
நான் தேர்ந்தெடுத்த அந்த இரண்டு ஊர்கள் சென்னையும் கோயம்புத்தூரும் , அதில் என்னை அறியாமலையே நடந்த ஒரு சுவாரசியம், பாண்டிச்சேரியை நான் அதுவரை அறிந்திறாத என் சொந்தக்காரர் Refer செய்தது தான். சொந்தங்களிலும் சில நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.
பிறகு , சென்னை மோசன ஊர் என்று என் மீது அக்கறை கொண்ட ,உறவினர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் விஷப்பூச்சிகள் கொளுத்தி போட , சென்னையும் ஓரங்கட்டப்பட்டது.
பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் காட்சிகள் போல ஒரே விரலை காட்டி கோயம்புத்தூரில் தான் படிக்க வேண்டும் என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரி நாம் தேர்ந்தெடுத்தது தானே, என்று சந்தோஷத்தில் திளைக்க , அடுத்த ஆப்பு ரெடி ஆனது. கட்டுப்பாடான கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து ஊளையிட , மீண்டும் கல்லூரிக்கான Bio-Data - வை எடுத்து பெற்றோரை மூளைச்சலவை செய்து ஒரு வழியாக கல்லூரி வாழ்க்கையை ரசித்து வாழும் ஓர் கல்லூரியில் கால் பதித்தேன்.
என் வாழ்வின் தேடலில் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் கோயம்புத்தூரில் நான் கடந்து வந்த நாட்கள். வாழ்க்கையின் சந்தோசங்கள் அதிகமா உலவிய தருணம் அது.
கோயம்பத்தூர் என்றாலே மரியாதை என்ற வார்த்தையை தாண்டி சோகங்கள் , வலிகள் , பயம் , பயணம், ஏமாற்றம் என்ற அனைத்தையும் அந்த ஊர் எனக்கு கற்று தந்தது.
கல்லூரி நண்பர்களோடு நினைத்த நொடி பயணம் , கவலை இல்லா வாழ்க்கை என்று ஒவ்வொரு நாளும் நான் ரசித்து வாழ்ந்த காலம் அது.
அதற்கு மேலும் சுவாரசியமாய் என்னுடைய பகுதி நேர வேலை பல அனுபவங்களை பக்குவமாய் காட்டிக்கொடுத்தது.
அதிகமாக பயணப்பட வேண்டும் என்ற சிந்தனையை எனக்கு அளித்ததும் இதே ஊர் தான். நெரிசல் இல்லா நகரம்.நினைத்ததை முடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை எனக்கு கற்றுக்கொடுத்ததும் இதே ஊர்தான்.
மலைகள், மழைத்துளிகள் , ஈரக்காற்று என்று எங்கு சுற்றினாலும் பசுமைக்கு பஞ்சமில்லா மெட்ரோ சிட்டி. இப்போது தொழில் நகரமாக அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்பது வேறு கதை.
தாவணி தாரிகைகள் துவங்கி கேரளத்து சிட்டுகள் வரை அனைவரும் சங்கமிக்கும் ஓர் அழகிய நகரம்.
வர்ணிப்புகள் கடந்து வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ கற்றுக்கொடுக்கும் சிட்டி என்றால் மிகை ஆகாது.
என் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வை, திறமையை வைத்து தீர்மானித்த பேசும் நகரம்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...
இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...