Skip to main content

பயணக் காதல் - 01


பள்ளியின் முதல் நாள் தொடங்கி கல்லூரி இறுதி நாள் வரை தென்மாவட்டங்களின் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து சுவாசித்தவன் நான். சொந்த ஊரில் பகட்டாக வாழ்வதும் ஒரு வித போதை தான். எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே பயணங்கள் பக்கத்து ஊர் செல்வதோடு முடிந்துவிடும். மிஞ்சிப்போனால் கல்யாணம், கருமாதி என்று அடுத்த மாவட்டம் வரை தொடரும்.
கல்லூரி நாட்களிலும் அதே நிலைமை தான் , அளவிற்கு அதிகமான பயணங்கள் , ஆனால் அளவான தூரத்தில் ஆர்ப்பரிக்க மட்டுமே.
புத்தக வாசிப்பு நிச்சயம் ஒருவனை தேடலின் பயணத்தை நோக்கி நகர்த்தி செல்லும் என்பதை ஆணித்தனமாக நம்பும் திராவிடன் நான்.
கல்லூரிக்குள் கனவுகளை தொலைத்து அதை தேடி சென்னைக்கு இரயில் ஏறிய கோமாளி பொறியாளர்கள் வரிசையில் கடைசிக்கு முந்தைய ஆளாய் நின்ற கடைநிலை பொறியாளன்.
முதல் முறை சென்னையில் என் சுவாசம், திருவிழா கூட்டத்தில் மாட்டிய திருடன் போல சென்ட்ரல் இரயில் நிலையத்தை வெறிக்க வெறிக்க அதிகாலை 3 மணிக்கு பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றும் தென்மாவட்டங்களில் அனேக ஊர்களில் இரவு 9 மணிக்கே விளக்கை அணைத்து, மின்சாரத்தை மிச்சம் செய்யும் பழக்கம் உண்டு.
அதை பார்த்து வளர்ந்த எனக்கு ஏதோ பல மொழிகள் பேசும் வேறொரு கிரகத்திற்குள் நுழைந்த அனுபவத்தை சென்னை முதல் நொடியில் தந்தது.
அதே சிந்தனையில் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த என்னை, "ஆட்டோ சார் , ஆட்டோ சார்" என்ற கூவலோடு அலேக்காக கொண்டு சென்று ஆட்டோ ஸ்டேன்டின் முன் நிறுத்தும் நடைமுறை இரண்டு வருடமாகியும் இன்று வரை மாறவில்லை.
நான் தங்குமிடம் சரியாக அங்கிருந்து அரைக்கிலோ மீட்டர், அரை விபூதி அடித்த ஆட்டோக்காரர் உதவியோடு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு ஆறு கிலோமீட்டர் சுற்றி, வெறிச்சோடிய அதிகாலையிலும் இருநூறு ரூபாய் கொடுத்ததெல்லாம் ஏமாற்றத்தின் உச்சக்கட்டம்!!!
காலை ஏழு மணிக்கே சென்னை சுறுசுறுப்போடு பரப்பரப்பானது , பார்க்க பார்க்க வெறியேற்றும் நகரம். சோம்பேறிகளை வெளியேற்றும் நகரம்.
படித்தவன், படிக்காதவன் என்றும் அனைவரின் கால்களும் பறந்த படி எதையோ தேடிக் கொண்டிருந்தது.
நான் முன் நடந்து செல்ல எனக்கு பின்னே என்னை யாரோ பின்தொடர்வது போல் ஓர் உணர்வு முடிவில்லா ஓட்ட பந்தயம் போல.
போட்டிகள் நிறைந்த உலகத்தில், வாழ்க்கையின் முதல் பாடமாய் சுறுசுறுப்பை கண்ணெதிரே காட்டி நிற்காமல் ஓடச் செய்தது சென்னையின் முதல் நாள்!!!

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...
இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...