Skip to main content

‪கலைந்தோடும்‬ ‪கனவுகள்‬

மயான அமைதியில் அவன் கால்கள் எதையோ தேடி , நடந்து கொண்டிருந்தது.வாழ்க்கையில் முழுதும் தோற்கடிக்கப்பட்டவன் தான் .கையில் எதையோ தூக்கி கொண்டு வானுயர்ந்த கட்டிடங்களை அயர்ந்து பார்த்த படி நகர்ந்து கொண்டிருந்தான்.
நிழலான வாழக்கைக்கு இவன் ஒரு எடுத்துக்காட்டு. நிஜத்தை தொலைத்தவனை நிழல் என்று கூறுவது தான் உரித்தாக இருக்கும். தொலைத்தவன் என்ற சொல்லை கூட தொலைக்கடிக்கப்பட்டவன் என்று திருத்தி கொள்ளலாம்.
ஆம் , அவன் பெயர் வெற்றி , தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள விவசாய கிராமத்தின் முதல் நிலை வாரிசு. அவன் அப்பா படித்தவர் தான் ஆனால் பாவம் இந்நாட்டின் கல்வி முறையில் படித்தவர். அதனால் தான் என்னவோ விவசாய நிலத்தை விற்று அவர் ஆசையை அவன் மீது திணித்தவர்.
அவன் அம்மாவோ தமிழ் பண்பாட்டை கெடுக்காத ஆன்மீக அறிவு கொண்ட அடுப்பூதும் பெண்.
வெற்றியை பற்றி ஒரு வரியில் சொல்லப்போனால் தனியார் மயமாக்கப்பட்ட உலகில் தனக்கென்ற தனிமையில் கனவுகளை துழைத்து நிஜத்தை தேடும் நிழல்.
சிறு வயது முதலே அவன் வாழ்க்கையை பற்றி நினைத்து நினைத்து தினம் தினம் ஓடி கொண்டிருப்பவர் , அவன் அப்பா. நல்லவர் தான் அவர் மனதிற்கு பூட்டிட்டு மூளையின் பேச்சை கேட்க்கும் நல்லவர்.
தமிழில்லா தனியார் பள்ளியில் தன் மகன் படிப்பதை உற்றார் உறவினரிடம் சொல்லி பெருமை படும் அளவிற்கு நல்லவர். மகனுக்கு என்ன விருப்பம் என்பதை கேட்க நேரமில்லாத அளவிற்கு நல்லவர்.
வெற்றியோ கனவுகளை துழைத்து, அப்பா , அம்மா வின் ஆசைக்காக இன்ஜினீரிங் எடுத்து இப்போது வேலைக்காக சென்னையில் அலைந்து கொண்டிருக்கும் சராசரி மனிதன்.
வேலை கிடைக்கவில்லை என்பதற்காக இன்ஜினீரிங் ஒன்றும் தகுதி குறைந்த படிப்பு இல்லை. அறிவை அலசி பார்க்கும் படிப்பு. சிலருக்கு அது பிடிக்கும் , ஆனால் பலருக்கு பிடிக்காது.
இதற்கு காரணங்கள் தேவை இல்லை , காரணமே ஆசை தான். அரை ஆயுள் முழுதும் பிடிக்காத ஒரு படிப்பை பிடித்தவாறு அனைவரையும் நம்ப வைத்து நாமும் மனதால் வெந்து கொண்டு , முடிவில் வெந்தும் போய் விடுவோம்.
பொதுவான ஒரு அறிவை விதைக்காத கல்வி முறையில் இத்தலைமுறையினர் உயிரோடு நடமாடுவதே அரிதான விஷயம் தான்.
கல்வியை வைத்து காசாக்கும் வித்தையை கல்வி நிறுவனங்களும் , அங்கு வாங்கும் கல்வி சான்றிதழை வைத்து காசாக்கும் வித்தையை சராசரி மனிதனும் நன்கு புரிந்து வைத்துள்ளான்.
ஒருவனுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமா இருந்தால் தியாகம் செய்வதாய் நினைத்து விடுதியில் விற்றிடும் பெற்றோர் தான் இங்கு எத்தனை பேர். எண்ண முடியாது எண்ணிலும் அடங்காது.
அதே போல் தந்தையின் ஆசைக்காக தன் கனவை அடக்கி கொண்டு விடுதியில் விலைக்கு போன வெற்றுடல் உயிர் தான் வெற்றி.
வாக்குவாதமின்றி ஒரு கனவை கலைப்பது எவ்வளவு கொடுமையான செயல்.அதே போல் தான் இங்கு பலரும் நிழலாய் வாழும் நிஜங்களாய் தங்களை தாங்களே மாற்றி கொள்கின்றனர் , பெற்றோரின் ஆசைக்காக.
வெறும் காகிதங்களை வைத்து கொண்டு தன் மகனுக்கு அனைத்தும் கொடுத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டே அழிகிறது பெற்றோரின் வாழ்க்கை.
இத்தலைமுறையின் யதார்த்த பிரதிபலிப்பு தான் வெற்றி , அவனை தவிர்த்து இதை இப்போது படித்து கொண்டிருக்கும் பல நிழல்களுக்கும் இது பொருந்தும் அவர்களுக்கும் கனவுகள் தகர்ப்பட்டிருக்கலாம் , ஏன் பலராலும் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். நீங்களும் இத்தலைமுறையில் படித்தவர்கள் தான் அதனால் உங்களை குறை கூறி எவ்வித பலனும் இல்லை.
உங்களின் அடுத்த தலைமுறையை அவர்கள் விருப்ப படி வளர விடுங்கள் , முக்கியமாக உங்களின் ஆசைக்காக உங்கள் குழந்தைகளை விடுதியில் விற்காதீர்கள்.
மதிப்பெண் வாழ்க்கையை மறந்தொழித்து மகனின் ஆசையை ஆராயுங்கள்.
மாற்ற முடியாத கல்வி முறையில் நம்மை நாமே மாற்றி கொள்வது சாலச்சிறந்தது .
அடுத்த தலைமுறையாவது கனவுகளை நிஜமாக்கி அதில் வாழட்டும்.


Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...