Skip to main content

‪கலைந்தோடும்‬ ‪கனவுகள்‬

மயான அமைதியில் அவன் கால்கள் எதையோ தேடி , நடந்து கொண்டிருந்தது.வாழ்க்கையில் முழுதும் தோற்கடிக்கப்பட்டவன் தான் .கையில் எதையோ தூக்கி கொண்டு வானுயர்ந்த கட்டிடங்களை அயர்ந்து பார்த்த படி நகர்ந்து கொண்டிருந்தான்.
நிழலான வாழக்கைக்கு இவன் ஒரு எடுத்துக்காட்டு. நிஜத்தை தொலைத்தவனை நிழல் என்று கூறுவது தான் உரித்தாக இருக்கும். தொலைத்தவன் என்ற சொல்லை கூட தொலைக்கடிக்கப்பட்டவன் என்று திருத்தி கொள்ளலாம்.
ஆம் , அவன் பெயர் வெற்றி , தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள விவசாய கிராமத்தின் முதல் நிலை வாரிசு. அவன் அப்பா படித்தவர் தான் ஆனால் பாவம் இந்நாட்டின் கல்வி முறையில் படித்தவர். அதனால் தான் என்னவோ விவசாய நிலத்தை விற்று அவர் ஆசையை அவன் மீது திணித்தவர்.
அவன் அம்மாவோ தமிழ் பண்பாட்டை கெடுக்காத ஆன்மீக அறிவு கொண்ட அடுப்பூதும் பெண்.
வெற்றியை பற்றி ஒரு வரியில் சொல்லப்போனால் தனியார் மயமாக்கப்பட்ட உலகில் தனக்கென்ற தனிமையில் கனவுகளை துழைத்து நிஜத்தை தேடும் நிழல்.
சிறு வயது முதலே அவன் வாழ்க்கையை பற்றி நினைத்து நினைத்து தினம் தினம் ஓடி கொண்டிருப்பவர் , அவன் அப்பா. நல்லவர் தான் அவர் மனதிற்கு பூட்டிட்டு மூளையின் பேச்சை கேட்க்கும் நல்லவர்.
தமிழில்லா தனியார் பள்ளியில் தன் மகன் படிப்பதை உற்றார் உறவினரிடம் சொல்லி பெருமை படும் அளவிற்கு நல்லவர். மகனுக்கு என்ன விருப்பம் என்பதை கேட்க நேரமில்லாத அளவிற்கு நல்லவர்.
வெற்றியோ கனவுகளை துழைத்து, அப்பா , அம்மா வின் ஆசைக்காக இன்ஜினீரிங் எடுத்து இப்போது வேலைக்காக சென்னையில் அலைந்து கொண்டிருக்கும் சராசரி மனிதன்.
வேலை கிடைக்கவில்லை என்பதற்காக இன்ஜினீரிங் ஒன்றும் தகுதி குறைந்த படிப்பு இல்லை. அறிவை அலசி பார்க்கும் படிப்பு. சிலருக்கு அது பிடிக்கும் , ஆனால் பலருக்கு பிடிக்காது.
இதற்கு காரணங்கள் தேவை இல்லை , காரணமே ஆசை தான். அரை ஆயுள் முழுதும் பிடிக்காத ஒரு படிப்பை பிடித்தவாறு அனைவரையும் நம்ப வைத்து நாமும் மனதால் வெந்து கொண்டு , முடிவில் வெந்தும் போய் விடுவோம்.
பொதுவான ஒரு அறிவை விதைக்காத கல்வி முறையில் இத்தலைமுறையினர் உயிரோடு நடமாடுவதே அரிதான விஷயம் தான்.
கல்வியை வைத்து காசாக்கும் வித்தையை கல்வி நிறுவனங்களும் , அங்கு வாங்கும் கல்வி சான்றிதழை வைத்து காசாக்கும் வித்தையை சராசரி மனிதனும் நன்கு புரிந்து வைத்துள்ளான்.
ஒருவனுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமா இருந்தால் தியாகம் செய்வதாய் நினைத்து விடுதியில் விற்றிடும் பெற்றோர் தான் இங்கு எத்தனை பேர். எண்ண முடியாது எண்ணிலும் அடங்காது.
அதே போல் தந்தையின் ஆசைக்காக தன் கனவை அடக்கி கொண்டு விடுதியில் விலைக்கு போன வெற்றுடல் உயிர் தான் வெற்றி.
வாக்குவாதமின்றி ஒரு கனவை கலைப்பது எவ்வளவு கொடுமையான செயல்.அதே போல் தான் இங்கு பலரும் நிழலாய் வாழும் நிஜங்களாய் தங்களை தாங்களே மாற்றி கொள்கின்றனர் , பெற்றோரின் ஆசைக்காக.
வெறும் காகிதங்களை வைத்து கொண்டு தன் மகனுக்கு அனைத்தும் கொடுத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டே அழிகிறது பெற்றோரின் வாழ்க்கை.
இத்தலைமுறையின் யதார்த்த பிரதிபலிப்பு தான் வெற்றி , அவனை தவிர்த்து இதை இப்போது படித்து கொண்டிருக்கும் பல நிழல்களுக்கும் இது பொருந்தும் அவர்களுக்கும் கனவுகள் தகர்ப்பட்டிருக்கலாம் , ஏன் பலராலும் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். நீங்களும் இத்தலைமுறையில் படித்தவர்கள் தான் அதனால் உங்களை குறை கூறி எவ்வித பலனும் இல்லை.
உங்களின் அடுத்த தலைமுறையை அவர்கள் விருப்ப படி வளர விடுங்கள் , முக்கியமாக உங்களின் ஆசைக்காக உங்கள் குழந்தைகளை விடுதியில் விற்காதீர்கள்.
மதிப்பெண் வாழ்க்கையை மறந்தொழித்து மகனின் ஆசையை ஆராயுங்கள்.
மாற்ற முடியாத கல்வி முறையில் நம்மை நாமே மாற்றி கொள்வது சாலச்சிறந்தது .
அடுத்த தலைமுறையாவது கனவுகளை நிஜமாக்கி அதில் வாழட்டும்.


Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...