Skip to main content

‪‎மனிதம்‬



மனிதம்
மறைந்ததா ?
இல்லை மடிந்ததா ?
மறைந்தது என்றால்
மறைத்தது யார்?
மடிந்தது என்றால்
அழித்தது யார்?
தன் நலத்தை
தேடும் அவனின்
ஆறறிவு அழித்ததோ ?
இல்லை , தற்பெருமை
பேசும் அவனின் நாவறிவு
மறைத்ததோ ?
உடலில்லா மனதிற்க்கு
வஞ்சபுகழ்ச்சி ஏராளம்
அறுபட்ட உடலிற்க்கு
வஞ்சக இகழ்ச்சி தாராளம்
பிஞ்சென்று பாராமல்
பிஞ்சிலே தோலுரிப்பான்
பின்னூட்ட நிகழ்வையெல்லாம்
ஒளித்திரையில் ஏற்றி வைப்பான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
அடிப்பட்டு கிடந்தாலோ
அமைதியாய் நகர்ந்திடுவான்
அதைவைத்து கதைபேசி
ஒரு வாரம் கடந்திடுவான்
பணமான கல்விக்குள்
மனிதத்தை மறைத்திடுவான்
கல்வியின் பணத்திற்க்கு
மனிதத்தை அழித்திடுவான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
அடுப்பூதும் பெண்களையும்
அரியணையில் ஏற வைப்பான்
அதில் உள்ள சூழ்ச்சிகளை
அவன் மட்டும் அறிந்திருப்பான்
உதவியென்று கேட்டாலோ
உமிழ்ந்தபடி சிரித்திடுவான்
ஊர்உலகம் எல்லாவும் அவன்
செய்ததாய் பறை அடித்திடுவான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
சாதியென்று சாமியென்று
சங்கத்தை பிரித்திடுவான்
காதலிக்கும் ஜோடிகளை
கழுத்தறுத்து கண் வியர்த்திடுவான்
ஏழையென்று அறிந்தாலோ
ஏளனமாய் சிரித்திடுவான்
நேர்கொண்டு பார்த்தாலோ
மகிழ்ச்சியாய் நடித்திடுவான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
மறைந்து போன மனிதம்
அழுக்கான சில உயிருக்குள்
எங்கோ இருக்கலாம்
இருந்தால் அழித்திடுங்கள்
அது அழிந்து ஆயுள்கள் பல ஆயிற்று..

Comments

Popular posts from this blog

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப...