Skip to main content

Posts

Showing posts from November, 2015

‪பதில்‬ ‪இல்லா‬ ‪‎வினா‬ ?

நன்றாக நினைவிருக்கிறது , அவன் பெயர் சபீர் என்னுடைய அரைட்ரவுசர் தோழன். ஓரே பள்ளியில் தான் ஒன்றாக படித்தோம். சாதியும் , மதமும் அறியாத பருவமது. விடுமுறை நாட்களில் நிற்காமல் கிளம்பிவிடும் எங்களின் மிதிவண்டி சக்கரம். ஊர்காவல் அய்யனார் தொடங்கி , மாதா கோவில் , மதுரைவீரன் சிலை , மரிகொழுந்து சோடா , மசூதி தொழுகை , பால் போன்ற ஐஸ்கீரிம் , பண்ருட்டி முருக்கு , பட்டாம்பூச்சி இறக்கை , பொக்கவாய் கிழவி என்று சூரியன் எங்களை இருளில் மூழ்கும் வரை நிற்காமல் சுற்றும் எங்கள் மிதிவண்டி வீல்கள். அப்போது நிச்சயம் நாங்கள் அறிந்திருக்கவில்லை சாதியை பற்றியும் , மதத்தை பற்றியும். அந்த வயதில் நாங்கள் சொல்லும் "சாமி சத்தியமா டா" என்ற ஒற்றை வார்த்தையே அதற்கு சாட்சி. நான் "அம்மன் சத்தியம் என்றோ , முருகன் சத்தியம் என்றோ " கூறியது கிடையாது. சபீரும் " அல்லா சத்தியம் " என்று சொன்னது கிடையாது. உடனிருந்த இன்னொரு நண்பன் ஆல்பட்டும் " இயேசு சத்தியம் " என்று கூறிய நியாபகம் இல்லை. அந்த வயதில் "சாமி" என்ற ஒற்றை வார்த்தையில் முற்று பெருகிறது எங்களி

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...

கடைநிலை‬ ‪ ‎சிரிப்பு‬

கார்த்தியின் கண்கள் தனிமையில் கலங்கி கொண்டிருந்தது. வெளிநாட்டு நிறுவனத்தில் வேர்வையில்லா வேலைதான்.  அழகான துணைவியும் அயல்நாட்டு நிறுவனத்தின் அடிமைதான். ஆனாலும் ஏனோ அவன் கண்கள் கலங்கிகொண்டிருந்தது. மூன்று மாதம் முன்புதான் விவசாய நிலத்தை விலைக்கு வைத்து , வேளச்சேரியில் அழகு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தை தனக்கானதாக இருபது வருட ஒப்பந்தத்தோடு தன்வசப்படுத்தியிருந்தான். அவன் தந்தைக்கு துளியும் விருப்பமில்லை தான் , என்ன செய்வது இத்தலைமுறை பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு தன்னையே அடிமையாக்கிவிடுகின்றனர். சுருக்கமாக சொன்னால் இத்தலைமுறை பெற்றோரின் யதார்த்த பிரதிபளிப்பு அவனின் தந்தை. ஏதேதோ சொல்லி தனிமைதளத்தை வாங்கிவிட்டான் . பிறகு எதற்கு வருந்திகொண்டிருக்கிறான் , அதுவும் தனிமையில் ... சென்னையின் அடைமழைக்கு அவனின் இருபது வருட சுமையும் சுக்குநூறானது.யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை. அணிந்திருந்த உடையோடு அருகிலிருந்த அரசுபள்ளியில் அநாதையாய் ஒரு தஞ்சம். அப்போதும் அடங்கவில்லை அவன் துணைவியின் ஆசை , இதுக்குதான் திருவான்மியூர்ல வாங்கலாம்ன்னு சொன்னேன் " என்

சுழலும் சக்கரம் பகுதி - 5

ஆனால் , இவை அனைத்தையும் வெளியிலிருந்து பார்த்து கொண்டிருந்த ஆனந்திற்கு பலவித யோசனை. கடன் தான கேட்கிறார் , எப்படியும் திரும்ப கட்ட போவது தான , அதுக்கு ஏன் இப்படி அவமானபடுத்துறாங்க , என்று தன் மனதுக்குள் எண்ணி கொண்டான். அப்பா கடனெல்லாம் வாங்க வேணாம் , கிளம்புங்க போகலாம் என்று சொல்லதுடித்த மனதிற்க்கு , அவனின் புதிதான குடிகார மூளை இடம் கொடுக்காமல் , கொஞ்சம் விலகி நிற்க செய்தது. ஆனால் , வீட்டிற்குள் கைகட்டி நின்றிருந்த கைலாசமோ , இது தான் நான் வாங்கும் கடைசி கடன் , இனி என் பிள்ளை வந்திடுவான் , என் கஷ்டமெல்லா தீந்திடும் , என்று ஆகாய பந்தலில் கோட்டை கட்டி கொண்டிருந்தார். செட்டியாரின் கால்கள் உணவுண்ட கையோடு மெதுவாக நகர்ந்தது. அருகிலிருந்த நீர்குவளையில் கையை நனைத்துவிட்டு , அவருக்கான சிம்மாசனத்தில் கொஞ்சம் அயர்ந்தவராய் தன்னை சாய்த்துகொண்டார். "எவ்வளவு டா பணம் கேட்ட ? என்ற செட்டியாரின் வார்த்தை கைலாசத்திற்க்கு கேட்டதோ என்னவோ , அதை ஜன்னல் வழியே பார்த்து கொண்டிருந்த ஆனந்தின் செவிகளுக்கு தேனாக பாய்ந்தது. அய்யா , "5000 பையனுக்கு பீஸ் கட்ட வேணும்ங்க" கூட 500 சேர்த்து தா

சுழலும் சக்கரம் பகுதி - 4

வெளியில் நின்றிருந்த ஆனந்தின் அலைபேசி மாறாத ஆங்கிலேய பாடலில் அலறியது. இம்முறை அகோரியின் குரலுக்கு மாற்றாக அவனுக்கானவளின் குரல். " எங்கடா இருக்க , காலைலயிருந்து phone யே பண்ணல " "அதெல்லாம் ஒன்னும் இல்லடி", அப்பா கூட கொஞ்சம் வெளிய வந்தேன் அதுதான் வேற ஒன்னுமில்ல ஓ , சரி சரி சரி , நான் அப்புறம் கூப்புடுறேன் என்ற சொல்லி தொடர்பை துண்டித்தான். உள்ளே , செட்டியாரின் குரல் மேலும் வலுத்தது. கைலாசம் தயங்கி தயங்கி "அது ஒன்னுமில்லைங்க கொஞ்சம் பணம் வேணும் , பையனுக்கு பீஸ் கட்டனும் " ஏன்டா , இப்ப வரைக்கும் வாங்குன பணத்துக்கே வட்டி கட்ட வக்கில்ல , இதுல இன்னு பணம் வேணும்ன்னு வந்து நிக்கர " அதற்கு பதில் அளிக்க துடித்த கைலாசத்தின் வாயிற்க்கு செட்டியாரின் துணைவி சற்றே கடிவாளம் போட்டார். காலங்காத்தால சாப்புடுற நேரத்துக்கு கரக்டா வந்து உசிர எடுக்குதுக ... எத்தனவாட்டி தான் சொல்ரது ... செட்டியாரை பார்த்து "ஏங்க , நீங்க வந்து சாப்புடுங்க , என்றாள். சரி , இங்கையே இருடா , கொஞ்சம் வயித்துக்கு போட்டுட்டு வந்திருரேன்" என்று சொல்லிவிட்டு செட்டியா

‪‎மழையில்‬ ‪காதல்‬

லேசான மழைதூரலில் ஒதுங்கியது எங்கள் கால்கள் .. அவள் , "நீ என்னை விட அழகா என்றாள்" "உன் அழகில் தானே தோற்று போனேன்" ஓ சரி சரி என்று புன்னகைத்தவாரே "குளிரில் நடுங்குகிறது என் உடம்பு" என்றாள் "என் கையை பற்றி கொள்" என்றேன். "இன்னும் என் உடல் நடுக்கம் குறையவில்லை , உறைந்து போய்விடும் போல" "என் இதழின் சூட்டை வேண்டுமானல் உறைந்து போன உன் உடலிற்க்கு மருந்தாக அளிக்கவா ? என்றேன். "என்னுடல் உன்னுடலாகி நாட்களாகிவிட்டது , இனியும் எதற்கு இந்த கேள்வி" என்றாள் அவள் . "இருந்தும் , என் இதழ்கள் தயங்குகிறதே ? " "ம்ம்" என்றாள் முகத்தை சுழித்துகொண்டு "மழை கூட என்னை முழுவதும் தொட்டுவிட்டது " என்றாள் சினுங்கியபடியே "மழையின் வழியே உன் உடலை நனைத்தவனே நான் தான்" என்றேன். "நீயாக எப்போது என்னை நனைக்க போகிறாயோ ? அமைதியாய் அவள் விழியை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன். சரி கிளம்பலாம் , வாகன பயணத்திலாவது " உன் உடல் சாய்ந்து கொள்கிறேன்" என்றாள் சிரிப்போடு என் இதழும் புன்

சுழலும் சக்கரம் பகுதி - 3

நீ இங்கையே இருப்பா நான் போய் செட்டியார பாத்துட்டு வரேன் என்று தயக்கத்துடன் உள்ளே நகர்ந்தார். செட்டியார் பணம் எனும் போதைக்கு தன்னை அடிமை படுத்தி கொண்டவர்.அவ்வூரில் உள்ள அனைத்து ஏழை வர்க்கத்தையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதில் கைதேர்ந்தவர். தேக்கு நிலகதவை உரசாமல் நின்று கொண்டிருந்தது கைலாசத்தின் கால்கள் , மெல்ல அவர் குரல் அழைத்தது. அய்யா , பெரியபையன் வந்திருக்கேன் . இருடா வரேன்" உள்ளிருந்து எதிர்குரல் ஒலித்தது. பெரியபையன் என்பது அவ்வூரில் உள்ள ஆதிக்கசாதிகளால் அன்போடு அழைக்கப்படும் அடிமை பெயர். செட்டியார் வந்தாகிவிட்டது. நெற்றியில் விபூதியிட்டு , கதர் ஆடையில் முதலாளித்துவ தோரணையில் மிடுக்காக வெளியே வந்தார். அவரை பார்த்ததும் கைலாசத்தின் கைகள் தானாகவே அவரை வணங்கியது . வெளியில் ஆனந்த் குதூகலத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தான். காரணம் தன் தந்தையிடம் அடுத்து ஒரு 50000 த்திற்கு வரும் வழியிலேயே சக்கரத்தை சுழலவிட்டிருக்கிறான் அல்லவா ... அவன் தந்தையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும். இது இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்றால் எப்படியேனும் கஷ்டப்பட்டு தன்னிடம் க

‪‎சுழலும்‬ ‪சக்கரம்‬ பகுதி ‪- 2‬

சரி இருப்பா செட்டியார்ட்ட கேட்டு பாக்குரேன் என்று வெளியே வந்தவர் தன் மகனையும் பின்னாள் ஏற்றி கொண்டு மிதிபலகையை அமுக்கினார் சுழன்று கொண்டே நகர்ந்தது சக்கரம். மிதிவண்டியின் சக்கரம் சுழல்வதை விட ஆனந்தின் மனம் இன்னும் அதிகமாக பதறி கொண்டிருந்தது. எங்கே பணம் வராமல் போய்விடுமோ என்று , சிந்தித்தபடியே உர் என்று பின்னாள் அமர்ந்திருந்தான். ஆனால் கைலாசமோ மனம் முழுக்க ரனத்துடன் செட்டியார் என்ன சொல்வாரோ என்ற பதற்றத்தில் மிதிவண்டியை அழுத்த முடியாமல் அழுத்தி கொண்டிருந்தார். அதற்குள்ளாகவே மீண்டும் அலற துவங்கியது ஆனந்தின் கைபேசி. மீண்டும் அதே அகோர குரல் ஆனந்தை பேசவிடாமல் ஆவேசமாக அலறியது. மெளனத்தை பதிலாக அளித்துவிட்டு கைலாசத்திடம் தனது ஆவேசத்தை இன்னும் ஆக்ரோசமாக்கினான். பாவம் அரைஆயுளை கடந்த கைலாசம் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு அழுவதுதான் ஒரே வழி ஆனால் அதற்கும் ஆண் குணம் இடம் கொடுக்கவில்லை. கைலாசம் கடின உழைப்பாளி தான் சலவைதொழில் செய்தே தன் மகனை சங்கடமின்றி வளர்த்தவர். தான் பெற்ற துயரத்தை நிச்சயம் தன் பிள்ளை பெறக்கூடாது என்று நினைத்துகொண்டே தன் நாட்களை நகர்த்தியவர். விழிகளுக்கு இடை

‪சுழலும்‬ ‪சக்கரம்‬ பகுதி - 1

ஆனந்தின் கால்கள் அங்கும் இங்கும் ஆடிய வாரே அவன் தந்தையை எதிர் நோக்கி காத்துகொண்டிருந்தன. அவன் தந்தை தணியாத வெயிலில் தள்ளாடியபடி மிதிவண்டியை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நகர்ந்தார். தந்தையை பல நாள் பார்க்காதவன் போல் ஆனந்தின் முகம் முழுக்க பூரிப்பு. பூரிப்பின் ஊடே ஆனந்தின் மொபைல் ஆங்கிலேய பாடலில் அலறியது. பச்சைபட்டனை அழுத்தியதும் ஓர் அகோர குரல் "மச்சி எங்கடா இருக்க , எவ்வளவு நேரம் டா உனக்காக வெயிட் பண்றது , பசங்க எல்லாம் உன் மேல செம காண்டல இருக்காங்க .. கிளம்பிட்டையா" என அவன் வினவ ஆனந்தும் "கிளம்பிட்டேன் மச்சி இப்ப தான் அப்பா வந்தாரு , அவருட்ட காசு வாங்கிட்டு இப்ப வந்திடுவேன் என்றான் .. சரி சரி லேட்டா வந்தாலும் வர்ரப்ப கையில காசு கொண்டு வந்திரு , இன்னைக்கு பாண்டிசேரி போயே ஆகனும். சரக்கு அடுச்சே ஆகனும் . கண்டிப்பா மச்சி சரி இரு அப்பாட்ட காசு உஷார் பண்ணிட்டு கூப்புடுரேன் . சரி டா .. கைலாசம் அதற்குள் தன் அயர்ந்த தொண்டைக்கு நீர் ஊற்றி அமைதி படுத்திகொண்டிருந்தார் . ஆனந்தின் குரல் ஒலித்தது "அப்பா பஸ்க்கு டைம் ஆச்சு" கைலாசம் கணத்த குரலில் "ஏன்பா

நானும் ஒரு பொறியாளன் - 1

பொறியியல்(Engineering) பொதுவாக  விசித்திரமான வினோதம் கலந்த ஒரு படிப்பு  அதுவும் நமது இந்தியாவில் வார்த்தைக்கே இடமின்றி வாய் பிளக்கும் அளவிற்கு அசாத்தியமாக  அனைவரையும் கவர்ந்திளுக்கும் கவர்ச்சி படிப்பு.பொறியாளன் ஆற்றல்மிக்கவன் , நல்ல திறமைசாலி , அறிவும் திறனும் கொண்டு புதியதோர் கண்டுபுடிப்பு என்றொரு வார்த்தையை இன்றளவும் தேடிகொண்டே நகர்பவன்.ஒரு பொறியியல் படித்த மாணவனாக நான் கடந்து வந்த வழியே பின்னோக்கி ஒரு நினைவு . பொறியியல் படிக்கும்  அனைத்து மாணவர்களுக்கும் பெரிய இடியாக அமைவது M1 & M2  எனப்படும் இந்த இரண்டு பெரும் கண்டங்கள். அனேக பொறியியல் மாணவர்களுக்கும் இதை கண்டாலே ஆகாது. முதல் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று விட வேண்டும் என்றும் தூங்காமல் கண் விழித்து காபி குடித்து படித்தாலும் பிட் அடிக்க விடும் நல்ல professor வரும் வரை அதுவும் நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். (முதல் நிலை மாணவர்களுக்கு பொருந்தாது ) Time Management  என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை நிச்சயம் ஒரு பொறியியல் மாணவனால் மட்டுமே சொல்ல முடியும்.காலை 9.00 மணிக்கு விழித்த கண்கள் 9.10 ற்கு கல்லூரி வளாகத்துள் கன்னியரை