லேசான மழைதூரலில்
ஒதுங்கியது எங்கள் கால்கள் ..
ஒதுங்கியது எங்கள் கால்கள் ..
அவள் ,
"நீ என்னை விட அழகா என்றாள்"
"உன் அழகில் தானே தோற்று போனேன்"
ஓ சரி சரி என்று புன்னகைத்தவாரே "குளிரில் நடுங்குகிறது என் உடம்பு" என்றாள்
"என் கையை பற்றி கொள்" என்றேன்.
"இன்னும் என் உடல் நடுக்கம் குறையவில்லை , உறைந்து போய்விடும் போல"
"என் இதழின் சூட்டை வேண்டுமானல் உறைந்து போன உன் உடலிற்க்கு மருந்தாக அளிக்கவா ? என்றேன்.
"என்னுடல் உன்னுடலாகி நாட்களாகிவிட்டது , இனியும் எதற்கு இந்த கேள்வி" என்றாள் அவள் .
"இருந்தும் , என் இதழ்கள் தயங்குகிறதே ? "
"ம்ம்" என்றாள் முகத்தை சுழித்துகொண்டு
"மழை கூட என்னை முழுவதும் தொட்டுவிட்டது " என்றாள் சினுங்கியபடியே
"மழையின் வழியே உன் உடலை நனைத்தவனே நான் தான்" என்றேன்.
"நீயாக எப்போது என்னை நனைக்க போகிறாயோ ?
அமைதியாய் அவள் விழியை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன்.
சரி கிளம்பலாம் , வாகன பயணத்திலாவது " உன் உடல் சாய்ந்து கொள்கிறேன்" என்றாள் சிரிப்போடு
என் இதழும் புன்னகைத்தவரே அவளோடு நகர்ந்தது.
Comments
Post a Comment