Skip to main content

நானும் ஒரு பொறியாளன் - 1

பொறியியல்(Engineering) பொதுவாக  விசித்திரமான வினோதம் கலந்த ஒரு படிப்பு  அதுவும் நமது இந்தியாவில் வார்த்தைக்கே இடமின்றி வாய் பிளக்கும் அளவிற்கு அசாத்தியமாக  அனைவரையும் கவர்ந்திளுக்கும் கவர்ச்சி படிப்பு.பொறியாளன் ஆற்றல்மிக்கவன் , நல்ல திறமைசாலி , அறிவும் திறனும் கொண்டு புதியதோர் கண்டுபுடிப்பு என்றொரு வார்த்தையை இன்றளவும் தேடிகொண்டே நகர்பவன்.ஒரு பொறியியல் படித்த மாணவனாக நான் கடந்து வந்த வழியே பின்னோக்கி ஒரு நினைவு .

பொறியியல் படிக்கும்  அனைத்து மாணவர்களுக்கும் பெரிய இடியாக அமைவது M1 & M2  எனப்படும் இந்த இரண்டு பெரும் கண்டங்கள். அனேக பொறியியல் மாணவர்களுக்கும் இதை கண்டாலே ஆகாது. முதல் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று விட வேண்டும் என்றும் தூங்காமல் கண் விழித்து காபி குடித்து படித்தாலும் பிட் அடிக்க விடும் நல்ல professor வரும் வரை அதுவும் நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். (முதல் நிலை மாணவர்களுக்கு பொருந்தாது )

Time Management  என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை நிச்சயம் ஒரு பொறியியல் மாணவனால் மட்டுமே சொல்ல முடியும்.காலை 9.00 மணிக்கு விழித்த கண்கள் 9.10 ற்கு கல்லூரி வளாகத்துள் கன்னியரை கண்டு ரசித்து கொண்டு இருக்கும். இதற்கு Adidas , Playboy , Park avenue போன்ற நல்ல பிராண்ட்களின் Perfume வாசம் அவ்வப்போது உதவி செய்து கொண்டே இருக்கும்.

பொறியியல்  மாணவனுக்கு எதுவுமே தெரியாது ஆனால் நிச்சயம் யோகா தெரிந்திருக்கும் , அது தெரியாமலா professor  நடத்தி கொண்டிருக்கும் போதே உட்கார்ந்தபடி கண்கள் மூடாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறேன் . என்னை பொறுத்த வரை அதுவும் ஒரு ஜென் நிலையே ..

தேர்விற்கு கடுகளவு படிக்கவில்லை என்றாலும் கடலளவு பதில் எழுதும்
திறமையை நிச்சயம் பொறியியல் படிப்பால் மட்டுமே கொடுக்க முடியும் (அதில் Arrear வைப்பது தனிகதை).

ராமானுஜமே பிரமித்து போகும் அளவிற்கு சரியாக 75 % attendance வைக்கும் திறமையையும் நிச்சயம் பொறியியல் மாணவர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

தரம் வாய்ந்த ஒரு பொறியியல் மாணவன் ஒரு நாள் இரவில் மொத்தபாடத்தையும் முடித்துவிட்டு , அதை  2 மணிநேரத்தில் மற்ற மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் வித்தை தான் பொறியியலின் பாரம்பரிய கலாச்சாரம்.

பொறியியல் மாணவனால் ஒரு காரை வடிமைக்க முடியும் , கம்ப்யூட்டர்ஐ மாற்றி அமைக்க முடியும் , ஏன் விண்வெளிக்கே ராக்கெட் அனுப்ப முடியும் ஆனால் நிச்சயம் ஒரு பெண்ணின் மனதை தான் வசபடுத்துவதில் இன்றளவும் தற்குறிகள் தான் .

எல்லா பிரச்சனைகளுக்கும்  பொறியியல் மாணவன் இடத்தில் தீர்வு உண்டு , அதே சமயம் பிரச்சனைகளை உருவாக்கும் ஆற்றலையும் இதே பொறியியல் தான் எங்களுக்கு பயிற்றுவித்திருக்கிறது.

அதனால் தான் பொறியியல் மிகவும் விசித்திரமான வினோதம் கலந்த ஒரு படிப்பு என்று தொடங்கும் போதே சொல்லி கொண்டேன் .

பொறியியல் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் லேப்டாப்லும் ஹிட்டென் போல்டெர் (Hidden Folder)   என்ற ஒன்று நிச்சயம் இருக்கும் . அது இங்கே சென்சர் கட் செய்ய படுவதால் , அதற்குள் இருக்கும் விசையங்களை கடவுள் மட்டுமே அறிவார்.


Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...