Skip to main content

நானும் ஒரு பொறியாளன் - 1

பொறியியல்(Engineering) பொதுவாக  விசித்திரமான வினோதம் கலந்த ஒரு படிப்பு  அதுவும் நமது இந்தியாவில் வார்த்தைக்கே இடமின்றி வாய் பிளக்கும் அளவிற்கு அசாத்தியமாக  அனைவரையும் கவர்ந்திளுக்கும் கவர்ச்சி படிப்பு.பொறியாளன் ஆற்றல்மிக்கவன் , நல்ல திறமைசாலி , அறிவும் திறனும் கொண்டு புதியதோர் கண்டுபுடிப்பு என்றொரு வார்த்தையை இன்றளவும் தேடிகொண்டே நகர்பவன்.ஒரு பொறியியல் படித்த மாணவனாக நான் கடந்து வந்த வழியே பின்னோக்கி ஒரு நினைவு .

பொறியியல் படிக்கும்  அனைத்து மாணவர்களுக்கும் பெரிய இடியாக அமைவது M1 & M2  எனப்படும் இந்த இரண்டு பெரும் கண்டங்கள். அனேக பொறியியல் மாணவர்களுக்கும் இதை கண்டாலே ஆகாது. முதல் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று விட வேண்டும் என்றும் தூங்காமல் கண் விழித்து காபி குடித்து படித்தாலும் பிட் அடிக்க விடும் நல்ல professor வரும் வரை அதுவும் நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். (முதல் நிலை மாணவர்களுக்கு பொருந்தாது )

Time Management  என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை நிச்சயம் ஒரு பொறியியல் மாணவனால் மட்டுமே சொல்ல முடியும்.காலை 9.00 மணிக்கு விழித்த கண்கள் 9.10 ற்கு கல்லூரி வளாகத்துள் கன்னியரை கண்டு ரசித்து கொண்டு இருக்கும். இதற்கு Adidas , Playboy , Park avenue போன்ற நல்ல பிராண்ட்களின் Perfume வாசம் அவ்வப்போது உதவி செய்து கொண்டே இருக்கும்.

பொறியியல்  மாணவனுக்கு எதுவுமே தெரியாது ஆனால் நிச்சயம் யோகா தெரிந்திருக்கும் , அது தெரியாமலா professor  நடத்தி கொண்டிருக்கும் போதே உட்கார்ந்தபடி கண்கள் மூடாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறேன் . என்னை பொறுத்த வரை அதுவும் ஒரு ஜென் நிலையே ..

தேர்விற்கு கடுகளவு படிக்கவில்லை என்றாலும் கடலளவு பதில் எழுதும்
திறமையை நிச்சயம் பொறியியல் படிப்பால் மட்டுமே கொடுக்க முடியும் (அதில் Arrear வைப்பது தனிகதை).

ராமானுஜமே பிரமித்து போகும் அளவிற்கு சரியாக 75 % attendance வைக்கும் திறமையையும் நிச்சயம் பொறியியல் மாணவர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

தரம் வாய்ந்த ஒரு பொறியியல் மாணவன் ஒரு நாள் இரவில் மொத்தபாடத்தையும் முடித்துவிட்டு , அதை  2 மணிநேரத்தில் மற்ற மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் வித்தை தான் பொறியியலின் பாரம்பரிய கலாச்சாரம்.

பொறியியல் மாணவனால் ஒரு காரை வடிமைக்க முடியும் , கம்ப்யூட்டர்ஐ மாற்றி அமைக்க முடியும் , ஏன் விண்வெளிக்கே ராக்கெட் அனுப்ப முடியும் ஆனால் நிச்சயம் ஒரு பெண்ணின் மனதை தான் வசபடுத்துவதில் இன்றளவும் தற்குறிகள் தான் .

எல்லா பிரச்சனைகளுக்கும்  பொறியியல் மாணவன் இடத்தில் தீர்வு உண்டு , அதே சமயம் பிரச்சனைகளை உருவாக்கும் ஆற்றலையும் இதே பொறியியல் தான் எங்களுக்கு பயிற்றுவித்திருக்கிறது.

அதனால் தான் பொறியியல் மிகவும் விசித்திரமான வினோதம் கலந்த ஒரு படிப்பு என்று தொடங்கும் போதே சொல்லி கொண்டேன் .

பொறியியல் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் லேப்டாப்லும் ஹிட்டென் போல்டெர் (Hidden Folder)   என்ற ஒன்று நிச்சயம் இருக்கும் . அது இங்கே சென்சர் கட் செய்ய படுவதால் , அதற்குள் இருக்கும் விசையங்களை கடவுள் மட்டுமே அறிவார்.


Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...