Skip to main content

‪‎சுழலும்‬ ‪சக்கரம்‬ பகுதி ‪- 2‬


சரி இருப்பா செட்டியார்ட்ட கேட்டு பாக்குரேன் என்று வெளியே வந்தவர் தன் மகனையும் பின்னாள் ஏற்றி கொண்டு மிதிபலகையை அமுக்கினார் சுழன்று கொண்டே நகர்ந்தது சக்கரம்.
மிதிவண்டியின் சக்கரம் சுழல்வதை விட ஆனந்தின் மனம் இன்னும் அதிகமாக பதறி கொண்டிருந்தது.
எங்கே பணம் வராமல் போய்விடுமோ என்று , சிந்தித்தபடியே உர் என்று பின்னாள் அமர்ந்திருந்தான்.
ஆனால் கைலாசமோ மனம் முழுக்க ரனத்துடன் செட்டியார் என்ன சொல்வாரோ என்ற பதற்றத்தில் மிதிவண்டியை அழுத்த முடியாமல் அழுத்தி கொண்டிருந்தார்.
அதற்குள்ளாகவே மீண்டும் அலற துவங்கியது ஆனந்தின் கைபேசி.
மீண்டும் அதே அகோர குரல் ஆனந்தை பேசவிடாமல் ஆவேசமாக அலறியது.
மெளனத்தை பதிலாக அளித்துவிட்டு கைலாசத்திடம் தனது ஆவேசத்தை இன்னும் ஆக்ரோசமாக்கினான்.
பாவம் அரைஆயுளை கடந்த கைலாசம் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு அழுவதுதான் ஒரே வழி ஆனால் அதற்கும் ஆண் குணம் இடம் கொடுக்கவில்லை.
கைலாசம் கடின உழைப்பாளி தான் சலவைதொழில் செய்தே தன் மகனை சங்கடமின்றி வளர்த்தவர்.
தான் பெற்ற துயரத்தை நிச்சயம் தன் பிள்ளை பெறக்கூடாது என்று நினைத்துகொண்டே தன் நாட்களை நகர்த்தியவர்.
விழிகளுக்கு இடையே லேசான ஈரம் எட்டி பார்க்க "ஏன்பா இந்த வருஷம் கண்டிப்பா வேலை கிடச்சுரும்ல என்று ஆனந்தின் செவிகளுக்கு அவரின் தளர்ந்த குரலில் செய்தி அனுப்ப
" எங்க கிடைக்க போகுது இன்னும் exam fees யே கட்டல , அதுவும் இல்லாம extra course படுச்சா தான் இப்பவெல்லாம் வேலை கொடுப்பாங்க , சும்மா பேசாம சைக்கிள்ள ஸ்பீடா ஓட்டு என்று குரைத்தான் .
மேலும் மனம் நொந்தவராக , அந்த extra course க்கெள்ளாம் எவ்வளவுப்பா ஆகும் என்று கேட்க
அதுக்கெள்ளாம் 50000 ஆகும், இங்க 5000 த்துக்கே வக்கிள்ள , சும்மா மனுசன காண்ட் யேத்தாம சைக்கிள ஓட்டு.
வேகமாக ஓடிய சக்கரங்களின் வேகம் செட்டியாரின் வீட்டை நெருங்கியதும் குறைந்தது.ஆனந்த் கீழே இறங்கினான்.
நீ இங்கையே இருப்பா நான் போய் செட்டியார பாத்துட்டு வரேன் என்று தயக்கத்துடன் கைலாசம் உள்ளே நகர்ந்தார்.
#சுழலும் #சக்கரம் #பகுதி_2

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...