Skip to main content

‪‎சுழலும்‬ ‪சக்கரம்‬ பகுதி ‪- 2‬


சரி இருப்பா செட்டியார்ட்ட கேட்டு பாக்குரேன் என்று வெளியே வந்தவர் தன் மகனையும் பின்னாள் ஏற்றி கொண்டு மிதிபலகையை அமுக்கினார் சுழன்று கொண்டே நகர்ந்தது சக்கரம்.
மிதிவண்டியின் சக்கரம் சுழல்வதை விட ஆனந்தின் மனம் இன்னும் அதிகமாக பதறி கொண்டிருந்தது.
எங்கே பணம் வராமல் போய்விடுமோ என்று , சிந்தித்தபடியே உர் என்று பின்னாள் அமர்ந்திருந்தான்.
ஆனால் கைலாசமோ மனம் முழுக்க ரனத்துடன் செட்டியார் என்ன சொல்வாரோ என்ற பதற்றத்தில் மிதிவண்டியை அழுத்த முடியாமல் அழுத்தி கொண்டிருந்தார்.
அதற்குள்ளாகவே மீண்டும் அலற துவங்கியது ஆனந்தின் கைபேசி.
மீண்டும் அதே அகோர குரல் ஆனந்தை பேசவிடாமல் ஆவேசமாக அலறியது.
மெளனத்தை பதிலாக அளித்துவிட்டு கைலாசத்திடம் தனது ஆவேசத்தை இன்னும் ஆக்ரோசமாக்கினான்.
பாவம் அரைஆயுளை கடந்த கைலாசம் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு அழுவதுதான் ஒரே வழி ஆனால் அதற்கும் ஆண் குணம் இடம் கொடுக்கவில்லை.
கைலாசம் கடின உழைப்பாளி தான் சலவைதொழில் செய்தே தன் மகனை சங்கடமின்றி வளர்த்தவர்.
தான் பெற்ற துயரத்தை நிச்சயம் தன் பிள்ளை பெறக்கூடாது என்று நினைத்துகொண்டே தன் நாட்களை நகர்த்தியவர்.
விழிகளுக்கு இடையே லேசான ஈரம் எட்டி பார்க்க "ஏன்பா இந்த வருஷம் கண்டிப்பா வேலை கிடச்சுரும்ல என்று ஆனந்தின் செவிகளுக்கு அவரின் தளர்ந்த குரலில் செய்தி அனுப்ப
" எங்க கிடைக்க போகுது இன்னும் exam fees யே கட்டல , அதுவும் இல்லாம extra course படுச்சா தான் இப்பவெல்லாம் வேலை கொடுப்பாங்க , சும்மா பேசாம சைக்கிள்ள ஸ்பீடா ஓட்டு என்று குரைத்தான் .
மேலும் மனம் நொந்தவராக , அந்த extra course க்கெள்ளாம் எவ்வளவுப்பா ஆகும் என்று கேட்க
அதுக்கெள்ளாம் 50000 ஆகும், இங்க 5000 த்துக்கே வக்கிள்ள , சும்மா மனுசன காண்ட் யேத்தாம சைக்கிள ஓட்டு.
வேகமாக ஓடிய சக்கரங்களின் வேகம் செட்டியாரின் வீட்டை நெருங்கியதும் குறைந்தது.ஆனந்த் கீழே இறங்கினான்.
நீ இங்கையே இருப்பா நான் போய் செட்டியார பாத்துட்டு வரேன் என்று தயக்கத்துடன் கைலாசம் உள்ளே நகர்ந்தார்.
#சுழலும் #சக்கரம் #பகுதி_2

Comments

Popular posts from this blog

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப...