Skip to main content

‪சுழலும்‬ ‪சக்கரம்‬ பகுதி - 1

ஆனந்தின் கால்கள் அங்கும் இங்கும் ஆடிய வாரே அவன் தந்தையை எதிர் நோக்கி காத்துகொண்டிருந்தன.
அவன் தந்தை தணியாத வெயிலில் தள்ளாடியபடி மிதிவண்டியை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நகர்ந்தார்.
தந்தையை பல நாள் பார்க்காதவன் போல் ஆனந்தின் முகம் முழுக்க பூரிப்பு.
பூரிப்பின் ஊடே ஆனந்தின் மொபைல் ஆங்கிலேய பாடலில் அலறியது.
பச்சைபட்டனை அழுத்தியதும் ஓர் அகோர குரல் "மச்சி எங்கடா இருக்க , எவ்வளவு நேரம் டா உனக்காக வெயிட் பண்றது , பசங்க எல்லாம் உன் மேல செம காண்டல இருக்காங்க .. கிளம்பிட்டையா" என அவன் வினவ
ஆனந்தும் "கிளம்பிட்டேன் மச்சி இப்ப தான் அப்பா வந்தாரு , அவருட்ட காசு வாங்கிட்டு இப்ப வந்திடுவேன் என்றான் ..
சரி சரி லேட்டா வந்தாலும் வர்ரப்ப கையில காசு கொண்டு வந்திரு , இன்னைக்கு பாண்டிசேரி போயே ஆகனும். சரக்கு அடுச்சே ஆகனும் .
கண்டிப்பா மச்சி சரி இரு அப்பாட்ட காசு உஷார் பண்ணிட்டு கூப்புடுரேன் .
சரி டா ..
கைலாசம் அதற்குள் தன் அயர்ந்த தொண்டைக்கு நீர் ஊற்றி அமைதி படுத்திகொண்டிருந்தார் .
ஆனந்தின் குரல் ஒலித்தது "அப்பா பஸ்க்கு டைம் ஆச்சு"
கைலாசம் கணத்த குரலில் "ஏன்பா இன்னைக்கே கண்டிப்பா பீஸ்(fees) கட்டியே ஆகனுமா"
ஆமாப்பா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள கட்டனும் இல்லைன்னா exam எழுத முடியாது பெயில் பண்ணிருவாங்க..
அதுக்கிள்ள ராமகிட்ட கேட்டிருந்தேன் அவன் இன்னைக்கு முடியாதுன்னு சொல்லிட்டான் அது தான் யோசிக்கிறேன் என்றார் தயங்கிய குரலில் .
ஆனந்திற்கு அளவில்லா கோபம் , அவனின் வார்த்தைகள் கைலாசத்தின் நெஞ்சை பதம்பார்த்து கொண்டிருந்தது .
அப்புறம் எதுக்கு என்ன படிக்க வைக்குற , நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு தான் கடைசி நாள்ன்னு , அங்க கணேஷ் வேர எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான் ...இப்ப நான் என்ன பண்றது .
5000 ரூபா கூட இல்லைன்னு சொன்னா என்ன எல்லாரும் கேவலமா பாப்பாங்க , என்று கண்கள் சிவக்க கரித்துகொண்டிருந்தான்.
கைலாசம் தன் கையாளாகா நிலையை எண்ணி மனதிற்குள் வெம்பி கொண்டிருந்தார்.
சரி இருப்பா செட்டியார்ட்ட கேட்டு பாக்குரேன் என்று வெளியே வந்தவர் தன் மகனையும் பின்னாள் ஏற்றி கொண்டு மிதிபலகையை அமுக்கினார் சுழன்று கொண்டே நகர்ந்தது சக்கரம்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...