Skip to main content

‪சுழலும்‬ ‪சக்கரம்‬ பகுதி - 1

ஆனந்தின் கால்கள் அங்கும் இங்கும் ஆடிய வாரே அவன் தந்தையை எதிர் நோக்கி காத்துகொண்டிருந்தன.
அவன் தந்தை தணியாத வெயிலில் தள்ளாடியபடி மிதிவண்டியை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நகர்ந்தார்.
தந்தையை பல நாள் பார்க்காதவன் போல் ஆனந்தின் முகம் முழுக்க பூரிப்பு.
பூரிப்பின் ஊடே ஆனந்தின் மொபைல் ஆங்கிலேய பாடலில் அலறியது.
பச்சைபட்டனை அழுத்தியதும் ஓர் அகோர குரல் "மச்சி எங்கடா இருக்க , எவ்வளவு நேரம் டா உனக்காக வெயிட் பண்றது , பசங்க எல்லாம் உன் மேல செம காண்டல இருக்காங்க .. கிளம்பிட்டையா" என அவன் வினவ
ஆனந்தும் "கிளம்பிட்டேன் மச்சி இப்ப தான் அப்பா வந்தாரு , அவருட்ட காசு வாங்கிட்டு இப்ப வந்திடுவேன் என்றான் ..
சரி சரி லேட்டா வந்தாலும் வர்ரப்ப கையில காசு கொண்டு வந்திரு , இன்னைக்கு பாண்டிசேரி போயே ஆகனும். சரக்கு அடுச்சே ஆகனும் .
கண்டிப்பா மச்சி சரி இரு அப்பாட்ட காசு உஷார் பண்ணிட்டு கூப்புடுரேன் .
சரி டா ..
கைலாசம் அதற்குள் தன் அயர்ந்த தொண்டைக்கு நீர் ஊற்றி அமைதி படுத்திகொண்டிருந்தார் .
ஆனந்தின் குரல் ஒலித்தது "அப்பா பஸ்க்கு டைம் ஆச்சு"
கைலாசம் கணத்த குரலில் "ஏன்பா இன்னைக்கே கண்டிப்பா பீஸ்(fees) கட்டியே ஆகனுமா"
ஆமாப்பா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள கட்டனும் இல்லைன்னா exam எழுத முடியாது பெயில் பண்ணிருவாங்க..
அதுக்கிள்ள ராமகிட்ட கேட்டிருந்தேன் அவன் இன்னைக்கு முடியாதுன்னு சொல்லிட்டான் அது தான் யோசிக்கிறேன் என்றார் தயங்கிய குரலில் .
ஆனந்திற்கு அளவில்லா கோபம் , அவனின் வார்த்தைகள் கைலாசத்தின் நெஞ்சை பதம்பார்த்து கொண்டிருந்தது .
அப்புறம் எதுக்கு என்ன படிக்க வைக்குற , நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு தான் கடைசி நாள்ன்னு , அங்க கணேஷ் வேர எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான் ...இப்ப நான் என்ன பண்றது .
5000 ரூபா கூட இல்லைன்னு சொன்னா என்ன எல்லாரும் கேவலமா பாப்பாங்க , என்று கண்கள் சிவக்க கரித்துகொண்டிருந்தான்.
கைலாசம் தன் கையாளாகா நிலையை எண்ணி மனதிற்குள் வெம்பி கொண்டிருந்தார்.
சரி இருப்பா செட்டியார்ட்ட கேட்டு பாக்குரேன் என்று வெளியே வந்தவர் தன் மகனையும் பின்னாள் ஏற்றி கொண்டு மிதிபலகையை அமுக்கினார் சுழன்று கொண்டே நகர்ந்தது சக்கரம்.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...