Skip to main content

சுழலும் சக்கரம் பகுதி - 3

நீ இங்கையே இருப்பா நான் போய் செட்டியார பாத்துட்டு வரேன் என்று தயக்கத்துடன் உள்ளே நகர்ந்தார்.
செட்டியார் பணம் எனும் போதைக்கு தன்னை அடிமை படுத்தி கொண்டவர்.அவ்வூரில் உள்ள அனைத்து ஏழை வர்க்கத்தையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதில் கைதேர்ந்தவர்.
தேக்கு நிலகதவை உரசாமல் நின்று கொண்டிருந்தது கைலாசத்தின் கால்கள் , மெல்ல அவர் குரல் அழைத்தது.
அய்யா , பெரியபையன் வந்திருக்கேன் .
இருடா வரேன்" உள்ளிருந்து எதிர்குரல் ஒலித்தது.
பெரியபையன் என்பது அவ்வூரில் உள்ள ஆதிக்கசாதிகளால் அன்போடு அழைக்கப்படும் அடிமை பெயர்.
செட்டியார் வந்தாகிவிட்டது.
நெற்றியில் விபூதியிட்டு , கதர் ஆடையில் முதலாளித்துவ தோரணையில் மிடுக்காக வெளியே வந்தார்.
அவரை பார்த்ததும் கைலாசத்தின் கைகள் தானாகவே அவரை வணங்கியது .
வெளியில் ஆனந்த் குதூகலத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தான்.
காரணம் தன் தந்தையிடம் அடுத்து ஒரு 50000 த்திற்கு வரும் வழியிலேயே சக்கரத்தை சுழலவிட்டிருக்கிறான் அல்லவா ...
அவன் தந்தையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.
இது இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்றால் எப்படியேனும் கஷ்டப்பட்டு தன்னிடம் கொண்டு சேர்த்துவிடுவார்.
ஆனால் அதற்காக அவன் தந்தை படும் கஷ்டத்தை நினைத்து பார்க்கா நிலையில் தான் அந்த அகோரி நண்பர்கள் அவனை சலவை செய்திருந்தார்கள்.
செட்டியாரின் குரல் மிடுக்காய் ஒலித்தது ,
"என்னடா விஷயம் காலங்காத்தால வந்திருக்க ?
அய்யா அது ஒன்னுமில்லைங்க .........
வட்டி பணம் ஏதாச்சும் கொண்டு வந்திருக்கையா ?
அய்யோ அய்யா அது இல்லைங்க .....
அது தான பாத்தேன் ...
சரி என்ன தான்டா விஷயம் ...
எப்ப வட்டி பணத்த தர போற
என்ற செட்டியாரின் கேள்விக்கு
வார்த்தை இல்லாதவனாய் தவித்து கொண்டிருந்தான் கைலாசம்.
அதற்குள் வெளியில் நின்றிருந்த ஆனந்தின் அலைபேசி மாறாத ஆங்கிலேய பாடலில் அலறியது.

#சுழலும் #சக்கரம் #பகுதி_3

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...