Skip to main content

சுழலும் சக்கரம் பகுதி - 3

நீ இங்கையே இருப்பா நான் போய் செட்டியார பாத்துட்டு வரேன் என்று தயக்கத்துடன் உள்ளே நகர்ந்தார்.
செட்டியார் பணம் எனும் போதைக்கு தன்னை அடிமை படுத்தி கொண்டவர்.அவ்வூரில் உள்ள அனைத்து ஏழை வர்க்கத்தையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதில் கைதேர்ந்தவர்.
தேக்கு நிலகதவை உரசாமல் நின்று கொண்டிருந்தது கைலாசத்தின் கால்கள் , மெல்ல அவர் குரல் அழைத்தது.
அய்யா , பெரியபையன் வந்திருக்கேன் .
இருடா வரேன்" உள்ளிருந்து எதிர்குரல் ஒலித்தது.
பெரியபையன் என்பது அவ்வூரில் உள்ள ஆதிக்கசாதிகளால் அன்போடு அழைக்கப்படும் அடிமை பெயர்.
செட்டியார் வந்தாகிவிட்டது.
நெற்றியில் விபூதியிட்டு , கதர் ஆடையில் முதலாளித்துவ தோரணையில் மிடுக்காக வெளியே வந்தார்.
அவரை பார்த்ததும் கைலாசத்தின் கைகள் தானாகவே அவரை வணங்கியது .
வெளியில் ஆனந்த் குதூகலத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தான்.
காரணம் தன் தந்தையிடம் அடுத்து ஒரு 50000 த்திற்கு வரும் வழியிலேயே சக்கரத்தை சுழலவிட்டிருக்கிறான் அல்லவா ...
அவன் தந்தையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.
இது இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்றால் எப்படியேனும் கஷ்டப்பட்டு தன்னிடம் கொண்டு சேர்த்துவிடுவார்.
ஆனால் அதற்காக அவன் தந்தை படும் கஷ்டத்தை நினைத்து பார்க்கா நிலையில் தான் அந்த அகோரி நண்பர்கள் அவனை சலவை செய்திருந்தார்கள்.
செட்டியாரின் குரல் மிடுக்காய் ஒலித்தது ,
"என்னடா விஷயம் காலங்காத்தால வந்திருக்க ?
அய்யா அது ஒன்னுமில்லைங்க .........
வட்டி பணம் ஏதாச்சும் கொண்டு வந்திருக்கையா ?
அய்யோ அய்யா அது இல்லைங்க .....
அது தான பாத்தேன் ...
சரி என்ன தான்டா விஷயம் ...
எப்ப வட்டி பணத்த தர போற
என்ற செட்டியாரின் கேள்விக்கு
வார்த்தை இல்லாதவனாய் தவித்து கொண்டிருந்தான் கைலாசம்.
அதற்குள் வெளியில் நின்றிருந்த ஆனந்தின் அலைபேசி மாறாத ஆங்கிலேய பாடலில் அலறியது.

#சுழலும் #சக்கரம் #பகுதி_3

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...