Skip to main content

‪பதில்‬ ‪இல்லா‬ ‪‎வினா‬ ?

நன்றாக நினைவிருக்கிறது , அவன் பெயர் சபீர் என்னுடைய அரைட்ரவுசர் தோழன். ஓரே பள்ளியில் தான் ஒன்றாக படித்தோம். சாதியும் , மதமும் அறியாத பருவமது.

விடுமுறை நாட்களில் நிற்காமல் கிளம்பிவிடும் எங்களின் மிதிவண்டி சக்கரம்.

ஊர்காவல் அய்யனார் தொடங்கி , மாதா கோவில் , மதுரைவீரன் சிலை , மரிகொழுந்து சோடா , மசூதி தொழுகை , பால் போன்ற ஐஸ்கீரிம் , பண்ருட்டி முருக்கு , பட்டாம்பூச்சி இறக்கை , பொக்கவாய் கிழவி என்று சூரியன் எங்களை இருளில் மூழ்கும் வரை நிற்காமல் சுற்றும் எங்கள் மிதிவண்டி வீல்கள்.

அப்போது நிச்சயம் நாங்கள் அறிந்திருக்கவில்லை சாதியை பற்றியும் , மதத்தை பற்றியும்.

அந்த வயதில் நாங்கள் சொல்லும்
"சாமி சத்தியமா டா" என்ற ஒற்றை வார்த்தையே அதற்கு சாட்சி.

நான் "அம்மன் சத்தியம் என்றோ , முருகன் சத்தியம் என்றோ " கூறியது கிடையாது.

சபீரும் " அல்லா சத்தியம் " என்று சொன்னது கிடையாது.

உடனிருந்த இன்னொரு நண்பன் ஆல்பட்டும் " இயேசு சத்தியம் " என்று கூறிய நியாபகம் இல்லை.

அந்த வயதில் "சாமி" என்ற ஒற்றை வார்த்தையில் முற்று பெருகிறது எங்களின் சாதியும் , மதமும்.

பிறகு எந்த வயதில் நம் மனதுக்குள் நுழைகிறது இந்த சாதியும் , மதமும் என்ற கேள்விக்கு

இளமை காலங்களை கொஞ்சம் கிளரினாலே அதற்கான உண்மை வெளிப்படும்.

சபீருடன் நான் சுற்றிய போது "துலுக்க பையலோட என்னடா சகவாசம்" என்று அடிக்கடி ஓயாது ஒலித்து கொண்டிருந்த பாட்டியின் குரல்தான் ஒருவேளை நம் மனதை மாற்றியிருக்குமோ ...

இல்லை , "எட்டாவது வார்டு பையன்கூட என்னடா பேச்சு" என்று தினம் தினம் கழுவி ஊற்றும் அன்னையின் அதட்டலால் வந்திருக்குமோ ..

ஒருவேளை , சாதிய மநாட்டிற்கு இழுத்து சென்ற தந்தையின் அக்கரையால் வந்திருக்குமோ..

விடையில்லா கேள்விகள் தான் அவை.

நிச்சயம் , சபீர் வீட்டிலும் இதே மாதிரி விடையில்லா கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

என் பாட்டியோ , அம்மாவோ , தந்தையோ இல்லை சாதி,மதம் என்று வீணாக பிதற்றி கொண்டிருக்கும் வேலையில்லா மூடர்களோ அனைவரின் பேச்சும் அன்று என் பிஞ்சு மனதிற்கு நஞ்சாகதான் இறங்கியது.

நாட்கள் நகர பெரியார் மற்றும் அம்பேத்கர் புத்தகங்கள் தான் மருந்தாக என்னுள் இருந்த நஞ்சை முறித்தது.

அந்த மருந்து கிடைக்க பெறாத பல உயிர்கள் விஷம் தலைக்கேறி இன்றும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே நகர்ந்து போகின்றனர்.

அது ஒருபுறம் இருக்கட்டும் , இப்போது நான் ஏன் இவ்வாறு பிதற்றி கொண்டிருக்கிறேன்.

ஆமிர்கான் என்பவர் எந்த மதமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் , அவர் கூறிய கருத்தில் உடன்பட்டு போவதும் , உடன்படாமல் ஒதுங்கி நிற்பதும் தனிக்கதை.

அந்த கருத்திற்க்கு தேவையின்றி உயிர் கொடுத்து , அதற்கு மேலும் மேலும் உணவளித்து வரும் சமூக ஊடகங்களுக்கும் , சார்பற்ற அரசியல்வாதிகளுக்கும் ஒன்றை மட்டும் தான் நினைவு படுத்த விழைகிறேன்.

என் நாடு மதசார்பற்ற நாடு , கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்று பாடப்புத்தகத்திலேயே படித்து வளர்ந்தது என் தலைமுறை.

அதை என் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியுமா ? என்றால் பதில் இல்லா வினாவாக தான் இன்றளவில் தொடர்கிறது.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...