Skip to main content

கடைநிலை‬ ‪ ‎சிரிப்பு‬

கார்த்தியின் கண்கள் தனிமையில் கலங்கி கொண்டிருந்தது.

வெளிநாட்டு நிறுவனத்தில் வேர்வையில்லா வேலைதான். 
அழகான துணைவியும் அயல்நாட்டு நிறுவனத்தின் அடிமைதான்.

ஆனாலும் ஏனோ அவன் கண்கள் கலங்கிகொண்டிருந்தது.

மூன்று மாதம் முன்புதான் விவசாய நிலத்தை விலைக்கு வைத்து , வேளச்சேரியில் அழகு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தை தனக்கானதாக இருபது வருட ஒப்பந்தத்தோடு தன்வசப்படுத்தியிருந்தான்.

அவன் தந்தைக்கு துளியும் விருப்பமில்லை தான் , என்ன செய்வது இத்தலைமுறை பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு தன்னையே அடிமையாக்கிவிடுகின்றனர்.
சுருக்கமாக சொன்னால் இத்தலைமுறை பெற்றோரின் யதார்த்த பிரதிபளிப்பு அவனின் தந்தை.

ஏதேதோ சொல்லி தனிமைதளத்தை வாங்கிவிட்டான் . பிறகு எதற்கு வருந்திகொண்டிருக்கிறான் , அதுவும் தனிமையில் ...

சென்னையின் அடைமழைக்கு அவனின் இருபது வருட சுமையும் சுக்குநூறானது.யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை.

அணிந்திருந்த உடையோடு அருகிலிருந்த அரசுபள்ளியில்
அநாதையாய் ஒரு தஞ்சம்.

அப்போதும் அடங்கவில்லை அவன் துணைவியின் ஆசை , இதுக்குதான் திருவான்மியூர்ல வாங்கலாம்ன்னு சொன்னேன் " என்றாள் கடுப்போடு.

நிலைகுலைந்தவனாய் சிரித்தான்.

அடுத்து இங்கு இவனிருக்கும் நிலையறியாத தந்தையின் குரல் அலைபேசி வழியே " அந்த இடத்த விக்காம , இருந்திருந்தா இந்நேரம் முப்போகம் விளஞ்சிருக்கும் தம்பி " என்றார் .

அதற்கும் சிந்தனையில் ஊறியவனாய் சிரித்தான்.

அடுத்து அலுவலகத்தின் அக்கரையான அழைப்பு " மிஸ்டர் கார்த்தி , நாளைக்கு லீவ் போட்ராதிங்க client மீட் இருக்கு" என்று சொன்னதும் தொடர்பு துண்டானது.

அதற்கும் அலுத்து போனவனாய் சிரித்தான்.

விவசாய வர்க்கத்தின் அந்த கடைநிலை சிரிப்பில் தான் 
மிளிர்கிறது இக்கால தலைமுறை . 

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...