Skip to main content

கடைநிலை‬ ‪ ‎சிரிப்பு‬

கார்த்தியின் கண்கள் தனிமையில் கலங்கி கொண்டிருந்தது.

வெளிநாட்டு நிறுவனத்தில் வேர்வையில்லா வேலைதான். 
அழகான துணைவியும் அயல்நாட்டு நிறுவனத்தின் அடிமைதான்.

ஆனாலும் ஏனோ அவன் கண்கள் கலங்கிகொண்டிருந்தது.

மூன்று மாதம் முன்புதான் விவசாய நிலத்தை விலைக்கு வைத்து , வேளச்சேரியில் அழகு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தை தனக்கானதாக இருபது வருட ஒப்பந்தத்தோடு தன்வசப்படுத்தியிருந்தான்.

அவன் தந்தைக்கு துளியும் விருப்பமில்லை தான் , என்ன செய்வது இத்தலைமுறை பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு தன்னையே அடிமையாக்கிவிடுகின்றனர்.
சுருக்கமாக சொன்னால் இத்தலைமுறை பெற்றோரின் யதார்த்த பிரதிபளிப்பு அவனின் தந்தை.

ஏதேதோ சொல்லி தனிமைதளத்தை வாங்கிவிட்டான் . பிறகு எதற்கு வருந்திகொண்டிருக்கிறான் , அதுவும் தனிமையில் ...

சென்னையின் அடைமழைக்கு அவனின் இருபது வருட சுமையும் சுக்குநூறானது.யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை.

அணிந்திருந்த உடையோடு அருகிலிருந்த அரசுபள்ளியில்
அநாதையாய் ஒரு தஞ்சம்.

அப்போதும் அடங்கவில்லை அவன் துணைவியின் ஆசை , இதுக்குதான் திருவான்மியூர்ல வாங்கலாம்ன்னு சொன்னேன் " என்றாள் கடுப்போடு.

நிலைகுலைந்தவனாய் சிரித்தான்.

அடுத்து இங்கு இவனிருக்கும் நிலையறியாத தந்தையின் குரல் அலைபேசி வழியே " அந்த இடத்த விக்காம , இருந்திருந்தா இந்நேரம் முப்போகம் விளஞ்சிருக்கும் தம்பி " என்றார் .

அதற்கும் சிந்தனையில் ஊறியவனாய் சிரித்தான்.

அடுத்து அலுவலகத்தின் அக்கரையான அழைப்பு " மிஸ்டர் கார்த்தி , நாளைக்கு லீவ் போட்ராதிங்க client மீட் இருக்கு" என்று சொன்னதும் தொடர்பு துண்டானது.

அதற்கும் அலுத்து போனவனாய் சிரித்தான்.

விவசாய வர்க்கத்தின் அந்த கடைநிலை சிரிப்பில் தான் 
மிளிர்கிறது இக்கால தலைமுறை . 

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...