Skip to main content

வாழ்க்கையின் தேடல் ...

வாழ்க்கையின் தேடலில் துவங்கினான் அவன் பயணத்தை ... 
பொறியியல் எனும் பொல்லாத படிப்பிற்கு 
லட்ச ரூபாய் நோட்டோடு 
கட்டுக்கட்டாய் பணம் கொடுத்து
 களையாத உடையணிந்து 
ல்லூரி வாசலிலே 
ஆபிசர் உடையோடு .... 
வீரப்பன் நடையிலே 
வீரமாக வீரெழுந்தான் ... 
வேரோடு அறுத்துவிட்டான் ... 
வேலையில்லை என்று சொல்லி .. 
மனஅழுத்தம் என்ற சொல்லிற்கு 
மறுபெயரே நாங்கள் தான் ... 
நினைத்த வேலை கிடைக்காமல் ... 
கிடைத்த வேலை பிடிக்காமல் ... 
தினம் தினம் அழுகிறோம் மனதுக்குள் 
பொறியியல் எனும் பொறி வைக்கும் படிப்பிற்கு
 பலியாவது நாங்கள் தானா ... 
இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் சான்றோனே ... 
பட்டதாரி நிலை மாறட்டும் என் நாட்டில் 
வேலையில்லா திண்டாட்டம் ஓழியட்டும் என் மண்ணில் .. 
பின் நிலை உயரும் ... 
என் நாட்டின் நிலை உயிரும் ... 
வருங்காலம் பெயர் சொல்லும் 
இந்த பாவப்பட்ட பட்டதாரியின் வாழ்க்கையை பற்றி ... 
அது வரை கை ஏந்துவோம் அந்நியவன் முகம் பார்த்து ... 
அயல்நாட்டை எதிர்நோக்கி ... 
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று கேட்ட கவிஞனே ... 
மனம் நொந்து .. 
விழிகள் அழுது .. 
நெஞ்சம் உருகி .. 
சொல்கிறேன் கேள் .. 
எந்த வளமும் இல்லை என் தாய் நாட்டில் ஊழல் என்ற வளத்தை தவிர ... 
பொங்கி எழுந்த பொறியாளன் கூட்டத்தில் .. 
வீரத்தமிழன் வேதனையில் எழுதுகிறேன் ....
ம.பிரவீன்

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...