Skip to main content
புதுப்புது அர்த்தங்களோடு பலமுகம் கொண்ட கொடூரவாசிகள் வாழும் உலகம் இது.நிழலான வாழ்க்கையைதான் பணமான நிஜத்துக்குள் திறக்கமுடியா பூட்டிட்டு திறமையென நினைக்கின்றனர். இதை தவறென்று சொல்ல எனக்கு சற்றும் துணிவில்லை தான் , ஏனென்றால் அந்த நிழனான வாழ்க்கையை தான் நிஜமென நினைத்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் என்ற ஒற்றைசொல்லை வாழ்வின் நாமமாக வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மேலே சொன்ன கொடூரவாசிகள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்.அவர்கள் தான் உதவி என்று யாரேனும் கேட்டால் கூட இஞ்சி தின்ற குரங்கைபோல் முகத்தை உடனே மாற்றுவார்கள். இதை பலமுறை அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். இந்த குரங்கு கூட்டத்தில் உறவினர்களும் விதிவிலக்கல்ல.
உண்மையாக சொல்ல போனால் அவர்கள் தான் நம்மைசுற்றி கொண்டே இருக்கும் கொடூரகுரங்குகள் இதில் ஒரு சில நல்ல குரங்குகள் இருப்பதும் இயற்பியல் மாற்றம் தான்.
இந்த கொடூரவாசிகளில் அதுவும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஆத்மாக்களுக்கு ஆணவம் இருப்பது இயல்பான ஒன்றுதான் , என்றாலும் கூட கிராமத்து கன்னியையும் கிளாமராக தான் மாற்றுகிறது இந்த நாகரீக நகரமும் , அறிவான ஐ.டி நிறுவனமும் .
உள்ளூர நஞ்சை வைத்துகொண்டு பொய்முகம் காட்டி நம்ப வைக்கும் நாரதர் கூட்டமும் , உண்மைமுகம் என்று சொல்லி மனதை நோகடிக்கும் உத்தமர் கூட்டமும் இந்த கொடூரவாசிகளில் என்றும் முதலிடம் தான் .
இதைபற்றி நினைத்து மனம் வெம்புவதை விட கொடூரவாசிகளோடு சேர்ந்து கொடூரவாசியாய் வாழ்வதே சாலசிறந்து.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...
இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...