Skip to main content
புதுப்புது அர்த்தங்களோடு பலமுகம் கொண்ட கொடூரவாசிகள் வாழும் உலகம் இது.நிழலான வாழ்க்கையைதான் பணமான நிஜத்துக்குள் திறக்கமுடியா பூட்டிட்டு திறமையென நினைக்கின்றனர். இதை தவறென்று சொல்ல எனக்கு சற்றும் துணிவில்லை தான் , ஏனென்றால் அந்த நிழனான வாழ்க்கையை தான் நிஜமென நினைத்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் என்ற ஒற்றைசொல்லை வாழ்வின் நாமமாக வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மேலே சொன்ன கொடூரவாசிகள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்.அவர்கள் தான் உதவி என்று யாரேனும் கேட்டால் கூட இஞ்சி தின்ற குரங்கைபோல் முகத்தை உடனே மாற்றுவார்கள். இதை பலமுறை அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். இந்த குரங்கு கூட்டத்தில் உறவினர்களும் விதிவிலக்கல்ல.
உண்மையாக சொல்ல போனால் அவர்கள் தான் நம்மைசுற்றி கொண்டே இருக்கும் கொடூரகுரங்குகள் இதில் ஒரு சில நல்ல குரங்குகள் இருப்பதும் இயற்பியல் மாற்றம் தான்.
இந்த கொடூரவாசிகளில் அதுவும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஆத்மாக்களுக்கு ஆணவம் இருப்பது இயல்பான ஒன்றுதான் , என்றாலும் கூட கிராமத்து கன்னியையும் கிளாமராக தான் மாற்றுகிறது இந்த நாகரீக நகரமும் , அறிவான ஐ.டி நிறுவனமும் .
உள்ளூர நஞ்சை வைத்துகொண்டு பொய்முகம் காட்டி நம்ப வைக்கும் நாரதர் கூட்டமும் , உண்மைமுகம் என்று சொல்லி மனதை நோகடிக்கும் உத்தமர் கூட்டமும் இந்த கொடூரவாசிகளில் என்றும் முதலிடம் தான் .
இதைபற்றி நினைத்து மனம் வெம்புவதை விட கொடூரவாசிகளோடு சேர்ந்து கொடூரவாசியாய் வாழ்வதே சாலசிறந்து.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...