Skip to main content

என் தமிழன்

என் தமிழன்
மனம் நிறைய ரணம்
ரத்த பந்தம் உயிரறுந்து
கிடக்கைலே .....
விழியை சுற்றி ஈரம்
நெஞ்சில் இல்லா என்
சொந்தங்களை நினைத்து ....
பினங்கால் இடறி விழ
வீதியெங்கும் பிணம் ....
படிக்கச் சென்ற குழந்தை
பதுங்கு குழிக்குள்ளே பம்பரமாய் ....
பூப்படைந்த பெண்ணவளின் மாராப்பு
தலைபாகை ஆனது சிங்களவன்
கொழுத்த தலையிலே ....
கன்னியவள் பிறப்பு
கண்ணிவெடியிலே கலங்கப்பட்டது ...
தாகத்தில் தவித்த தமையனுக்கு
தண்ணீர் கொடுக்க மனம் இல்லை ....
பதுங்கு குழிக்குள் படுத்து
தோட்டாக்கள் துளைத்து
குண்டுகள் புதைத்து
இன்று முள் வேலிக்குள்
அகதியாய் முகாம் இட்டு
அனாதையை சாகிறான்
என் தமிழன் .....
அதை வைத்து ஓட்டெடுத்து
அமைச்சரவைல் இடம் பிடித்து
ஊர் எங்கும் சொத்து குவித்து
ஊர் சுற்றி ஊலா வருகிறான்
என் தமிழன் ....
ம.பிரவீன்

Comments