Skip to main content
வாழ்வில் பற்பல சிந்தைனையுடன் வாழும் இளைஞனின் வாழ்க்கையை புரட்டி பார்த்தால் தோல்வியை மட்டுமே தோளாக கொண்டிருப்பான்.வெளி உலகிற்கு மகிழ்ச்சியை மாயையாய் காட்டி , உள்ளூர துன்பம் என்னும் நெருப்பில் வெந்துகொண்டிருப்பான் . இது பொதுவான கூற்றுதான்ஆனால் அனைவருக்கும் பொருந்தகூடியது.
பணத்தை தேடுபவன் பாசத்தை துறந்திருப்பான் , பாசத்தை நிலையென கொண்டவன் கடனாளி என்ற மறுபெயர் பெற்றிருப்பான் . இவ்விரண்டையும் சமநிலையாக கையாள்பவனை இதுவரை இவ்வுலகம் கண்டிருக்காது கண்டிருக்கும் வாய்ப்புகளும் குறைவுதான்.
வெற்றி பெற்ற ஓவ்வொரு மனிதனின் ஆயுள்புத்தகத்தை புரட்டி பார்த்தால் வேதனை என்ற ஒற்றை சொல்லே சோகவாசகமாய் முழுப்புத்தகமும் நிறைந்திருக்கும். வரும் வேதனையை நினைத்து வெம்பி அழுது இடுகாடுவரை வெத்து உடலோடு சென்ற உத்தமர்களும் இங்கு ஏராளம்தான் . அவர்களை புதைகுழிக்குள் தள்ள எப்போதும் வாயை பொழந்துகொண்டு திரியும் உறவுகள் எனும் கொடுங்கொள்ளி கூட்டம் தான் அந்த உத்தமர்களின் நம்பிக்கையாய் இருந்திருக்கும் உயிருடன் இருக்கும் போது .
இங்கே சாதிப்பவன் எல்லாம் கட்டாயம் அரை ஆயுள் தோல்வியில் புரண்டிருக்க வேண்டும் , வாரத்திற்கு ஒருமுறை தனி அறையில் தன்னந்தனியே கண்கள் கலங்க கதறி அழுக வேண்டும் , முகத்தை சோகத்தால் பரப்ப வேண்டும் , வெற்றிபெற்றவனை பார்த்து பொறாமையும் , தோல்வி அடைந்தவனை பார்த்து இரக்கமும் கொள்ள வேண்டும் , எனக்கு இங்கு யாருமில்லை என்ற உணர்வை தினமும் மனதில் விதையாக விதைக்க வேண்டும் இப்படியெல்லாம் உழைத்தால் தான் சாதிக்க முடியும் என்றால் சர்வ நிச்சயமாக இல்லை .
சாதனை படைத்த சாதுரியர்கள் எல்லாம் கண்டிப்பாக இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் சிந்தனை வேறுமாறியானது . மன உறுதியை மாற்றுயிராய் கொண்டிருப்பார்கள். என்னை பொறுத்த வரை மன உறுதி என்ற ஒற்றை சொல்லே போதுமானது தான் இந்த கேடுகெட்ட உலகில் வாழ்வதற்கு ...

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...
இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...