Skip to main content
வாழ்வில் பற்பல சிந்தைனையுடன் வாழும் இளைஞனின் வாழ்க்கையை புரட்டி பார்த்தால் தோல்வியை மட்டுமே தோளாக கொண்டிருப்பான்.வெளி உலகிற்கு மகிழ்ச்சியை மாயையாய் காட்டி , உள்ளூர துன்பம் என்னும் நெருப்பில் வெந்துகொண்டிருப்பான் . இது பொதுவான கூற்றுதான்ஆனால் அனைவருக்கும் பொருந்தகூடியது.
பணத்தை தேடுபவன் பாசத்தை துறந்திருப்பான் , பாசத்தை நிலையென கொண்டவன் கடனாளி என்ற மறுபெயர் பெற்றிருப்பான் . இவ்விரண்டையும் சமநிலையாக கையாள்பவனை இதுவரை இவ்வுலகம் கண்டிருக்காது கண்டிருக்கும் வாய்ப்புகளும் குறைவுதான்.
வெற்றி பெற்ற ஓவ்வொரு மனிதனின் ஆயுள்புத்தகத்தை புரட்டி பார்த்தால் வேதனை என்ற ஒற்றை சொல்லே சோகவாசகமாய் முழுப்புத்தகமும் நிறைந்திருக்கும். வரும் வேதனையை நினைத்து வெம்பி அழுது இடுகாடுவரை வெத்து உடலோடு சென்ற உத்தமர்களும் இங்கு ஏராளம்தான் . அவர்களை புதைகுழிக்குள் தள்ள எப்போதும் வாயை பொழந்துகொண்டு திரியும் உறவுகள் எனும் கொடுங்கொள்ளி கூட்டம் தான் அந்த உத்தமர்களின் நம்பிக்கையாய் இருந்திருக்கும் உயிருடன் இருக்கும் போது .
இங்கே சாதிப்பவன் எல்லாம் கட்டாயம் அரை ஆயுள் தோல்வியில் புரண்டிருக்க வேண்டும் , வாரத்திற்கு ஒருமுறை தனி அறையில் தன்னந்தனியே கண்கள் கலங்க கதறி அழுக வேண்டும் , முகத்தை சோகத்தால் பரப்ப வேண்டும் , வெற்றிபெற்றவனை பார்த்து பொறாமையும் , தோல்வி அடைந்தவனை பார்த்து இரக்கமும் கொள்ள வேண்டும் , எனக்கு இங்கு யாருமில்லை என்ற உணர்வை தினமும் மனதில் விதையாக விதைக்க வேண்டும் இப்படியெல்லாம் உழைத்தால் தான் சாதிக்க முடியும் என்றால் சர்வ நிச்சயமாக இல்லை .
சாதனை படைத்த சாதுரியர்கள் எல்லாம் கண்டிப்பாக இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் சிந்தனை வேறுமாறியானது . மன உறுதியை மாற்றுயிராய் கொண்டிருப்பார்கள். என்னை பொறுத்த வரை மன உறுதி என்ற ஒற்றை சொல்லே போதுமானது தான் இந்த கேடுகெட்ட உலகில் வாழ்வதற்கு ...

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...