Skip to main content
பரப்பரப்பாக அங்கும் இங்கும் நடந்தவாரே கையில் இருந்த புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான் . அவன் முகம் பயத்தில் உறைந்து வியர்வையில் நனைந்திருந்தது.
முதல் கேம்பஸ் நேர்காணல் அதுவும் மிகப்பெரிய கம்பெனி அதில் தேர்வானால் அவன் வாழ்க்கை பிரகாசமாக ஓரங்கட்டி விடப்படும்.
அவன் குடும்பம் குதூகலத்தில் துள்ளிகுதிக்கும் . அவன் தந்தை தர்மத்தின் தலைவனாய் ஊரே போற்ற கொண்டாட படுவார் . தாயோ கடவுள் தான் காரணம் என்று கண்ணீரில் மிதந்திருப்பார்.
ஆனால் இவையெல்லாம் அவன் தேர்வான அந்த நொடியில் தான் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும்.
அவனுக்கு நன்றாக தெரியும் அவனின் ஆங்கில புலமையை பற்றி , நம்மை ஆண்டவன் அழிந்தாலும் அவன் விட்டுசென்ற ஆங்கிலம் இன்றும் நம்மை ஆண்டுகொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இதுவே சாலசிறந்த உதாரணம் .
நேரம் நெருங்க நெருங்க நேர்காணல் அறை இன்னும் பரப்பரப்பானது அவன் மட்டுமல்ல அங்கிருக்கும் வருங்கால அடிமைகள் அத்துனை பேருக்கும் அதே பதட்டம்தான் மந்திரமாய் ஓலித்துகொண்டிருக்கும்.
ஒரு வேளை தேர்வாகாமல் போனால் அதை எப்படி கையாள்வது என்பதை கூட கற்று கொடுக்காத கையாளாகாத கல்வியை தான் வருங்காலபாரதத்திற்கு மன அழுத்தமாய் விதைத்து கொண்டிருக்கிறோம்.
என்றாலும் கூட
அவன் பெயர் அறிவிக்கபட்டுவிட்டது.
முதல் நேர்காணலை எதிர்கொள்ள தயாராய் அவன் கால்கள் மெல்ல நகர்ந்தது . இஸ்திரி போட்ட ஆடையும் வியர்வையில் ஊறிப்போயிருந்தது.
நேர்காணல் அறைக்குள் மூன்று உருவங்கள் , தெய்வமான முன்னாள் அடிமைகள் என்றும் கூட கூறலாம் கால்மேல் காலிட்டு கம்பீர தோரனையில் மிடுக்காய் அமர்ந்திருந்தன.
இவனும் தனக்கான நடையை மறந்து தயக்கமான நடையில் அருகில் சென்றான் , தான் இதுவரை பெற்ற பணம் தரும் சான்றிதழ் பட்டாக்களை அவர்கள் முன் நீட்டினான்.
முன்னாள் அடிமைகளில் ஒருவன் தனக்கான சைகையில் அவனை அமர சொன்னான் . பின் மூன்று முன்னாள் அடிமைகளும் அவர்களை அறிமுகம் செய்துவிட்டு , இவனின் அறிமுகத்தை கேட்டனர் .
ஓய்வெடுத்து கொண்டிருந்த வியர்வை சுரபிகள் மீண்டும் சுனாமியாய் வெளிவர துவங்கின. பத்து விநாடி யோசித்த அவன் மூளை தன் மண்டைக்குள் ஏற்றிய அவனின் அறிமுக மனப்பாடத்தை வாய்வழியே தங்குதடையின்றி கொட்டி தீர்த்தது .
அவன் தேர்வாவதும் தேர்வாகாமல் தெருவில் நிற்பதும் அடுத்த கதை , தன்னை பற்றிய அறிமுகத்தை கூட மண்டையில் ஏற்றி , மனப்பாடம் செய்தா ஒப்பிக்க வேண்டும் . ஒரு வேளை அப்படி மனப்பாடம் செய்து ஒப்பிக்க தான் இந்த சமூகமும் , கல்வியும் அவனுக்கு கற்றுகொடுத்திருக்கிறதா என்றால், அதன்வழியே வந்தவன் என்ற முறையில் அதுதான் நிச்சயமான உண்மை .
முன்னாள் அடிமைகளின் குரல் அவன் தேர்வாகி விட்டதாய் ஒலித்தது . பின்னாள் அடிமையாக போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அவன் மனம் முழுக்க மத்தாப்பு வெடித்து.
வருடாந்திர அடிமையாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு
அடுத்த மாதம் வேலையில் சேரலாம் என்று ஒரு கடிதமும் அளிக்கப்பட்டது.
மாதம் முப்பதாயிரம் சம்பளம் என்றாலும் மனப்பாட மூளையையும் அதை ஒப்புவிக்கும் மனதையும் வைத்துகொண்டு வாழ்க்கையை சாதித்து விட்டோம் என என்னும் அவனின் எண்ணம் நம் சமூகம் அவனுக்கு அளித்த பரிசு .
இந்த தலைமுறை மட்டுமல்ல இனி வரும் வருங்கால பிஞ்சுகளுக்கும் , கல்வியை பணத்திற்காக அடமான வைக்கும் காவுபொருளாக தான் கற்றுகொள்ள கற்பித்திருக்கிறோம்.
அதன் வெளிப்பாடே இக்கால இயந்திர மனிதர்கள் ... இனியாவது இந்நிலை மாறட்டும் என்ற ஏக்கத்தில் இக்கால இயந்திர மனிதன் ..

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...