Skip to main content
இன்று பள்ளிகால நண்பன் ஒருவன் நெடுநாட்களுக்கு பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான் . அழைப்பு வந்தவுடனே அறிந்துகொண்டேன் எதோ காரியம் வேண்டி தான் அழைகிறான் என்று , ஏனென்றால் எனக்கான நட்பு வட்டத்தில் காரியக்கார நண்பர்கள் கொஞ்சம் அதிகம் தான் .
அவன் நலம் விசாரித்த நடைமுறையிலையே அவனின் சோகமும் தெரிந்தது . நானும் நிலைமையை புரிந்துகொண்டு பிரபா ஏதாவது பிரச்சனையா என்றேன் . சற்று தடுமாற்றத்துடன் ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அவனிடமிருந்து அழுகை மட்டுமே பதிலாக வந்தது.
நான் என்ன செய்வதென்று புரியாமல் சமாதான வார்த்தைகளை சராமாரியாக சொல்லி கொண்டிருந்தேன். சோகத்தில் ஆறுதல் கூறுவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்றது வலிக்காமல் வலிக்கும் . இதை அனுபவரீதியாக பலமுறை உணர்ந்துள்ளேன் . இருந்தும் ஒருவர் சோகத்தில் இருக்கும்போது அதுவும் அழுகும் போது ஆறுதல் கூறுவது ஆறாம்அறிவின் இயல்பே.
அவனிடம் என்னதான்டா உனக்கு பிரச்சன இப்ப , எதுக்கு அழுகுற என்று சற்று கடிந்துகொண்ட பின் அவன் சோகக்கதையை சொல்ல துவங்கினான். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று. அதுவும் எதிர்ப்பை மீறிய காதல் திருமணமாம் . 2 வருட காதலுக்காக 20 வருட பெற்றோர்உறவை எப்படித்தான் இழந்தானோ ? என்று எண்ணினாலும் 20 வருட உறவில் அவனையும் அவன் பெற்றோர் புரிந்து கொள்ளவில்லையோ
என்றுதான் பொதுபுத்தியில் தோன்றுகிறது.
அதுதான் முடிந்துவிட்டதே , இனி என்ன பிரச்சனை என்று நான் கேட்கும் போதுதான் , அவன் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தது நியாபகம் வந்தது .நான் அப்போதுதான் அறிந்து கொண்டேன் அவன் அழுததன் காரணத்தை , கோவையில் எனக்கு தெரிந்த சில நண்பர்களின் தொலைபேசி எண்ணை கொடுத்து வேலை தொடர்பாக பேசுமாறு கூறினேன்.அவனும் சற்று ஆறுதலானான் .
நான் அடுத்த கேட்க நினைத்த கேள்வியை சற்று யூகித்திருப்பான் போல, அவனும் அவனின் வயதொத்த துணைவியும் அவனது அக்கா வீட்டில் அகதிகளாக இருப்பதாக கூறினான்.
விடு மச்சி எல்லா சரி ஆகிடும் என்று மறுபடியும் ஊசியை ஏற்றிவிட்டு, நீ அந்த நம்பர்க்கு கால் பண்ணி வேலையை பத்தி கேளு கண்டிப்பா வேலை கிடைக்கும் நான் நைட் உனக்கு கால் பன்றேன் என்று தொடர்பை துண்டித்தேன் .
அழைபேசி தொடர்பைதுண்டித்தும் அவன் நினைவே என் முன் நின்றது .
தங்குவதற்கு வீடு இல்லை , சம்பாதிக்க வேலையில்லை பிறகு எந்த தைரியத்தில் அதுவும் உறவுகளை எதிர்த்து திருமணம் செய்தான் இவன் , காதல் திருமணத்தை ஆதரிப்பவன் தான நான், இருந்தாலும் இதை ஆதரிக்க என் மனம் ஒப்புகொள்ளவில்ல.
இந்த நிலையில் இருந்துகொண்டு இருவரும் முன்னேறினால் உறவுகள் அவர்களை போற்றுவார்கள் , ஒரு வேளை வறுமையில் வாடினால் காதலை தூற்றுவார்கள்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...