Skip to main content
இன்று பள்ளிகால நண்பன் ஒருவன் நெடுநாட்களுக்கு பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான் . அழைப்பு வந்தவுடனே அறிந்துகொண்டேன் எதோ காரியம் வேண்டி தான் அழைகிறான் என்று , ஏனென்றால் எனக்கான நட்பு வட்டத்தில் காரியக்கார நண்பர்கள் கொஞ்சம் அதிகம் தான் .
அவன் நலம் விசாரித்த நடைமுறையிலையே அவனின் சோகமும் தெரிந்தது . நானும் நிலைமையை புரிந்துகொண்டு பிரபா ஏதாவது பிரச்சனையா என்றேன் . சற்று தடுமாற்றத்துடன் ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அவனிடமிருந்து அழுகை மட்டுமே பதிலாக வந்தது.
நான் என்ன செய்வதென்று புரியாமல் சமாதான வார்த்தைகளை சராமாரியாக சொல்லி கொண்டிருந்தேன். சோகத்தில் ஆறுதல் கூறுவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்றது வலிக்காமல் வலிக்கும் . இதை அனுபவரீதியாக பலமுறை உணர்ந்துள்ளேன் . இருந்தும் ஒருவர் சோகத்தில் இருக்கும்போது அதுவும் அழுகும் போது ஆறுதல் கூறுவது ஆறாம்அறிவின் இயல்பே.
அவனிடம் என்னதான்டா உனக்கு பிரச்சன இப்ப , எதுக்கு அழுகுற என்று சற்று கடிந்துகொண்ட பின் அவன் சோகக்கதையை சொல்ல துவங்கினான். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று. அதுவும் எதிர்ப்பை மீறிய காதல் திருமணமாம் . 2 வருட காதலுக்காக 20 வருட பெற்றோர்உறவை எப்படித்தான் இழந்தானோ ? என்று எண்ணினாலும் 20 வருட உறவில் அவனையும் அவன் பெற்றோர் புரிந்து கொள்ளவில்லையோ
என்றுதான் பொதுபுத்தியில் தோன்றுகிறது.
அதுதான் முடிந்துவிட்டதே , இனி என்ன பிரச்சனை என்று நான் கேட்கும் போதுதான் , அவன் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தது நியாபகம் வந்தது .நான் அப்போதுதான் அறிந்து கொண்டேன் அவன் அழுததன் காரணத்தை , கோவையில் எனக்கு தெரிந்த சில நண்பர்களின் தொலைபேசி எண்ணை கொடுத்து வேலை தொடர்பாக பேசுமாறு கூறினேன்.அவனும் சற்று ஆறுதலானான் .
நான் அடுத்த கேட்க நினைத்த கேள்வியை சற்று யூகித்திருப்பான் போல, அவனும் அவனின் வயதொத்த துணைவியும் அவனது அக்கா வீட்டில் அகதிகளாக இருப்பதாக கூறினான்.
விடு மச்சி எல்லா சரி ஆகிடும் என்று மறுபடியும் ஊசியை ஏற்றிவிட்டு, நீ அந்த நம்பர்க்கு கால் பண்ணி வேலையை பத்தி கேளு கண்டிப்பா வேலை கிடைக்கும் நான் நைட் உனக்கு கால் பன்றேன் என்று தொடர்பை துண்டித்தேன் .
அழைபேசி தொடர்பைதுண்டித்தும் அவன் நினைவே என் முன் நின்றது .
தங்குவதற்கு வீடு இல்லை , சம்பாதிக்க வேலையில்லை பிறகு எந்த தைரியத்தில் அதுவும் உறவுகளை எதிர்த்து திருமணம் செய்தான் இவன் , காதல் திருமணத்தை ஆதரிப்பவன் தான நான், இருந்தாலும் இதை ஆதரிக்க என் மனம் ஒப்புகொள்ளவில்ல.
இந்த நிலையில் இருந்துகொண்டு இருவரும் முன்னேறினால் உறவுகள் அவர்களை போற்றுவார்கள் , ஒரு வேளை வறுமையில் வாடினால் காதலை தூற்றுவார்கள்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...
இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...