Skip to main content

‪அவள்‬ ‪‎ஒரு‬ ‪கிராதகி‬ - 2.0

அறிமுகம் இல்லா முகம் தான் , சொல்லப்போனால் அன்று தான் முதல் அறிமுகம்.கற்றலைவரிசையில் காதல் செய்த எனக்கு அன்று தான் அவள் முகம் முதல் அறிமுகம்.
அவளுக்கான காத்திருப்பில் அயர்ந்தவனாய் அமர்ந்திருந்தேன்.ஏனோ வியர்வை இடைவிடாமல் ஊறியது.தொண்டைக்குள் ஏதோ தடுமாற்றம். ஆனால்
இன்னும் அவளை பார்க்கவில்லை.
சரியாக சொன்னால் அவளை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் ரெண்டுமணி நேரம் முன்பே வந்துவிட்டேன்.ஆனால் இந்த ரெண்டுமணி நேரமும் யாரோ யானையை வைத்து முள் தள்ளுவது போலவே என் கடிகாரம் மெதுவாக சுழன்றது.
நேரம் நெருங்கிவிட்டது , அவள் நிச்சயம் வருவாள் , நான் சொன்ன சிவப்பு நிற சுடிதாரில் , எனக்கு பிடித்த மல்லிகை பூ கூந்தலோடு ,
ஐயோ அவள் எப்படி இருப்பாள் , வெள்ளை நிறமா , கருப்பு நிறமா , ஒல்லியா , குண்டா எதுவும் தெரியாது எனக்கு , கிராதகி போட்டோவை கூட இதுவரை காட்டவில்லை.
யாருக்காகவும் இதுவரை நான் காத்திருந்தது இல்லை , அவளுக்காக முதல் முறை நெடுநேரம் வியர்வை வழிந்த முகத்தோடு காத்து கொண்டிருக்கிறேன்.
நான் காத்துகிடந்த இடமோ ஒரு coffee shop கிட்டத்தட்ட காதலர்கள் கூடும் கலையரங்கம்.சுற்றிலும் காதலர்கள் ஆனால் நான் மட்டும் தனியே , எனக்கானவளும் வந்துவிடுவாள் அவளுக்கான காத்திருப்பு உண்மையில் சுகம் நிறைந்தது தான்.
அந்த தனிமையில் தான் வைரமுத்துவின் வரிகள் உண்மை என்று தோன்றியது.இன்னும் ஓரிரு நிமிடங்கள் தான் அவள் வருகையை எதிர்பார்த்து என் கண்கள் அந்த coffeeshop இன் வாயிலையே பார்த்துகொண்டிருந்தது.
என் கண்கள் வாயிலை பார்க்க , அதன் அருகே இருந்தே முதலாளியின் கண்கள் என்னையே பார்த்து கொண்டிருந்தது.எங்கே காசு கொடுக்காமல் ஓடிவிடுவேனோ என்று.
அவள் சொன்ன நேரம் ஆயிற்று , ஆனால் அவள் இன்னும் வரவில்லை.
இனி எத்தனை முறை அவள் முகத்தை பார்த்தாலும் இவ்வளவு நேரம் காத்திருந்து பார்ப்பேனா என்று சத்தியமாக தெரியவில்லை...
யாரோ ஒரு பெண் தனியாக வருகிறாள்.தூரத்தில் வருகிறாள் முகம் என் கண்களுக்கு சரியாக தென்படவில்லை. ஆனால் பெண் தான் , ஒரு வேலை என்னவள் தான் இவளோ ..
ஆம் , அதே சிவப்பு நிற சுடிதார் தான் , அவள் மெல்ல மெல்ல ஊர்ந்து வருகிறாள் .திருவிழா காலங்களில் தேரில் பவனி வரும் அம்மன் போல..
என் விழிகளின் எதிர்பார்ப்பு விண்ணைதொட்டது , வியர்வை சுரப்பி அனைத்தும் அடைமழையாய் கொட்டியது.கை , கால்களில் கூட ஏதோ ஒரு நடுக்கம்.முகத்தில் ஒரு வித வெட்கம்.
அதை கலைக்கவே அடித்தது அலைபேசி மணி , கனவு கலைந்தவனாய் அலைபேசியை எடுத்தால் அதில் என்னவளின் நம்பர். சற்று அதிர்ந்தே போனேன்.காரணம் நான் இவளாக இருக்குமோ என்று ரசித்த பெண் அதே நடையில் அலைபேசி இன்றி நடந்து , என்னை கடந்தும் போய்விட்டால்.
என்னவளின் அழைப்பை எடுத்த எனக்கு மேலும் ஓர் அதிர்ச்சி.அவள் வரவில்லையாம்.அழுதுகொண்டே கூறுகிறாள்.
நான் என்ன செய்வது " என்ன ஆச்சு டா" என்றேன்
வீட்ல "அம்மா போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க" என்றால் அழுதுகொண்டே
"அட லூசு , இதுகெல்லாம அழுகறது" விடு இன்னொரு டைம் பாத்துக்கலாம்.
உண்மைய சொன்ன நான் இன்னும் கிளம்பவே இல்ல , இனி தான் கிளம்பனும் உன்கிட்ட என்ன சொல்றதுன்னு யோசுசிட்டு இருந்தேன் , அதுக்குள்ளே நீயே கால் பண்ணிட்ட" என்று கண்களில் நீர் தேங்க கூறினேன்.
"அம்மா வந்துட்டாங்க , நான் அப்புறம் கால் பண்றேன்" என்றவுடன் அழைப்பு துண்டானது.
"சரி , வேறு என்ன செய்வது கிளம்பலாம்" என்று நகர்ந்தேன்.
நான் பில் கட்ட வருவதை பார்த்த அந்த முதலாளி சிறிதே புன்னகைத்தார்.
என்னவளின் முதல் முகம் இன்னும் அறிமுகம் இல்லாமல் தொடர்கிறதே என்ற வருத்தத்தில் , நானும் சோக புன்னகையை உதிர்த்து விட்டு வெளியே நகர்ந்தேன் .
நான் ரசித்த பெண்ணும் அவளின் காதலனுக்காக காத்திருப்பில் வாயிலையே பார்த்துகொண்டிருந்தாள்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...