Skip to main content

‪‎மாலை‬ ‪நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 4.0



இரவு 9 மணிக்கு அலரும் என் கைபேசி , தீடிரென்று காலை 11 மணிக்கு அலறியது.
வேலையில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இப்போது போனை எடுக்கலாமா , கூடாதா என்று கூட எனக்கு தெரியாது.
அப்பாவின் நம்பர் ஆயிற்றே , சற்றும் யோசிக்கவில்லை எடுத்துவிட்டேன்.
"ஹலோ , ..."
"நான் அம்மா பேசுறேன் சாமி"
"சொல்லும்மா , இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்க , அப்பா எங்க ? "
"இல்ல சாமி , அப்பா கீழ விழுந்துட்டாரு , அத சொல்லலாமுன்னு தான் கூப்டேன் "
"என்ன ஆச்சும்மா " என்று முடிப்பதற்குள்ளாகவே
"கார்த்திக்" என்று ஒரு குரல் கர்ஜித்தது.
ஏற்கனவே படப்படப்பில் இருந்த என் கைகள் தானாக சிவப்பு பட்டனை அமுக்கியது.
என்ன செய்வதென்று புரியாமல் முகம் முழுதும் நனைந்தவனாய் மேலே பார்த்தேன்.
ஆம் , என் மேனேஜர் தான்
நான் பார்த்ததும்
" கம் டூ மை கேபின் " என்று கடுப்போடு உள்ளே நகர்ந்தார்.
அப்பாவிற்கு என்ன ஆனது என்று யோசிக்க கூட விடவில்லை.என் மனம் என்னிடம் இல்லை.என் அப்பாவின் நிலைமையை தேடி எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
"கார்த்தி , அவன் சரியான சிடுமூஞ்சி உடனே போய் பாத்துறு " என்றது என் நிலைமையறியா இருநாள் நண்பனின் குரல்.
வேறுவழியின்றி போனை கீழே வைத்துவிட்டு , உள்ளே சென்றேன்.
"ஆபிஸ் டைம்ல போன் use பண்ண கூடாதுன்னு தெரியாதா ? "
"இல்ல சார் , வீட்ல இருந்து கால் பண்ணிருந்தாங்க , அது தான் .... "
"வீட்டு சென்டிமென்டெல்லாம் இங்க கொண்டு வராத மேன் , ஆபிஸ் ரூல்ஸ் ய first follow பண்ணு "
"நீ இப்ப தான் joint பண்ணிருக்க , அதுநால தான் just warning ஓட விடுரேன்"
"ஓகே வா"
"ஓகே சார்" என்றேன் , என் அப்பாவின் சிந்தனையோடு.
வெளியே வந்ததும் என் கால்கள் வேகமாக cafeteria நோக்கி நடக்க துவங்கியது.
cafeteria வை அடைந்ததும். உடனே என் அப்பாவின் நம்பர்க்கு என் விரல்கள் கால் செய்தது , balance இல்லாததை மறந்து.
என்ன செய்வதென்றே புரியவில்லை , ஆயிரம் பேர் என்னை சுற்றி ஊர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அனைவரும் கையிலும் ஆன்ட்ராய்ட் மொபைல் தான் , நிச்சயம் அளவிற்கதிகமான balance இருக்கும்.
ஆனால் யாரிடம் கேட்பது , வேலையில் சேர்ந்து ஒருவாரம் தான் ஆகிறது அந்த அளவுக்கு நண்பர்களும் இல்லை.
ஒர் சிறு உதவியை கேட்க கூட கூச்சப்படும் தலைமுறையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எனக்கு நானே நொந்துகொண்டேன்.
எதுஎப்படியோ , என் அம்மா பேசிய பொழுது அவர் குரலில் ஒரு தெளிவு இருந்தது.அதனூடே அறிந்து கொண்டேன் அப்பாவிற்கு பெரிதாக அடி ஏதும் பட்டிருக்க வாய்ப்பில்லை என்று.
இருந்தும் என் மனது இன்னும் படப்படப்பில் தான் உள்ளது.
யாரிடமாவது கேட்க வேண்டுமே , யாரிடம் கேட்பது , என் நினைவில் உடனே வந்தது அந்த செக்யூரிட்டியின் முகம்தான்
"அண்ணே , ... "
"சொல்லுங்க சார் "
"ஒரு சின்ன Help ண்ணே "
"என்ன சார் , a.c level கம்மியா வைக்கனுமா ? "
"அது இல்லணே , ஒரு கால் பண்ணணும் , உங்க போன் தர்றீங்களா ? "
"அய்யோ , சார் balance இல்லைங்கலே , ஏதாவது emergency ங்களா ,office போன்ல வேணா பண்ணுங்க "
"இல்ல வேணாம்ணே , இப்ப தான் உள்ள போன் பேசுனதுக்கு மேனேஜர் திட்டுனாரு , office போன்ல பேசுனேன் தெரிஞ்சா அந்த ஆளு என்ன பண்ணுவார்ன்னே தெரியாது "
"சரி , விடுங்கண்ணே "
"சார் , ஒரு நிமிஷம் இருங்க .."
"வித்யா மேடம் , வித்யா மேடம் "
"அண்ணே எத்தனை டைம் சொல்லிருக்கேன் , மேடம் ன்னு கூப்பிடாதீங்கன்னு " என்று சினுங்கியது அந்த வித்யாவின் குரல்.
"அப்படியோ , பழகி போச்சும்மா "
" சரி , எதுக்குண்ணே கூப்பிட்டீங்க .."
"இல்ல மா , உங்க போன் தர்றீங்களா இவரு புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காரு , ஏதோ அவசரமா கால் பண்ணணுமா "
" இந்தாங்க ணா "
" சார் , இந்தாங்க "
போனை வாங்கியதும் விரல்கள் வேகமாய் என் அப்பாவின் நம்பரை தட்டியது.
எதிர்முனையில் அப்பாவின் குரல் , "ஹலோ , என்றது.
" அப்பா , நான் கார்த்திக் பேசுறேன்ப்பா "
"சொல்லுப்பா , இந்த டைம்ல கால் பண்ணிருக்க , வேலைக்கு போலையா , இது யாரு நம்பரு ? "
"இல்லப்பா , ஆபிஸ்ல தான் இருக்கேன் , உனக்கு ஏதோ அடிப்பட்டுருச்சுன்னு அம்மா கால் பண்ணுச்சு "
"கழுத , லேசா கண்ணசஞ்சேன் அதுக்குள்ள கால் பண்ணிட்டாலா , அது ஒன்னுமில்ல தம்பி , விறகொடிக்க மரமேறுனேன் கொஞ்சம் சறிச்சிறுச்சு , அவ்வளவு தான் ,நீ ஏதும் போட்டு குழப்பிக்காதைய்யா "
"சரி , சரி ப்பா நான் பயந்தே போய்ட்டேன் , சரி நைட்டு கூப்பிடுறேன் " என்றவாரே அழைப்பை துண்டித்தேன்.
போனிற்க்காக காத்திருந்த வித்யாவிடம் " ரொம்ப thanks ங்க " என்று போனை கொடுத்தேன் .
சிரித்து கொண்டே நகர்ந்து சென்றார்.
"அண்ணே , ரொம்ப
thanks ண்ணே "
"சார் thanks எல்லாம் எதுக்கு சார் "
" சார் ன்னு கூப்பிடாதிங்கண்ணே , தம்பிண்ணே கூப்பிடுங்க " என்று சொல்லியவாரே உள்ளே சென்றேன்.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...