Skip to main content

மாலை நேர டீகிளாஸ் 3.0



முதல் வேலையின் , முதல் நாள் , பிரம்மிப்பாக இருந்தது.வானுயர்ந்த கட்டிடத்தின் காவலாளியை மட்டுமே பார்த்து பழகிய என் கண்களுக்குள் ஒரு கம்பீரம்.

என்னிடம் இருப்பதிலே புதிதான ஆடையை தான் அன்று அணிந்திருந்தேன்.ஆனால் அங்குள்ள ஆடைகளுக்கு மத்தியில் என் ஆடை ஆரிய கால பழையது போல் அழுக்காக தெரிந்தது.

சரி , உள்ளே செல்லலாம் என்று எனக்கான நடையில் மெதுவாய் நகர்ந்தேன்.

"சார் , கொஞ்சம் இருங்க , ப்ளீஸ் உங்க identity கார்டு ய காட்டுங்க  ? என்றது கம்பீரமான அந்த காவலாளியின் குரல்.

"இல்லைங்க , இன்னைக்கு தான் First  நாள் வேலைக்கு வந்திருக்கேன் , Identity  card  இனி தான் தருவாங்க" என்றேன் பணிவாக.

"எந்த கம்பெனி சார் ? "

"Secondworld  Pvt  Ltd "

"இல்ல சார் நாங்க Identity  card  இல்லாம உள்ள யாரையும் விட கூடாது , அட்லீஸ்ட் appoinment  ஆர்டர் ஆவது வச்சிருக்கிங்களா ?

"ஹ்ம்ம் , அது இருக்கு " என்றவாரே எனது Appointment  order  ய காட்டினேன்.

"சரி சார் , நீங்க போங்க " என்றவாரே சிரித்து கொண்டே அனுப்பி வைத்தான்.

என் கால்கள் கம்பெனி வாயிலை தேடி கொண்டு ஊர்ந்து சென்றது. உள்ளே இருந்த தட்வவெப்பமும் , வினோத மனிதர்களும் விசித்திரமாய் இருந்தார்கள்.

என்னை யாரோ துரத்துவது போல் ஒரு உணர்வு , சுற்றிலும் ஆண் , பெண் அல்லாத 1000 உடல்கள் என் உடலை சூழ்ந்து கொண்டே மெதுவாய் நகர்த்தியது.

விரித்தாடும் கூந்தலையும் , அலைபேசியை அணைத்திருக்கும் விரல்களையும் பல முறை பார்த்தாலும் இன்று புதிதாக தான் உள்ளது.

என்னை அழைத்த அலுவலகத்தை நெருங்கிவிட்டேன். அட , ஆண்டவா , இங்கேயும் ஒரு காவலாளி , மறுபடியும் அதே கேள்வி ஆனால் ஆங்கிலத்தில்  , நான் அங்கு  சொன்ன அதே பதில் , ஆனால் அதே தமிழில்.

கல்லூரி காலத்தில் ஆங்கிலத்திற்கு என்றே தனியாக சிறப்பு வகுப்பெல்லாம் நடத்தினார்கள்.அதையெல்லாம் கண்டாலே காறி துப்பும்  வர்க்கம் நான் , ஆனால் இன்று என்னை அந்த காவலாளி நிச்சியம் அவன் மனதுக்குள் துப்பி இருப்பான்.

முடிவாக ஒரு இருக்கையை காட்டி அங்கே அமர சொல்லிவிட்டு , உள்ளே யாரையோ பார்க்க சென்றான்.

நானும் ஒன்றும் புரியாதவனாய் அங்கே அமர்திருந்தேன்.

குளிரூட்டபட்ட அறை , மிதமான வெளிச்சம் , மயான அமைதி இதெல்லாம் நான் கண்டிராத புது அனுபவம்.முதல் முறை இந்த அனுபவம் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஆனால் மீண்டும் ரசிக்க தோன்றுமா ? என்று தெரிய வில்லை.

காவலாளி வெளியே வந்தார் " சார் உங்கள wait பண்ண சொன்னங்க எதோ மீட்டிங் நடக்குதாம்".

"ஹ்ம்ம் , okay " என்று எனக்கு தெரிந்த ஆங்கில புலமையை கொஞ்சம் காட்டினேன்.

"you r most welcome" என்று ஏதோ அவன் கூறினான்.

ஏதோ சொல்கிறான் , எனக்கு ஒன்றும் புரியவில்லை ,

 "அண்ணே , எவ்வளவு நேரம் ஆகும் ? " என்று பம்பியவனாய் தமிழில் கேட்டேன் .

"தெரில சார் , ஆனா இன்னும் எப்படியும் 3 Hours  ஆகும்" என்று சொல்லி கொண்டே அவர் வேலையை பார்த்துகொண்டிருந்தார்.

மீண்டும் அவர் சொன்ன அதே இடத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தேன்.காத்திருப்பு எனக்கு புதிதல்ல , இதற்கு முன் வரை எதிர்பார்ப்பின்றி காத்திருந்தேன் , ஆனால் இம்முறை எதிர்பார்போடு காத்துகொண்டிருகிறேன்.

ஏதோ ஏதோ சிந்தனைகள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருகிறது.என்னை பற்றி அல்ல என் அப்பாவையும் , அம்மாவையும் நினைத்து.

கால் தேய தேய உழைத்தாலும் இரவு நேரம் வந்தாலே என் காலை மெதுவாக பிடித்துவிடுவார். இரவு நான் உண்ணவில்லை என்று அறிந்தாலே தூக்கத்தில் தட்டி எழுப்பி "ஒரு வாய் , சாப்டுட்டு தூங்கு பா" என்று வாயிற்குள் திணித்திடுவார்.

அம்மாவோ இதற்க்கு ஒரு படி மேல் , நான் வைத்த மிச்சத்தையும் , பழையதென தூக்கி போடும் பண்டத்தையும் அவள் வயிற்றிற்குள் நிரப்பி கொள்வார்.

நான் ஏதும் கேட்டாலோ , "நல்லா தான சாமி , இருக்கு , இத போய் தூக்கி எறிஞ்சுட்டு " என்று என் வாயை அடைதிடுவார்.

அது எதுவும் இன்று வரை மாறவில்லை.என்னையும் சேர்த்து தான் ,

என் அப்பாவின் கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு , வித விதமாய் என் அம்மாவிற்கு வயிறார உணவு , அது போதும் , இதை மட்டுமாவது நிறைவேற்றிகொடு இறைவா ,
என்று சிந்தனையில் நனைந்தவனாய் உள்ளிருந்து வரும் அலைபிற்காக காத்திருந்தேன்.


Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...