Skip to main content

மாலை நேர டீகிளாஸ் 3.0



முதல் வேலையின் , முதல் நாள் , பிரம்மிப்பாக இருந்தது.வானுயர்ந்த கட்டிடத்தின் காவலாளியை மட்டுமே பார்த்து பழகிய என் கண்களுக்குள் ஒரு கம்பீரம்.

என்னிடம் இருப்பதிலே புதிதான ஆடையை தான் அன்று அணிந்திருந்தேன்.ஆனால் அங்குள்ள ஆடைகளுக்கு மத்தியில் என் ஆடை ஆரிய கால பழையது போல் அழுக்காக தெரிந்தது.

சரி , உள்ளே செல்லலாம் என்று எனக்கான நடையில் மெதுவாய் நகர்ந்தேன்.

"சார் , கொஞ்சம் இருங்க , ப்ளீஸ் உங்க identity கார்டு ய காட்டுங்க  ? என்றது கம்பீரமான அந்த காவலாளியின் குரல்.

"இல்லைங்க , இன்னைக்கு தான் First  நாள் வேலைக்கு வந்திருக்கேன் , Identity  card  இனி தான் தருவாங்க" என்றேன் பணிவாக.

"எந்த கம்பெனி சார் ? "

"Secondworld  Pvt  Ltd "

"இல்ல சார் நாங்க Identity  card  இல்லாம உள்ள யாரையும் விட கூடாது , அட்லீஸ்ட் appoinment  ஆர்டர் ஆவது வச்சிருக்கிங்களா ?

"ஹ்ம்ம் , அது இருக்கு " என்றவாரே எனது Appointment  order  ய காட்டினேன்.

"சரி சார் , நீங்க போங்க " என்றவாரே சிரித்து கொண்டே அனுப்பி வைத்தான்.

என் கால்கள் கம்பெனி வாயிலை தேடி கொண்டு ஊர்ந்து சென்றது. உள்ளே இருந்த தட்வவெப்பமும் , வினோத மனிதர்களும் விசித்திரமாய் இருந்தார்கள்.

என்னை யாரோ துரத்துவது போல் ஒரு உணர்வு , சுற்றிலும் ஆண் , பெண் அல்லாத 1000 உடல்கள் என் உடலை சூழ்ந்து கொண்டே மெதுவாய் நகர்த்தியது.

விரித்தாடும் கூந்தலையும் , அலைபேசியை அணைத்திருக்கும் விரல்களையும் பல முறை பார்த்தாலும் இன்று புதிதாக தான் உள்ளது.

என்னை அழைத்த அலுவலகத்தை நெருங்கிவிட்டேன். அட , ஆண்டவா , இங்கேயும் ஒரு காவலாளி , மறுபடியும் அதே கேள்வி ஆனால் ஆங்கிலத்தில்  , நான் அங்கு  சொன்ன அதே பதில் , ஆனால் அதே தமிழில்.

கல்லூரி காலத்தில் ஆங்கிலத்திற்கு என்றே தனியாக சிறப்பு வகுப்பெல்லாம் நடத்தினார்கள்.அதையெல்லாம் கண்டாலே காறி துப்பும்  வர்க்கம் நான் , ஆனால் இன்று என்னை அந்த காவலாளி நிச்சியம் அவன் மனதுக்குள் துப்பி இருப்பான்.

முடிவாக ஒரு இருக்கையை காட்டி அங்கே அமர சொல்லிவிட்டு , உள்ளே யாரையோ பார்க்க சென்றான்.

நானும் ஒன்றும் புரியாதவனாய் அங்கே அமர்திருந்தேன்.

குளிரூட்டபட்ட அறை , மிதமான வெளிச்சம் , மயான அமைதி இதெல்லாம் நான் கண்டிராத புது அனுபவம்.முதல் முறை இந்த அனுபவம் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஆனால் மீண்டும் ரசிக்க தோன்றுமா ? என்று தெரிய வில்லை.

காவலாளி வெளியே வந்தார் " சார் உங்கள wait பண்ண சொன்னங்க எதோ மீட்டிங் நடக்குதாம்".

"ஹ்ம்ம் , okay " என்று எனக்கு தெரிந்த ஆங்கில புலமையை கொஞ்சம் காட்டினேன்.

"you r most welcome" என்று ஏதோ அவன் கூறினான்.

ஏதோ சொல்கிறான் , எனக்கு ஒன்றும் புரியவில்லை ,

 "அண்ணே , எவ்வளவு நேரம் ஆகும் ? " என்று பம்பியவனாய் தமிழில் கேட்டேன் .

"தெரில சார் , ஆனா இன்னும் எப்படியும் 3 Hours  ஆகும்" என்று சொல்லி கொண்டே அவர் வேலையை பார்த்துகொண்டிருந்தார்.

மீண்டும் அவர் சொன்ன அதே இடத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தேன்.காத்திருப்பு எனக்கு புதிதல்ல , இதற்கு முன் வரை எதிர்பார்ப்பின்றி காத்திருந்தேன் , ஆனால் இம்முறை எதிர்பார்போடு காத்துகொண்டிருகிறேன்.

ஏதோ ஏதோ சிந்தனைகள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருகிறது.என்னை பற்றி அல்ல என் அப்பாவையும் , அம்மாவையும் நினைத்து.

கால் தேய தேய உழைத்தாலும் இரவு நேரம் வந்தாலே என் காலை மெதுவாக பிடித்துவிடுவார். இரவு நான் உண்ணவில்லை என்று அறிந்தாலே தூக்கத்தில் தட்டி எழுப்பி "ஒரு வாய் , சாப்டுட்டு தூங்கு பா" என்று வாயிற்குள் திணித்திடுவார்.

அம்மாவோ இதற்க்கு ஒரு படி மேல் , நான் வைத்த மிச்சத்தையும் , பழையதென தூக்கி போடும் பண்டத்தையும் அவள் வயிற்றிற்குள் நிரப்பி கொள்வார்.

நான் ஏதும் கேட்டாலோ , "நல்லா தான சாமி , இருக்கு , இத போய் தூக்கி எறிஞ்சுட்டு " என்று என் வாயை அடைதிடுவார்.

அது எதுவும் இன்று வரை மாறவில்லை.என்னையும் சேர்த்து தான் ,

என் அப்பாவின் கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு , வித விதமாய் என் அம்மாவிற்கு வயிறார உணவு , அது போதும் , இதை மட்டுமாவது நிறைவேற்றிகொடு இறைவா ,
என்று சிந்தனையில் நனைந்தவனாய் உள்ளிருந்து வரும் அலைபிற்காக காத்திருந்தேன்.


Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...