Skip to main content

‪‎அவன்‬ ‪ஒரு‬ ‪‎கிராதகன்‬ 2.0

பேருந்துநிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருக்கிறேன்.நான் வந்து இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது.
நினைவிருக்கிறது , அருண் ஐஸ்கீரிம் கடையின் ஓரம் தான் என் கால்கள் காத்துகொண்டிருந்தது.
ஆங்காங்கே சில இளைஞர்களின் கண்கள் என் உடலை ஊடுறுவிபார்த்தது.
பள்ளிசெல்லா குழந்தைகள் பலபேர் பட்டத்தை பறக்கவிடாமல் இறுக்கிபிடித்து கொண்டிருந்தினர்.
அவ்வப்போது அங்கிருந்த ஆட்டோகாரரின் குரல் வேறு என் மனதை இடையூறு செய்துகொண்டே இறுந்தது.
பூ விற்கும் பாட்டியிடம் பேரம் பேசிய நாகரீக பெண்ணொருத்தி என்னை பார்த்துகொண்டே கடந்து சென்றாள்.
இந்த அனுபவம் புதிதுதான் இதற்குமுன் நெடுநேரம் யாருக்காகவும் காத்திருந்தது இல்லை.இது போன்ற வலியுடன் , சுகம் நிறைந்த உணர்ச்சியை இன்றுதான் முதல்முறை உணர்கிறேன்.
பள்ளி காதல் முதல் , பருவ காதல் வரை அனைவரும் இளைப்பாரும் அரியதொரு இடம்தான் இந்த பேருந்து நிறுத்தம்.
பல காதல்களை விழுங்கியும் உள்ளது.சில காதல்களை வாழவைத்தும் உள்ளது.
சரி நான் ஏன் காத்திருக்கிறேன் அதுவும் தனிமையில் இவ்வளவு நேரமாக ,
காரணம் இருக்கிறது , இன்று தான் அவனை முதல்முறை பார்க்க போகிறேன்.
மனதிற்குள் ஏதோ ஒரு மத்தாப்பு.வண்ண வண்ண நிறங்களில் வரிசைகட்டி பூத்தது.
வங்காளவிரிகுடா அலைகலெள்ளாம் அன்று தான் என் மன ஓட்டத்தில் வந்து சென்றது.
அவனை காண வேண்டும் என்ற ஆசையில் என் கால்கள் சுகமாய் உள்ளது. ஆனால் இடைவிடாது ஊடுறுவிகொண்டிருக்கும் அந்த இளைஞனின் கண்கள் மட்டும் தான் எனக்கு இப்போது வலியாய் உள்ளது.
இது என்னவனுக்கான உடலாயிற்றே , வஞ்சகன் வைத்த கண் எடுக்காமல் இப்படியா பார்ப்பது , மனதிற்குள் திட்டி கொண்டேன்.
நேரம் நெருங்க நெருங்க என் படபடப்பு அதிகமானது.காய்ந்திருந்த கூந்தல் கூட மீண்டும் ஈரமாக துவங்கியது.
கடைசி முறை பார்ப்பதாக கூறி , அவனை காக்க வைத்த போது அவனும் இதே படப்படபோடு தான் இருந்திருப்பான்.
நிச்சயம் , என்னால் உணரமுடிகிறது. ஆனால் இன்னும் காத்துகொண்டுதான் இருக்கிறேன் , அவனை காண
ஐயோ அவன் எப்படி இருப்பான் , வெள்ளையா , கருப்பா , ஒல்லியா , குண்டா எதுவும் தெரியாது எனக்கு.கிராதகன் ஒரு புகைப்படத்தை கூட இதுவரை அனுப்பவில்லை.
காலையிலேயே கால் செய்தான் , என்ன கலர் டிரெஸ் போட்டுட்டு வர என்று
நானும் கண்டிப்பாக கூறிவிட்டேன் வெள்ளை நிற சட்டையில் தான் , வர வேண்டுமென்று , அவன் சொன்ன சிவப்பு நிற சுடிதாரில் , தலைநிறைய மல்லிகை பூவோடு நான் அவனை எதிர்பார்த்து.
தீடிரென்று அலைபேசி அலறியது. ஆம் அவனின் நம்பர் தான் வந்துவிட்டான் போல , என்ற ஆர்வகளிப்பில் ,
"எங்கடா இருக்க" என்றேன்.
"இல்ல டா , அது வந்து அது வந்து " என்று வார்த்தையை விழுங்கினான்.
"ஏன்டா , என்ன ஆச்சு , ஆர் யூ ஆல்ரைட் "
"வீட்ல கொஞ்சம் வேலை , சொந்தகாரங்க நிறைய பேர் வந்திருங்காங்க , நானும் எவ்வளவோ டைம் கேட்டுபாத்துட்டேன் , வீட்ல இப்ப போக வேணாம்ன்னு சொல்ராங்க " என்றான் தயங்கி தயங்கி
"டேய் , கிறுக்கா இத சொல்ரதுக்கா இப்படி பம்புர , சரி விடு இன்னொரு டைம் பாத்துகலாம் "
"எங்க , இருக்க" என்றான்
"இங்க , பஸ் ஸ்டான்ட் பக்கத்துல இருக்கிற ப்ரன்ட் வீட்ல , இப்ப தான் வந்தேன்"
"ஏதும் கோபம் இல்லையே "
"டேய் லூசு , அதெல்லாம் ஒன்னுமில்ல , போய் என் அத்தை சொல்ர வேலைய ஒழுங்கா பாரு "
"சரி டீ " என்று சிரித்தவாரே தொடர்பை துண்டித்தான்.
நான் செய்வதறியாது விழிகளுக்குள் நீரை நிரப்பி கொண்டு , கனவு கலைந்தவள் போல் அங்கிருந்து நகர்ந்து சென்றேன்.
என் எதிரே என்னை ஊடுறுவிபார்த்தவன் அவன் காதலியோடு உறவாடி கொண்டிருந்தான்.
சிரிப்பை மட்டும் உதிர்த்தபடி காணாத என்னவனை கற்பனையில் வரைந்து கொண்டே தொடர்கிறது என் பயணம்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...