Skip to main content

சென்னைவாசியின் மனஉளைச்சல்



சென்னையையே புரட்டி போட்டிருக்கும் இந்த மழை வெள்ளம் பொருட் சேதம் மட்டுமின்றி தங்களது சொந்தங்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நீங்கா வடுவாக பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சேதங்கள் தந்த அதிர்ச்சியால், கெட்ட கனவுகளும் நினைவுகளும் மீண்டும் மீண்டும் பலரது மனதில் வந்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதை மனநலத்துறையில் "மனஉளைச்சல் சீர்கேடு பதிவு" என்கிறார்கள். இத்தகைய சூழலை முறையாக அணுகுவது அவசியமாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இவ்வகை மன உளைச்சலிலிருந்து மீள்வது எப்படி என்று பிரபல மன உளவியலாளர் Dr. மினி ராவ் அவர்கள் தரும் குறிப்புகள் இதோ உங்களுக்காக..

மன உளைச்சலுக்கு தள்ளப்படுபவர்கள் சமூகத்திலிருந்து தங்களை தனிமை படுத்தியோ, திடீரென்று பீதி அடைபவர்களாகவோ அல்லது ஒரு வித கலக்கத்துடன் காணப்படுவார்கள். இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களுக்கு தெம்பூட்டும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விடுபட நாம் பின்பற்றக்கூடிய சில வழி முறைகள் :

1. நடந்ததையே நினைக்காமல் வெளி உலகிற்கு வாருங்கள்

வீட்டிலியே முடங்கிக் கிடக்காமல் வெளியே சில நேரம் நேரத்தை செலவிடுவது மிக அவசியம். நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் பயன் தரக்கூடியது. உடற் பயிற்சியின் பொழுது என்டோர்பின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதற்கு ஹாப்பி ஹார்மோன் என்ற பெயரும் உண்டு. உடற்பயிற்சி, நேர்மறை சிந்தனைகளை தரக் கூடியது. ஆகவே மனதில் கவனம் செலுத்தாமல் உடலில் கவனம் செலுத்துதல் மாற்றத்தை தரும்.

2. பிறரை சந்திக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்

சக மனிதர்களை சந்திப்பதன் மூலம் பரஸ்பரம் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும். இது மனதை லேசாக ஆக்க உதவும். முடிந்த வரை பிறரிடம் உரையாடும் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்

பிறருக்கு உதவுவதால் நாம் பெறும் சந்தோஷம் ஈடு இணையற்றது. இந்தச் செயல் நம் மனதில் உள்ள இன்னல்களை களைய உதவும். ஆகவே உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் ஈடுபட விரும்பும் செயல்களை செயல்முறைப்படுத்தும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் சில மணி நேரங்கள் இணைந்து செயல் படுவதன் மூலம் மனப் பாரங்கள் குறையும்.

4. விருப்பமான செயலை பேரார்வத்துடன் மேற்கொள்ளுங்கள்

நீங்கள் செய்ய நினைத்த அல்லது கற்றுக் கொள்ள நினைத்த உங்களுக்கு பிடித்த செயல்களை மேற்கொள்ள இப்பொழுது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இது உங்களின் மனதை திசை திருப்ப உதவும்.

5. உடல் நலம் பேணுவது அவசியம்

மன நலம் போன்றே உடல் நலனும் மிக முக்கியம். குறித்த வேளைக்கு உணவு உட்கொள்ளுதல், தேவையான அளவு தூக்கம் இவை நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.இத்தகைய சூழல் மது அல்லது போதைக்கு அடிமையாகும் சந்தர்பத்தையும் உண்டு பண்ணும் என்று எச்சரிக்கும் Dr . மினி இதிலிருந்து தங்களை திசை திருப்பி கொள்ளுதல் மிக அவசியம் என்று வலியுறுத்துகிறார். இவற்றையெல்லாம் மீறியும் மன அழுத்தமோ, பதட்டமோ தென்பட்டால் தேர்ந்த மன உளவியலாளரை அணுகுவது நல்லது.
பெரியவர்கள் போன்றே சிறு குழந்தைகளும் இந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியக் கூட சந்தர்பம் இல்லாமல் வீட்டை விட்டு தண்ணிரில் மிதந்தோ அல்லது மீட்கப்பட்டோ உள்ள நிலையில், குழந்தைகளும் சொல்ல இயலாத நிலையில் இருப்பர்.

"பெற்றோர்கள் அவர்களிடம் நடந்த விபரீதத்தை பற்றியும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசுதல் அவசியம்" என்கிறார் மினி ராவ்.

1. வெளியே செல்ல அனுமதியுங்கள்

குழந்தைகள் வெளியில் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க வலியுறுத்த வேண்டும். இது அவர்களின் எண்ணங்களை திசை திருப்பவும் சீராக்கவும் உதவும்.

2. பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்

ஓவியம் வரைதல் போன்ற கலை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.

3. தனிமையில் இருக்க விடாதீர்கள்

குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவழிப்பதுடன் அவர்கள் தனியாக இல்லாமல் இருப்பதையும் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
"குழந்தைகளின் நினைவுகள் சீக்கிரம் மாறக்கூடியவை, ஆகவே அவர்களது சகஜ நிலைக்கு சீக்கிரமே திரும்பி விடுவர்" என்கிறார் மினி.


இந்த குறிப்புகளை கடை பிடிப்பது கடினமான செயல் தான் என்று கூறும் Dr . மினி ராவ் ஒவ்வொருவர் தன்மையை பொருத்து இதிலிருந்த மீள மாதங்கள் வேறுபடும் ஆனால் இவற்றை பின்பற்றினால் மீள்வது நிச்சயம் என்கிறார்.

Credits : Yourstory 

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...