Skip to main content

‪அவன்‬ ‪ஒரு‬ ‪‎கிராதகன்‬ 3.0

என் மனதை களவாடிய கள்வன் எனக்கு எதிரே , நான் சொன்ன அதே வெள்ளை நிற சட்டையில்
அவனின் கூரிய விழிகளால் என்னை கூச்சப்பட வைக்கிறான்.
எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் , அருகில் செல்லும் வாகன சத்தம் கூட வயலின் வாசிக்கிறது.
எண்ணெயில்லா தலையிலும் என் தலைவன் எடுப்பாக தான் இருக்கிறான்.
அதீத கருப்புக்குள் ஆவியை முக்கி எடுத்த நிறம்.
எனக்கு தெரிகிறது இன்னும் சிவக்காத அவன் இதழ்கள் , சிவந்த என் இதழ்களை தேடிக்கொண்டிருக்கிறது.
ஆன்மீகமே அறியா நாத்திகன் கையில் சிவப்பு கையிறு , அவன் அம்மாவின் ஆசைக்காக
அதுகூட அழகுதான்.
எவ்வளவு நாள் காத்துக்கிடந்தேன் உன்னைக்கான , என்னை கண்டதும் இப்படி பம்புகிறாயே கயவா ?
நெற்றியின் ஒரம் வியர்வை துளிகள் உன்னை தடவிக்கொண்டே செல்கிறதே ?
நான் கண்ட நொடி அவை அனைத்தும் மண்ணிற்குள் மடிகிறதே
கிராதகா , எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துக்கொண்டிருப்பாய்.
என் இதழ்கள் துடிக்குதடா உன்னுடன் பேச ,
என் உள்ளங்கை மருதானியும் கொஞ்சம் , ஏங்குதடா உன்னை தொட்டு பார்க்க ...
ஆத்திகியாய் இருக்கும் என்னை , நாத்திகியாய் மாற்றிவிடு , உன் இதழ் கொண்டு என் திருநீரை அழித்துவிடு.
"ஏன் சிரிக்கிறாய் என்று தெரியவில்லை , ஆனால் உன் சிரிப்பில் என் தேகம் சிலிர்குதடா.
உன் ஆண்மையின் கம்பீரம் இன்று ஒருநாள் என் முன் மடிந்துகிடக்கிறதே , நான் என்ன அவ்வளவு அழகா ?
சொல்லடா , கிராதகா
சரி , போகட்டும் நானே பேசுகிறேன் , என் இதழ்களுக்கும் பொருமை உண்டு.
"ஏன் , சிரிக்குற"
"உனக்கு , தெரியாதா"
"தெரிஞ்சுக்க தான , கேக்குறாங்க"
"ஏன் , இவ்வளவு அழகா இருக்க "
"ஓ , அதுக்குதான் சிரிக்கிறியா"
"அப்படி இல்ல , என்னன்னு தெரில உன்ன பாத்ததும் பேச்சு வரல "
"டேய் , நாம ஆல்ரெடி லவ் பண்றோம் டா , ஏதோ ப்ரபோஸ் பண்ண வந்த மாறி இப்படி வெட்க படுற"
"என்ன , எப்ப கல்யானம் பண்ணிப்ப" என்றான் வெட்கம் தவிழ
"டேய் லூசு , நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் , நீ என்ன சொல்லிட்டு இருக்க"
"சரி , என்ன பிடிச்சிருக்கா ?
" பிடிக்கலைன்னா , உன்ன விட்டுட்டு ஓடிருவேன்னு நினைச்சயா ?
"எனக்கு எப்பவுமே நீ மட்டும் தான்டா" என் செல்ல கிராதகா..
"சரி , எங்க போலாம் டீ"
"நான் எங்க வீட்டுக்கு போறேன் , வர்ரியா ?
" நான் ரெடி டீ , இவன் தான் , உங்க வருங்கால மாப்பிளைன்னு இன்ட்ரோ கொடுக்கிறையா ?
"ஆசை தான்"
அவன் விழிகள் என்னை ஏதோ செய்கிறது.என்னால் உணர முடிகிறது.
என்னை உன்னுடனே அழைத்து சென்றுவிடு என்றும் கூட சொல்ல துணிகிறது.
காதலுக்கென்று கட்டப்பட்ட அந்த ஐஸ்கிரீம் அறைக்குள் ,
என்னை முழுதும் களமாடிய கள்வனுக்கு எதிரே நான் மட்டும்.
கண்களில் காதல் செய்வதில் அவன் ஒரு கிராதகன் தான்.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...