Skip to main content

‪அவன்‬ ‪ஒரு‬ ‪‎கிராதகன்‬ 3.0

என் மனதை களவாடிய கள்வன் எனக்கு எதிரே , நான் சொன்ன அதே வெள்ளை நிற சட்டையில்
அவனின் கூரிய விழிகளால் என்னை கூச்சப்பட வைக்கிறான்.
எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் , அருகில் செல்லும் வாகன சத்தம் கூட வயலின் வாசிக்கிறது.
எண்ணெயில்லா தலையிலும் என் தலைவன் எடுப்பாக தான் இருக்கிறான்.
அதீத கருப்புக்குள் ஆவியை முக்கி எடுத்த நிறம்.
எனக்கு தெரிகிறது இன்னும் சிவக்காத அவன் இதழ்கள் , சிவந்த என் இதழ்களை தேடிக்கொண்டிருக்கிறது.
ஆன்மீகமே அறியா நாத்திகன் கையில் சிவப்பு கையிறு , அவன் அம்மாவின் ஆசைக்காக
அதுகூட அழகுதான்.
எவ்வளவு நாள் காத்துக்கிடந்தேன் உன்னைக்கான , என்னை கண்டதும் இப்படி பம்புகிறாயே கயவா ?
நெற்றியின் ஒரம் வியர்வை துளிகள் உன்னை தடவிக்கொண்டே செல்கிறதே ?
நான் கண்ட நொடி அவை அனைத்தும் மண்ணிற்குள் மடிகிறதே
கிராதகா , எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துக்கொண்டிருப்பாய்.
என் இதழ்கள் துடிக்குதடா உன்னுடன் பேச ,
என் உள்ளங்கை மருதானியும் கொஞ்சம் , ஏங்குதடா உன்னை தொட்டு பார்க்க ...
ஆத்திகியாய் இருக்கும் என்னை , நாத்திகியாய் மாற்றிவிடு , உன் இதழ் கொண்டு என் திருநீரை அழித்துவிடு.
"ஏன் சிரிக்கிறாய் என்று தெரியவில்லை , ஆனால் உன் சிரிப்பில் என் தேகம் சிலிர்குதடா.
உன் ஆண்மையின் கம்பீரம் இன்று ஒருநாள் என் முன் மடிந்துகிடக்கிறதே , நான் என்ன அவ்வளவு அழகா ?
சொல்லடா , கிராதகா
சரி , போகட்டும் நானே பேசுகிறேன் , என் இதழ்களுக்கும் பொருமை உண்டு.
"ஏன் , சிரிக்குற"
"உனக்கு , தெரியாதா"
"தெரிஞ்சுக்க தான , கேக்குறாங்க"
"ஏன் , இவ்வளவு அழகா இருக்க "
"ஓ , அதுக்குதான் சிரிக்கிறியா"
"அப்படி இல்ல , என்னன்னு தெரில உன்ன பாத்ததும் பேச்சு வரல "
"டேய் , நாம ஆல்ரெடி லவ் பண்றோம் டா , ஏதோ ப்ரபோஸ் பண்ண வந்த மாறி இப்படி வெட்க படுற"
"என்ன , எப்ப கல்யானம் பண்ணிப்ப" என்றான் வெட்கம் தவிழ
"டேய் லூசு , நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் , நீ என்ன சொல்லிட்டு இருக்க"
"சரி , என்ன பிடிச்சிருக்கா ?
" பிடிக்கலைன்னா , உன்ன விட்டுட்டு ஓடிருவேன்னு நினைச்சயா ?
"எனக்கு எப்பவுமே நீ மட்டும் தான்டா" என் செல்ல கிராதகா..
"சரி , எங்க போலாம் டீ"
"நான் எங்க வீட்டுக்கு போறேன் , வர்ரியா ?
" நான் ரெடி டீ , இவன் தான் , உங்க வருங்கால மாப்பிளைன்னு இன்ட்ரோ கொடுக்கிறையா ?
"ஆசை தான்"
அவன் விழிகள் என்னை ஏதோ செய்கிறது.என்னால் உணர முடிகிறது.
என்னை உன்னுடனே அழைத்து சென்றுவிடு என்றும் கூட சொல்ல துணிகிறது.
காதலுக்கென்று கட்டப்பட்ட அந்த ஐஸ்கிரீம் அறைக்குள் ,
என்னை முழுதும் களமாடிய கள்வனுக்கு எதிரே நான் மட்டும்.
கண்களில் காதல் செய்வதில் அவன் ஒரு கிராதகன் தான்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...