Skip to main content

‪அவள்‬ ‪‎ஒரு‬ ‪‎கிராதகி‬ 3.0

அதே சிவப்பு நிற சுடிதார் , சாலையின் ஓரம் , கொஞ்சம் பரபரப்போடு ,
நான் பார்த்துவிட்டேன் ,
பவளவிழா பதுமையை போல , அவள் விழிகளை கவசத்தால் மறைத்திருக்கிறாள்.
மாநிறத்திற்கு கொஞ்சம் நிமிர்ந்த நிறம்.
காதில் கடுகளவு ஒரு தோடு..
சாயம் பூசிராத இதழ்கள்..
அவள் நகங்களை சுவைத்து சுவைத்தே மிளிர்ந்து போன அவள் பற்கள்.
விரித்தாடும் உலகில் பின்னிய ஜடையில் அவள் கூந்தல்.
கிராதகி , அவள் கையிலிட்ட மருதானியை கூட சிவக்க வைத்திருக்கிறாள்.
ஆத்திகத்தின் ஆன்மீகத்தை அவள் நெற்றிக்கு நடுவே ஒட்டவைத்திருக்கிறாள்.
என்னவளின் கையை கட்டி அணைந்திருந்தது அவள் கட்டிய கடிகாரம்.
நான் பார்த்துவிட்டதால் என்னவோ, நிற்காமல் ஓடிகொண்டே இருக்கிறது அதே கடிகாரம்.
ஐயோ அவளை எப்படி வர்ணிப்பேன். வார்த்தைகளற்ற மூடனாயிற்றே நான்.
ஒரு வருடம் முகமில்லை என் காதலுக்கு.நான் வணங்காத இறைவன் இன்று தான் வரைந்திருக்கிறான் , அதுவும் அழகாக , மிக அழகாக.
இதற்கு மேல் காத்திருக்காது என் கால்கள் , அவளை பார்க்க வேண்டும்.
அருகில் இருந்தவாரே அவள் அழகை ரசிக்க வேண்டும்.ரசித்து கொண்டே ரசனையில் சுரக்க வேண்டும்.
படப்படத்த என் கைகள் அலைபேசியை தொடும் முன்னே..
என்னவளின் அழைப்பு , அவள் அழகை ரசித்து கொண்டே "ஹலோ , என்றேன்.
" எங்கடா இருக்க , வந்துட்டையா ?
"நான் அப்பவே வந்துட்டேன் , உன்ன தான் ரசிச்சுட்டு இருக்கேன்"
அங்கிங்கும் விழிகளை சுழற்றியவாரே "டேய் , ப்ராடு எங்கடா இருக்க ? சொல்லு டா
"கிராதகி , நீயே கண்டுபிடி டீ "
"டேய் சொல்லு டா ப்ளீஸ் , எங்கடா இருக்க "
"கிராதகி செம , அழகா இருக்க டீ "
"டேய் , லூசு எங்கதான்டா இருக்க , சொல்லி தொல டா "
"கண்டுபிடி டீ , என்ன காதலிச்ச கள்ளச்சி"
"இப்பவுமா என் அழக ரசிக்கிற , கொஞ்சம் அப்பிடியே , உன் பின்னாடி பாரு " என்றாள்.
பிரமித்த அவள் விழிகள் கவசத்தை கடந்து அவளின் கள்வனை கருவிழிக்குள் நகர்த்தி சென்றது.
அவளின் விழியை பார்த்த , இவன் விழிகள் அசையாமல் நின்றது.
நிச்சயம் , இவள் ஒரு கிராதகி தான் ஒற்றைப்பார்வையில் இப்படி கிரங்கடிக்கராலே என்று எண்ணியவாரே பார்த்து கொண்டிருந்தான்.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...