Skip to main content

‪அவள்‬ ‪‎ஒரு‬ ‪‎கிராதகி‬ 3.0

அதே சிவப்பு நிற சுடிதார் , சாலையின் ஓரம் , கொஞ்சம் பரபரப்போடு ,
நான் பார்த்துவிட்டேன் ,
பவளவிழா பதுமையை போல , அவள் விழிகளை கவசத்தால் மறைத்திருக்கிறாள்.
மாநிறத்திற்கு கொஞ்சம் நிமிர்ந்த நிறம்.
காதில் கடுகளவு ஒரு தோடு..
சாயம் பூசிராத இதழ்கள்..
அவள் நகங்களை சுவைத்து சுவைத்தே மிளிர்ந்து போன அவள் பற்கள்.
விரித்தாடும் உலகில் பின்னிய ஜடையில் அவள் கூந்தல்.
கிராதகி , அவள் கையிலிட்ட மருதானியை கூட சிவக்க வைத்திருக்கிறாள்.
ஆத்திகத்தின் ஆன்மீகத்தை அவள் நெற்றிக்கு நடுவே ஒட்டவைத்திருக்கிறாள்.
என்னவளின் கையை கட்டி அணைந்திருந்தது அவள் கட்டிய கடிகாரம்.
நான் பார்த்துவிட்டதால் என்னவோ, நிற்காமல் ஓடிகொண்டே இருக்கிறது அதே கடிகாரம்.
ஐயோ அவளை எப்படி வர்ணிப்பேன். வார்த்தைகளற்ற மூடனாயிற்றே நான்.
ஒரு வருடம் முகமில்லை என் காதலுக்கு.நான் வணங்காத இறைவன் இன்று தான் வரைந்திருக்கிறான் , அதுவும் அழகாக , மிக அழகாக.
இதற்கு மேல் காத்திருக்காது என் கால்கள் , அவளை பார்க்க வேண்டும்.
அருகில் இருந்தவாரே அவள் அழகை ரசிக்க வேண்டும்.ரசித்து கொண்டே ரசனையில் சுரக்க வேண்டும்.
படப்படத்த என் கைகள் அலைபேசியை தொடும் முன்னே..
என்னவளின் அழைப்பு , அவள் அழகை ரசித்து கொண்டே "ஹலோ , என்றேன்.
" எங்கடா இருக்க , வந்துட்டையா ?
"நான் அப்பவே வந்துட்டேன் , உன்ன தான் ரசிச்சுட்டு இருக்கேன்"
அங்கிங்கும் விழிகளை சுழற்றியவாரே "டேய் , ப்ராடு எங்கடா இருக்க ? சொல்லு டா
"கிராதகி , நீயே கண்டுபிடி டீ "
"டேய் சொல்லு டா ப்ளீஸ் , எங்கடா இருக்க "
"கிராதகி செம , அழகா இருக்க டீ "
"டேய் , லூசு எங்கதான்டா இருக்க , சொல்லி தொல டா "
"கண்டுபிடி டீ , என்ன காதலிச்ச கள்ளச்சி"
"இப்பவுமா என் அழக ரசிக்கிற , கொஞ்சம் அப்பிடியே , உன் பின்னாடி பாரு " என்றாள்.
பிரமித்த அவள் விழிகள் கவசத்தை கடந்து அவளின் கள்வனை கருவிழிக்குள் நகர்த்தி சென்றது.
அவளின் விழியை பார்த்த , இவன் விழிகள் அசையாமல் நின்றது.
நிச்சயம் , இவள் ஒரு கிராதகி தான் ஒற்றைப்பார்வையில் இப்படி கிரங்கடிக்கராலே என்று எண்ணியவாரே பார்த்து கொண்டிருந்தான்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...