Skip to main content

மூடர்களா நாம் ?

மூடர்களா நாம் ?
சென்னையின் வெள்ளத்திற்கு சேரிகள் தொடங்கி சேர்த்து வைத்த அனைத்தையும் இழந்த பலதரப்பட்ட மக்கள் அங்கிங்கும் இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது ஒருபுறம் இருக்க , தமிழக அரசு வெள்ள நிவாரண கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆங்காங்கே பல அரசு அதிகாரிகளை கணக்கெடுக்க அனுப்பியுள்ளது.
அவர்கள் எடுத்த கணக்குகளின் படி நிவாரணம் அளிப்பதும் , நிர்கதியாய் விடுவதும் அரசின் போக்கு.
ஆனால் , வெள்ள நிவாரணம் கணக்கெடுப்பு என்ற செய்தியை கேட்டதும் , வெள்ளத்தில் பாதிக்கப்படாத பல நல்ல உள்ளங்கள் தாமாக முன்வந்து வெள்ளத்தில் மொத்ததையும் இழந்தது போல் பாவனை செய்வதை தான் சற்றும் ஏற்று கொள்ளமுடியவில்லை.
உதாரனமாக , நான் வசிக்கும் இடத்தில் அவ்வளவு பாதிப்பு ஏற்படவில்லை. வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருந்த அந்த நான்கு நாட்களும் உணவுக்கு மட்டுமே தட்டுப்பாடு , மற்றபடி எந்த பொருட்களும் அடித்து செல்லபடவில்லை , உண்மையில் இங்கு வசிக்கும் அனைத்து சார்பினருக்கும் உடமைகள் அனைத்தும் சிறு கீரலின்றி வைத்தது வைத்த படி தான் இருந்தது.
இன்று எங்கள் பகுதியில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு , அதிகாலை முதலே ஆயத்தமாகிவிட்டனர் அவர்களின் நடிப்பை காட்டுவதற்கு , அவரவர் அவர்களின் தரத்திற்கு குறையாமல் உடமையை இழந்துவிட்டோம் , உயிரை பிடித்துவைத்துள்ளோம் என்று கூப்பாடு போட்டு தங்களின் உணர்வை எழுத்தாக அந்த அரசு அதிகாரியிடம் கூறினர்.
இதில் இடையிடையே பேச்சு வேறு , "சும்மா தர்ரத , வாங்க வலிக்காதூக்கும்" என்று
இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம் , இல்லை கிடைக்காமல் போகலாம். ஆனால் இது மாதிரி சென்னைவாசிகள் அனைவரும் செய்தால் , கணக்கெடுப்பு கணக்கெடுப்பு என்று சொல்லிக்கொண்டே காலம் கடந்து போகும்.
இல்லை , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது பகல் கனவாகவே மாறும்.
ஒன்று மட்டும் புரிகிறது , என் மக்கள் இன்னும் மாறவில்லை.
"சும்மா தர்ரத , வாங்க வலிக்குதா" என்ற வார்த்தையில் மலர்கிறது என் மக்களின் மூடத்தனம்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...