Skip to main content

மூடர்களா நாம் ?

மூடர்களா நாம் ?
சென்னையின் வெள்ளத்திற்கு சேரிகள் தொடங்கி சேர்த்து வைத்த அனைத்தையும் இழந்த பலதரப்பட்ட மக்கள் அங்கிங்கும் இன்னும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது ஒருபுறம் இருக்க , தமிழக அரசு வெள்ள நிவாரண கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆங்காங்கே பல அரசு அதிகாரிகளை கணக்கெடுக்க அனுப்பியுள்ளது.
அவர்கள் எடுத்த கணக்குகளின் படி நிவாரணம் அளிப்பதும் , நிர்கதியாய் விடுவதும் அரசின் போக்கு.
ஆனால் , வெள்ள நிவாரணம் கணக்கெடுப்பு என்ற செய்தியை கேட்டதும் , வெள்ளத்தில் பாதிக்கப்படாத பல நல்ல உள்ளங்கள் தாமாக முன்வந்து வெள்ளத்தில் மொத்ததையும் இழந்தது போல் பாவனை செய்வதை தான் சற்றும் ஏற்று கொள்ளமுடியவில்லை.
உதாரனமாக , நான் வசிக்கும் இடத்தில் அவ்வளவு பாதிப்பு ஏற்படவில்லை. வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருந்த அந்த நான்கு நாட்களும் உணவுக்கு மட்டுமே தட்டுப்பாடு , மற்றபடி எந்த பொருட்களும் அடித்து செல்லபடவில்லை , உண்மையில் இங்கு வசிக்கும் அனைத்து சார்பினருக்கும் உடமைகள் அனைத்தும் சிறு கீரலின்றி வைத்தது வைத்த படி தான் இருந்தது.
இன்று எங்கள் பகுதியில் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு , அதிகாலை முதலே ஆயத்தமாகிவிட்டனர் அவர்களின் நடிப்பை காட்டுவதற்கு , அவரவர் அவர்களின் தரத்திற்கு குறையாமல் உடமையை இழந்துவிட்டோம் , உயிரை பிடித்துவைத்துள்ளோம் என்று கூப்பாடு போட்டு தங்களின் உணர்வை எழுத்தாக அந்த அரசு அதிகாரியிடம் கூறினர்.
இதில் இடையிடையே பேச்சு வேறு , "சும்மா தர்ரத , வாங்க வலிக்காதூக்கும்" என்று
இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம் , இல்லை கிடைக்காமல் போகலாம். ஆனால் இது மாதிரி சென்னைவாசிகள் அனைவரும் செய்தால் , கணக்கெடுப்பு கணக்கெடுப்பு என்று சொல்லிக்கொண்டே காலம் கடந்து போகும்.
இல்லை , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது பகல் கனவாகவே மாறும்.
ஒன்று மட்டும் புரிகிறது , என் மக்கள் இன்னும் மாறவில்லை.
"சும்மா தர்ரத , வாங்க வலிக்குதா" என்ற வார்த்தையில் மலர்கிறது என் மக்களின் மூடத்தனம்.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...