Skip to main content

‪கிராமத்து‬ ‪‎அழகி‬

செமஸ்டர் லீவிற்காக என் வீட்டில் ஒருவார தஞ்சம்.
யார் எழுப்பினாலும் விழிக்காத என் விழிகள் விடுமுறை நாள் என்றாலே தானாக விழித்து கொள்கிறது.
"என்ன சாமி , அதுக்குள்ள எந்திருச்சுட்டையா ? , இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம்ல " என்ற அம்மாவின் குரல் சுப்ரபாதமாய் என் காதுகளை கிளறியது.
"இல்ல மா , தூக்கம் வரல , டீ இருக்கா ? "
"மூஞ்சிய கழுவீட்டு வா சாமி , சூடு பண்ணி வச்சிருக்கேன் "
"ஹம்ம் , என்றவாரே கலக்கத்தோடு மெல்ல நகர்ந்தேன்.
தண்ணீரே படாமல் முகத்தை கழுவும் வித்தையறிந்த சோம்பேறி நான்.அதேபோல் தான் இன்றும் , பட்டும்படாமல் சில நீர்த்துளிகளை இறைத்துவிட்டு உள்ளே நகர்ந்தேன்.
அம்மா ரெடியாக கையில் டீ யோடு நின்றுகொண்டிருந்தார்.
அதை லபக் என்று வாங்கும் போதே ஒரு குரல் " சூடா இருக்கு , பாத்து புடி சாமி " என்று.
"சரி மா , என்றவாரே டி.வி க்கு உயிர் கொடுத்தேன்.அது ஏனோ காலையிலேயே சங்கீதத்தில் பிதற்றிகொண்டிருந்தது.
வழக்கபோல் என் விரல்கள் ரீமோட்டில் கீபோர்ட் வாசிக்க , என் அம்மாவின் விரல்கள் வெங்காயம் அரிந்துகொண்டிருந்தது.
இதில் இடையிடையே என் கிராதகியின் நினைப்பு வேறு என் மனதை வாட்டுவது போல் நடித்து கொண்டிருந்தது.
கீபோர்ட் வாசிப்பில் திளைத்திருந்த என் விரல்கள் தீடிரென்று டி.வி திரையை பார்த்து நின்றது.
இரவு ஒளிப்பரப்பான அந்த நிகழ்ச்சி மீண்டும் காலையில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் தலைப்பு " ஏன் இக்கால பெண்கள் முகத்தில் ஏதோ கட்டிக்கொள்கிறார்கள்" இதெல்லாம் ஒரு தலைப்பாடா இதுக்கு இந்த பக்கம் நாலு பேர் , அந்த பக்கம் நாலு பேர் கருத்து சொல்ல வேற உட்காந்திருக்காங்க , என்று நினைத்து கொண்டே அதை மாற்ற துணிந்தேன்.
அதற்குள் என் அம்மாவின் குரல் " ஏன் சாமி , எதுக்கு பொட்டபுள்ளைக இப்படி முகத்த மூடிட்டு திரியுறாங்க ?"
"இல்ல மா , சிட்டிலைல எல்லாம் காத்துல ரொம்ப டஸ்ட் இருக்கும் , அதுநாள தான் பொண்ணுக மூஞ்சிய கட்டிப்பாங்க "
"ஆனா , எல்லா முகத்க மூடி பசங்களோட தா சுத்துதுக , டி.வி ல தான் காட்ரானே "
"அப்படியும் இருக்கும் மா"
"நீ சொல்ரமாறி பாத்தா இந்த புள்ளைக , அவங்க அப்பா,அம்மா கூட போறப்ப அப்படியா முகத்த கட்டிட்டு போகுதுக , என்னமோ போ , அந்த மகமாயி க்கு தான் வெளிச்சம்.
இதுக்கு நான் என்ன மா பதில் சொல்ல , உலகத்த சுத்தாமையே உலக அறிவு உனக்கு தான் மா இருக்குது.என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டு ,
"அத , விடு மா , ஏன்மா லவ் மேரேஜ் பத்தி என்ன நினைக்குற ?"
"அத தப்புன்னு சொல்லமாட்டேன் , ஆனா நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது சாமி " என்றவாரே நறுக்கிய வெங்காயத்துடன் உள்ளே சென்றாள்.
கிராமத்து அழகி தான் அவள் அன்பிலும் சரி , அறிவிலும் சரி
சாமி சாமி என்றழைத்தே அவள் முகத்தை தரிசிக்க வைக்கும் தாயான என் மகள்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...