Skip to main content

‪கிராமத்து‬ ‪‎அழகி‬

செமஸ்டர் லீவிற்காக என் வீட்டில் ஒருவார தஞ்சம்.
யார் எழுப்பினாலும் விழிக்காத என் விழிகள் விடுமுறை நாள் என்றாலே தானாக விழித்து கொள்கிறது.
"என்ன சாமி , அதுக்குள்ள எந்திருச்சுட்டையா ? , இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம்ல " என்ற அம்மாவின் குரல் சுப்ரபாதமாய் என் காதுகளை கிளறியது.
"இல்ல மா , தூக்கம் வரல , டீ இருக்கா ? "
"மூஞ்சிய கழுவீட்டு வா சாமி , சூடு பண்ணி வச்சிருக்கேன் "
"ஹம்ம் , என்றவாரே கலக்கத்தோடு மெல்ல நகர்ந்தேன்.
தண்ணீரே படாமல் முகத்தை கழுவும் வித்தையறிந்த சோம்பேறி நான்.அதேபோல் தான் இன்றும் , பட்டும்படாமல் சில நீர்த்துளிகளை இறைத்துவிட்டு உள்ளே நகர்ந்தேன்.
அம்மா ரெடியாக கையில் டீ யோடு நின்றுகொண்டிருந்தார்.
அதை லபக் என்று வாங்கும் போதே ஒரு குரல் " சூடா இருக்கு , பாத்து புடி சாமி " என்று.
"சரி மா , என்றவாரே டி.வி க்கு உயிர் கொடுத்தேன்.அது ஏனோ காலையிலேயே சங்கீதத்தில் பிதற்றிகொண்டிருந்தது.
வழக்கபோல் என் விரல்கள் ரீமோட்டில் கீபோர்ட் வாசிக்க , என் அம்மாவின் விரல்கள் வெங்காயம் அரிந்துகொண்டிருந்தது.
இதில் இடையிடையே என் கிராதகியின் நினைப்பு வேறு என் மனதை வாட்டுவது போல் நடித்து கொண்டிருந்தது.
கீபோர்ட் வாசிப்பில் திளைத்திருந்த என் விரல்கள் தீடிரென்று டி.வி திரையை பார்த்து நின்றது.
இரவு ஒளிப்பரப்பான அந்த நிகழ்ச்சி மீண்டும் காலையில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் தலைப்பு " ஏன் இக்கால பெண்கள் முகத்தில் ஏதோ கட்டிக்கொள்கிறார்கள்" இதெல்லாம் ஒரு தலைப்பாடா இதுக்கு இந்த பக்கம் நாலு பேர் , அந்த பக்கம் நாலு பேர் கருத்து சொல்ல வேற உட்காந்திருக்காங்க , என்று நினைத்து கொண்டே அதை மாற்ற துணிந்தேன்.
அதற்குள் என் அம்மாவின் குரல் " ஏன் சாமி , எதுக்கு பொட்டபுள்ளைக இப்படி முகத்த மூடிட்டு திரியுறாங்க ?"
"இல்ல மா , சிட்டிலைல எல்லாம் காத்துல ரொம்ப டஸ்ட் இருக்கும் , அதுநாள தான் பொண்ணுக மூஞ்சிய கட்டிப்பாங்க "
"ஆனா , எல்லா முகத்க மூடி பசங்களோட தா சுத்துதுக , டி.வி ல தான் காட்ரானே "
"அப்படியும் இருக்கும் மா"
"நீ சொல்ரமாறி பாத்தா இந்த புள்ளைக , அவங்க அப்பா,அம்மா கூட போறப்ப அப்படியா முகத்த கட்டிட்டு போகுதுக , என்னமோ போ , அந்த மகமாயி க்கு தான் வெளிச்சம்.
இதுக்கு நான் என்ன மா பதில் சொல்ல , உலகத்த சுத்தாமையே உலக அறிவு உனக்கு தான் மா இருக்குது.என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டு ,
"அத , விடு மா , ஏன்மா லவ் மேரேஜ் பத்தி என்ன நினைக்குற ?"
"அத தப்புன்னு சொல்லமாட்டேன் , ஆனா நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது சாமி " என்றவாரே நறுக்கிய வெங்காயத்துடன் உள்ளே சென்றாள்.
கிராமத்து அழகி தான் அவள் அன்பிலும் சரி , அறிவிலும் சரி
சாமி சாமி என்றழைத்தே அவள் முகத்தை தரிசிக்க வைக்கும் தாயான என் மகள்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப...