Skip to main content

‪கிராமத்து‬ ‪‎அழகி‬

செமஸ்டர் லீவிற்காக என் வீட்டில் ஒருவார தஞ்சம்.
யார் எழுப்பினாலும் விழிக்காத என் விழிகள் விடுமுறை நாள் என்றாலே தானாக விழித்து கொள்கிறது.
"என்ன சாமி , அதுக்குள்ள எந்திருச்சுட்டையா ? , இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம்ல " என்ற அம்மாவின் குரல் சுப்ரபாதமாய் என் காதுகளை கிளறியது.
"இல்ல மா , தூக்கம் வரல , டீ இருக்கா ? "
"மூஞ்சிய கழுவீட்டு வா சாமி , சூடு பண்ணி வச்சிருக்கேன் "
"ஹம்ம் , என்றவாரே கலக்கத்தோடு மெல்ல நகர்ந்தேன்.
தண்ணீரே படாமல் முகத்தை கழுவும் வித்தையறிந்த சோம்பேறி நான்.அதேபோல் தான் இன்றும் , பட்டும்படாமல் சில நீர்த்துளிகளை இறைத்துவிட்டு உள்ளே நகர்ந்தேன்.
அம்மா ரெடியாக கையில் டீ யோடு நின்றுகொண்டிருந்தார்.
அதை லபக் என்று வாங்கும் போதே ஒரு குரல் " சூடா இருக்கு , பாத்து புடி சாமி " என்று.
"சரி மா , என்றவாரே டி.வி க்கு உயிர் கொடுத்தேன்.அது ஏனோ காலையிலேயே சங்கீதத்தில் பிதற்றிகொண்டிருந்தது.
வழக்கபோல் என் விரல்கள் ரீமோட்டில் கீபோர்ட் வாசிக்க , என் அம்மாவின் விரல்கள் வெங்காயம் அரிந்துகொண்டிருந்தது.
இதில் இடையிடையே என் கிராதகியின் நினைப்பு வேறு என் மனதை வாட்டுவது போல் நடித்து கொண்டிருந்தது.
கீபோர்ட் வாசிப்பில் திளைத்திருந்த என் விரல்கள் தீடிரென்று டி.வி திரையை பார்த்து நின்றது.
இரவு ஒளிப்பரப்பான அந்த நிகழ்ச்சி மீண்டும் காலையில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் தலைப்பு " ஏன் இக்கால பெண்கள் முகத்தில் ஏதோ கட்டிக்கொள்கிறார்கள்" இதெல்லாம் ஒரு தலைப்பாடா இதுக்கு இந்த பக்கம் நாலு பேர் , அந்த பக்கம் நாலு பேர் கருத்து சொல்ல வேற உட்காந்திருக்காங்க , என்று நினைத்து கொண்டே அதை மாற்ற துணிந்தேன்.
அதற்குள் என் அம்மாவின் குரல் " ஏன் சாமி , எதுக்கு பொட்டபுள்ளைக இப்படி முகத்த மூடிட்டு திரியுறாங்க ?"
"இல்ல மா , சிட்டிலைல எல்லாம் காத்துல ரொம்ப டஸ்ட் இருக்கும் , அதுநாள தான் பொண்ணுக மூஞ்சிய கட்டிப்பாங்க "
"ஆனா , எல்லா முகத்க மூடி பசங்களோட தா சுத்துதுக , டி.வி ல தான் காட்ரானே "
"அப்படியும் இருக்கும் மா"
"நீ சொல்ரமாறி பாத்தா இந்த புள்ளைக , அவங்க அப்பா,அம்மா கூட போறப்ப அப்படியா முகத்த கட்டிட்டு போகுதுக , என்னமோ போ , அந்த மகமாயி க்கு தான் வெளிச்சம்.
இதுக்கு நான் என்ன மா பதில் சொல்ல , உலகத்த சுத்தாமையே உலக அறிவு உனக்கு தான் மா இருக்குது.என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டு ,
"அத , விடு மா , ஏன்மா லவ் மேரேஜ் பத்தி என்ன நினைக்குற ?"
"அத தப்புன்னு சொல்லமாட்டேன் , ஆனா நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது சாமி " என்றவாரே நறுக்கிய வெங்காயத்துடன் உள்ளே சென்றாள்.
கிராமத்து அழகி தான் அவள் அன்பிலும் சரி , அறிவிலும் சரி
சாமி சாமி என்றழைத்தே அவள் முகத்தை தரிசிக்க வைக்கும் தாயான என் மகள்.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...